Friday 14 February 2014



தெரிந்து கொள்வோம் - அல்உம்மா மற்றும் சிமி
...................................................................................
1993-ல் அல்உம்மா இயக்கம் எஸ்.ஏ.பாட்சா மற்றும் எம்.ஹெச்.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள உக்கடம் கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைத்து தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை ஆரம்பித்தது இந்த இயக்கம்.

அல்உம்மா இயக்க தலைவர் பாட்சா மர வியாபரம் செய்து வந்தவன். மேலும் பல முஸ்லிம் வியாபாரிகள் இந்த இயக்கத்திற்கு பண உதவி செய்தனர். ஆரம்பத்தில் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்க்காக என்று சொல்லி ஆரம்பிக்கபட்டாலும் பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதும், இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கட்ட பஞ்சாயத்து செய்வதும் தினசரி வேலையாக மாறிவிட்டது.

1996-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 15 அல் உம்மா இயக்கத்தினர் ஜனவரி மாதம் 1997-ல் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவுடன், மீன்டும் தங்களது பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முனைந்தார்கள் அதன் விளைவாகவே சில சம்பவங்கள் நடைபெற்றன.

அல்உம்மா இயக்கத்தினரால் 1996-ல் நடு நிலை வகித்த இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காகவே, சென்னையில் 30.7.96-ல் ஆசியா ஹோட்டல், 27.9.1996-ல் ஹோட்டல் இம்பீரியல், 25.10.1996-ல் லக்கி ஹோட்டல்கள் தாக்கப்பட்டன, இந்த தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்த இயக்கத்தினரால் 3.12.1997-ந் தேதி உடுமலை பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

மேலும் 6.12.1997-ந் தேதி அயோத்தி சம்பவத்தின் நினைவு தினத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டு வெடித்ததில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

29.8.1997-ல் மதுரை சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் சிறைசாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இதே சமயத்தில் காவல் துறை ஆய்வாளர் முரளி மீதான வெடி குண்டு தாக்குதலில் அதிர்ட்ஷவசமாக அவர் உயிர் தப்பினார்.

29.11.1997-ந் தேதி எவ்வித ஆவணங்கள் இல்லாமல் உக்கடம் பகுதியில்இரு சக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எவ்வித ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் தாங்கள் இஸ்லாமியர்கள் எங்களை விசாரிக்க கூடாது என ஆர்பாட்டங்கள் நடத்தி வெளியேறிய போது அருகில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

14.2.1998ந் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்குகொள்வதற்காக வருகை புரிந்த அத்வானி அவர்களை கொல்லும் விதமாக வெடி குண்டுகள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதல் என்பதும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் இந்த சம்பவம் மட்டுமே. 19 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்த்தின் காரணமாக 58 பேர்கள் இறந்தார்கள், 250க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். மேலும் 13 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

14.2.1998ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் சில தினங்களில் இஸ்லாமியர்களின் வன்முறை சம்பவங்களின் காரணமாக மேலும் 10 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

அல் அமீன் காலனியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போது, வீட்டில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்து நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. அல்உம்மா நிர்வாகிகள் உடனே தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டுமே மாறி இருக்கிறது. தமிழகத்தின் சிமி பொறுப்பாளராக இருந்து ஜவஹருல்லா இன்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவன் ஆகி விட்டார். 


நன்றி-https://www.facebook.com/hindumunnani.rameswaram

0 comments:

Post a Comment