Monday 10 February 2014


பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மின் மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment