Friday 16 May 2014


பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 2,13,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,

ஆர்.பி. மருதராஜா (அதிமுக) - 4,62,693, 

 சீமானர் ச. பிரபு (தி.மு.க) - 2,49,645,

பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே) - 2,38,887, 

மா. ராஜசேகரன்- (காங்கிரஸ்) - 31,998,

வி.எம். செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) - 2,924,

கி. ராமர்யாதவ் (தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) -6,324,

பெ. தமிழ்செல்வன் (யுனைடெட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா) - 1,509,
ரா. அப்துல்ரகுமான் (சுயேச்சை) -1,018, கி. சிவபெருமாள் (சுயேச்சை) -986
சின்ன. ராஜேந்திரன் (சுயேச்சை) -877, த. சுப்பிரமணி (சுயேச்சை) -1,201, க அன்பில் தங்கமணி (சுயேச்சை) -1,636, என். பச்சமுத்து (சுயேச்சை) -2,762, ச. பிரபு (சுயேச்சை) -2,211, பி. மணி (சுயேச்சை) -1,302, பி. மருதராஜ் (சுயேச்சை) -3,940 த. ராஜசேகர் (சுயேச்சை) -1,490, மு. ரெங்கராஜ் (சுயேச்சை) -633, பெ. வடிவேலு (சுயேச்சை) -1,821, விஸ்வநாதன் (சுயேச்சை) -2,369, அ. வேலாயுதம் (சுயேச்சை) -2,995 வாக்குகள் பெற்றனர். நோட்டாவை - 11,605 பேர் பயன்படுத்தினர். 840 வாக்குகள் தள்ளுபடியானது.
இறுதியாக, தபால் வாக்குகள் உள்பட 10,31,666 வாக்குகள் பதிவானதில், அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா 4,62,693 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம், திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபுவை விட 2,13,048 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபு 2,49,645 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், ஐஜேகே வேட்பாளரான பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து 2,38,887 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றார் v.kalathur  seithi .

-தினமணி.

0 comments:

Post a Comment