Monday 12 May 2014


புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாத தேர்தல் பணிகள் மற்றும் ஓட்டுப்பதிவு இன்று மாலையுடன் முடிந்தது. இதனையடுத்து டைம்ஸ்நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐ.பி.என்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர் தங்களின் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டனர். இதில் மத்தியில் பா.ஜ., தலைமையில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது. இதன்படி 272 க்கும் மேல் 11 தொகுதிகள் கூடுதல் பெறும் என்றும் கூறியுள்ளது.சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. டைம்ஸ்நவ் தொலைக்காட்சி, பா.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்., கூட்டணிக்கு 148 தொகுதிகளும், என்.டி,வி., தொலைக்காட்சியில் தே.ஜ.,வுக்கு 283 தொகுதிகளும், காங்., கூட்டணிக்கு 99 சீட்களும் கிடைக்கும் என கூறியுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடும் உரிமை இன்று மாலை 6 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதனை தொடர்ந்து 5 மணி முதலே டைம்ஸ்நவ் மற்றும் ஐ.பி.என்.லைவ் தொலைக்காட்சிகள் 2014 ல் நடந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தது ? இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், யார் ஆட்சி அமைப்பார்கள்? மாநில வாரியாக பதிவான ஓட்டுக்கள் சதவீதம் ஆகியன குறித்து அலசி விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாநிலம் வாரியாக கட்சிகளுக்கு கிடைக்கும் வெற்றி வாய்ப்பு தொகுதிகள் எவை ? எவை என மக்களிடம் திரட்டிய கருத்துக்கணிப்பின் படி கண்டறியப்பட்டது. இதன் படி பா.ஜ.,வுக்கு பல்வேறு மாநிலங்களில் அமோக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலை விட பா.ஜ.,வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி 1 முதல் 3 தொகுதிககள் கிடைக்கும் என தெரிகிறது.

பஞ்சாப் அரியானாவில் காங்கிரஸ் ஓட்டுக்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு 51 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்து. அரியானாவில் பா.ஜ.,வுக்கு 38 சதவீதமும், காங்கிரசுக்கு 24 சதவீதமும் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. டில்லியில் பா.ஜ.,வுக்கு 5 முதல் 7 தொகுதிகளும், ஆம்ஆத்மிக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் . டைம்ஸ் நவ் டி.வி.,யில் பீகாரில் பா.ஜ.,வுக்கு 15 தொகுதிகள் கிடைக்கும்.

சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பில்; மணிப்பூர் பஞ்சாப், அரியானா, இமாச்சல்பிரதேசம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., செல்வாக்கு உயர்ந்துள்ளது.டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம்ஆத்மி;2 கிடைக்கும் என கூறியுள்ளது.

என்டபிள்யுஎஸ்-சி வோட்டர்: என்டபிள்யுஎஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க., 27 தொகுதிகளிலும், தி.மு.க., 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் - மேற்குவங்கம்: சி.என்.என். ஐ.பி.என்.லைவ் தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 சீட்களில் 25 முதல் 31 தொகுதிகள் வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகள் கட்சிக்கு 7 முதல் 11 சீட்டுகளும் , கிடைக்கும் . அ.தி.மு.க., 22 முதல் 28, தொகுதிகளும், தி.மு.க,7 முதல் 7 முதல் -11 தொகுதிகளும் , காங்கிரசுக்கு- 0 கிடைக்கும் என கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே: அ,தி.மு.க., -24 , தி.மு.க,. 14 கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு -5 முதல் 6 காங்.,-1

டைம்ஸ் நவ் டி.வி.,: டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம்ஆத்மி;2 கிடைக்கும். அ.தி.மு.க., 31, தி.மு.க.,- 7 காங்.,1, பா.ஜ.,0


உத்திரபிரதேசம்: ஐ.பி.என்.,லைவ் கருத்துக்கணிப்பில், உ. பி.,மாநிலத்தில் பா.ஜ., கூட்டணிக்கு 45 முதல் 53 தொகுதிகளும், சமாஜ்வாடி கட்சிக்கு 13 முதல் 17 தொகுதிகளும், பகுஜன்சமாஜ்கட்சிக்கு 10 முதல் 14 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு, 3 முதல் 5 தொகுதிகளும் கிடைக்கும்.

டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில், உ பி. ,மாநிலத்தில் பா.ஜ., வுக்கு 52 தொகுதிகளும் , காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் கிடைக்கும். மகாராஷ்ட்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகளும் , டைம்ஸ்நவ் தொலைக்காட்சி நாடு முழுவதும் பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 148 தொகுதிகளும் ஏனைய கட்சிக்கு 146 தொகுதிகளும் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா, சீமந்திரா பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக் கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்த தெலுங்கானா, பகுதியில் ,தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி ( சந்திரசேகர ராவ் ) கட்சிக்கு 8 முதல் 12 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 2 முதல் 4 தொகுதிகளும் கிடைக்கும்.

சீமந்திரா பகுதியில், பா.ஜ.,வுக்கு 11 முதல் 15 தொகுதிகளும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு 11 முதல 15 தொகுதிகளும் கிடைக்கும்.

ஆஜ்தத் தொலைக்காட்சி கணிப்பில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 261 முதல் 283 தொகுதிகளும், காங்கிரசுக்கு 110 முதல் 120 தொகுதிகளும் ஏனைய கட்சிகளுக்கு 150 முதல் 162 தொகுதிகளும் கிடைக்கும்.

சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பா.ஜ, தனிப்பட்ட முறையில், 230 முதல் 242 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 102 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 72 முதல் 82 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

மிஷன் 272 இலக்கு என மோடி நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக தீவிர பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்டங்களில் மக்கள் வெள்ளமென கூடுவதை காண முடிந்தது. இந்த பிரசாரம் அவருக்கு பெரும் ஆதரவாக அமைந்தது.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment