Wednesday 9 July 2014


பாஜக தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் புதன்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமையில் புறநகர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் டி. பாஸ்கர், அமைப்பு செயலர் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் கண்ணன், வாசுதேவன், நகரத் தலைவர் குரு. ராஜேஷ், ஒன்றியத் தலைவர்கள் தனபால், சீனிவாசன், ஈஸ்வர் ஆர். மணி, எஸ். மணி, கலைச்செல்வன், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலர் பி.எல். அடைக்கலராஜ், முத்துக்குமார், ராஜாராம், ஆளவந்தார், சுரேஷ், சதீஸ், ஸ்ரீராம் முத்தையா, கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-தினமணி.

0 comments:

Post a Comment