Friday 18 April 2014

காவிரி ஆறு ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாட்டில் நுழைகிறது... ஒகேனக்கல் - அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் படி ஒகேனக்கல் முதல் மேட்டூர் அனைக்கட்டுவரை காவிரி ஆற்றின் வடகரையில் கான்கிரிட் சுவர் எழுப்பி 15௦௦௦ கான அடி வெள்ளநீரை கொண்டுவந்து மேட்டூர் அணையில் மின்சாரம் தயாரிக்கமுடியும். இதற்கென 1௦௦௦௦ கன அடிநீர் செலவாகும்.

மீதமுள்ள 5௦௦௦ கன அடி நீரை மேட்டூர் அருகில் கால்வாய் வெட்டி குஞ்சாண்டியூர், ஜலகண்டபுரம், எடப்பாடி, சின்னப்பம்பட்டி, வைகுந்தம் வழியாக மகுடஞ்சாவடியில் சரபங்கா உப நதியில் கொண்டுவந்து இணைக்கப்படும்.

சரபங்கா நதியிலிருந்து மோர்ப்பாலயம், ஆட்டையாம்பட்டி,காளிப்பட்டி, வெண்கலம் மற்றும் முன்றடைப்பு வழியாக கால்வாய் அமைத்து சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாவை பொறியியல் கல்லூரியின் மேற்கே திருமலைப்பட்டிற்கு கொண்டு சென்று ஐயாற்றில் இணைக்கப்படும்.

ஒகேனக்கல் அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் மூலம் திருச்சி- பெரம்பலூர் மாவட்ட வட பகுதிகளும், கொல்லிமலைக்கு தெற்கே உள்ள பகுதிகளும் பயனடையும்... குறிப்பாக தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி ஒன்றியங்களின் ஏரி மற்றும் குளங்கள் இத்திட்டத்தின்மூலம் நிரம்புவதோடு, ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்யும் இப்பகுதி மக்களுக்கு நிலத்தடிநீர் மட்டம் உயர வழிவகுக்கும்.

பா.ஜ.க வின் தேத்தல் அறிக்கையிலேயே நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் என்ற பச்சமுதுவால் ஒகேனக்கல்-அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டம் நிறைவேற்றமுடியாத ஒன்றல்ல... பெரம்பலூர் மக்களவை தொகுதி மக்களாகிய நாம் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய தருணம் இது...

 
IJK வின் தேர்தல் அறிக்கை

0 comments:

Post a Comment