Sunday 4 May 2014


பெரம்பலூர், : வாக்கு எண்ணும் பணிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 15 டேபிள்கள் என 6 தொகுதிக்கு 90டேபிள்கள். 18சுற்றுகளில் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232 வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள், முசிறி தொகுதியில் 244வாக்குச்சாவடிகள், துறையூர் தொகுதியில் 247வாக்குச்சாவடிகள், பெரம்பலூர் தொகுதியில் 297வாக்குச்சாவடிகள் என நாடாளுமன்ற தொகுதி அளவில் 1,518வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 6,33,416 ஆண் வாக்காளர்கள், 650,827 பெண் வாக்காளர்கள், 26திருநங்கைகள் எனமொத்தம் 12,84,269 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் குளித்தலை தொகுதியில் 1,70,170 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 1,55,225 வாக்குகளும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 1,69,567 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,64,348 வாக்குகளும், துறையூர் தொகுதியில் 1,58,086 வாக்குகளும், பெரம்பலூர் தொகுதியில் 2,10,291வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதன்படி 6சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,98,647 ஆண் வாக்காளர்கள், 5,29,022 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் எனமொத்தம் 10,27,687வாக்காளர்கள் கடந்த 24ம்தேதி நடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதன்படி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.02 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய 3சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனையொட்டியுள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பத்திரமாக வைத்து பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 16ம்தேதி வாக்கு எண் ணும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் நடந்து வருகிறது.
இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 15 டேபிள்கள் என 6தொகுதிகளுக்கும் 90டேபிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 84 டேபிள்கள் வாக்கு எண்ணுவதற்கும், 6டேபிள்கள் 6உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு நுண்பார்வை யாளர் எனப்படும் மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கவுண்டிங் சூப்பர்வைஸர், ஒரு அசிஸ்டெண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு 6தொகுதிகளிலுள்ள 1518 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84டேபிள்களில் வைத்து 18 சுற்றுகளில் எண்ணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது v.kalathur seithi .

0 comments:

Post a Comment