Sunday 4 May 2014


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014லி2015லிஆம் கல்வியாண்டுக்கான பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே 9லிஆம் தேதி முதலும், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர மே 12லிஆம் தேதி முதலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை மே 31லிஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2லிஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.800. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.400 ஆகும்.
விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழக கேஷ் கவுன்ட்டர் மற்றும் அனைத்து தொலைதூரக் கல்வி மைய படிப்பு மையங்களிலும் கிடைக்கும். பி.இ மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தனி, தனி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் பொதுப் பிரிவினர் ரூ.850லிம் (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.450லிம் ( ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்லி608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் v.kalathur seithi .

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment