சவுதி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், Ôதொழிலாளர் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்தனர். அவர்களில் 2.5 லட்சம் பேரை வெளியேற்றி இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சவுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏமன் வழியாக சவுதிக்குள் ஊடுருவியவர்கள் என்று தெரிய வந்ததால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
சவுதியில் 90 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி-தினகரன்.
RSS Feed
Twitter
Thursday, January 23, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment