Saturday 25 January 2014


சென்னை : லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,
பிரவீண்குமார் தெரிவித்தார்.

நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதேபோல், பணம் கொடுப்போர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் கொடுத்ததாக, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது;தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது. 

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment