Tuesday 8 April 2014

மணிரத்னம்.

சிதம்பரம் மக்களவை தேர்தலைப் பொருத்த அளவில் போட்டி என்பது முன்று லட்ச்சத்துக்கும் மேற்பட்ட வன்னிய ஒட்டு வங்கியைக் கொண்ட பா.ம.க விற்கும், தி.மு.க கூட்டணியின் பலத்தோடு சுயேட்ச்சையாக போட்டியிடும் திருமாவளவனுக்கும் இடையேதான் போட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்.இங்கு அ.தி.மு.க பெரிய அளவில் இங்கு போட்டியில் இல்லை, என்பதோடு அதன் வேட்பாளர் ஒரு டம்மி பீசு என்பது #ஆத்தாவுக்கே தெரியும்.

பா.ம.க வெறியுடன் களத்தில் இறங்கி வேலைபார்க்கும் தொகுதியில் தர்மபுரிக்கு அடுத்து இந்த தொகுதிதான். திருமாவளவனை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பது பா.ம.க வின் நோக்கம். அதனால்தான் தனது பழைய வேட்பாளரை மாற்றிவிட்டு காங்கிரசு சீட்டு கொடுக்கவில்லை என்பதால் கட்சியைவிட்டு வெளியேறிய மணிரத்னத்திற்கு க்கு சீட்டு கொடுத்தது. அவர் பெரிய தொழிலதிபர் என்பதால் விட்டமின் "ப" வுக்கு பஞ்சம் இருக்காது என்பதுதான் காரணம்.

இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் பா.ம.க வை ஓரம்கட்டிவிட்டால் போட்டிஎன்பது அ.தி.மு.க விற்கும் திருமாவளவனுக்கும் போட்டி என்ற நிலை ஏற்படும் என்பது #ஆத்தாவின் கணக்கு. ப.ம.க வேட்பாளர் தாக்கல் செய்த நான்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட காரணமும் , மாற்றுவேட்ப்பாலரான அவரின் மனைவி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் கூட்டி கழித்துபார்த்தால் #ஆத்தா எந்த அளவு விளையாடியிருக்கிறது என்பது புரியும்.

மாவட்ட ஆட்சியர் சரவணவேல் ராஜன்


வேட்புமனு நிராகரிக்க அரியலூர் மாவட்ட அடிமை கூறும் காரணம் பா.ம.க அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் பத்துபேர் முன்மொழிய வேண்டும், ஆனால் ஒருவர் மட்டுமே முன்மொழிந்தல்தால் நிராகரிக்கப்படுகிறது என்பதுதான். அவரின் மனைவி தாக்கல் செய்த மனுக்களில் ஒன்றும் இதே காரணத்தினால் நிராகரிக்கப்பட்டாலும் மற்றொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து மாற்று வேட்பாளரான அவரின் மனைவியின் ஒரு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு மற்றொரு மனு ஏற்கபபட்டிருப்பதிலிருந்து மாவட்ட அடிமையின் திருட்டு வேலை அம்பலத்துக்கு வருகிறது. ப.ம.க வேட்பாளர் மனைவியின் ஒரு வேட்ப்புமனுவுக்கு பத்து பேரும் மற்றொரு மனுவுக்கு ஒருவரும் முன்மொளிந்திருப்பார்கள் என்பதை எப்படி நாம் நம்பமுடியும்.

இங்குதான் #ஆத்தாவின் சூப்பர் திட்டம் அடங்கியிருக்கிறது. பா.ம.க வின் இரண்டு பேரின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமாயின் இங்கு போட்டி என்பது அ.தி.மு.க விற்கும் திருமாவளவனுக்கும் என்று மாறியிருக்கும். ஆனால் மூன்று லட்சம் வன்னிய மக்களின் ஒட்டு கனவிலும் கூட ஆத்தாவிற்கு கிடைக்காது என்பது அவருக்கே தெரியும். இந்த ஒட்டு திமுக கூட்டணி வேட்பாளரான திருமாவளவனுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு.

மாற்று வேட்பாளருக்கு பா.ம.க வின் சின்னமான மாம்பழம் ஒதுகப்படுமா என்பது தேர்தல் கமிசனின் கருனையப்பொருத்து அமையும்போது பா.ம.க தேர்தல் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.மேலும் கூட்டணிக்கட்சிகளிடையேயும் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சுணக்கத்தை பயன்படுத்தி அ.தி.மு.க வேட்ப்பாளரை வெற்றிபெற செய்ய முயற்சிக்கலாம் என்பதே #ஆத்தாவின் ஆசை.

எது எப்படியோ... #ஆத்தாவுக்கு வாய்த்த மாவட்ட ஆட்சி..... இல்லை அடிமைகள் கூன்பாண்டிகளைவிட நன்றாகவே வேலைசெய்கிறார்கள்.

0 comments:

Post a Comment