Sunday 6 April 2014

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பாரிவேந்தர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை  பெரம்பலூர் தொகுதி இளைஞர்களை குறிவைத்து அவர்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்..
          கல்விக்கடன் வட்டியில்லாமலும் அதனை வேலை கிடைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே கட்டவேண்டும் என்று ஆரம்பிக்கும் தேர்தல் அறிக்கை , பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற பகுதிகளிலும் தலைசிறந்த நூலகங்கள் அமைக்கப்படும் என்பதோடு  கல்வியில் பின்தங்கிய பெரம்பலூர் மக்களவை தொகுதியில் சர்வதேச பள்ளிகள் (International School) நிறுவப்படும் என்று சூடுபிடிக்கிறது.

        மாணவர்களின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு சட்டமன்ற பகுதிகளுக்கும் ஒரு மாணவர் பிரதிநிதி (Student Representative) ஒருவர் நியமனம் செய்யப்படுவார், அவர்மூலம் மாணவர்கள் குறை களையப்படும், அப்படியும் தீரவில்லைஎன்றால் "உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தியுங்கள்" என்ற சிறப்பு குறை தீர்கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை   நடைபெறும் அதில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து நிவர்த்திபெறலாம்.

    பெரம்பலூர்தொகுதிக்குஉட்பட்டபகுதி மக்களுக்குநீண்ட நாள் கனவாக இருந்து வருவது பொழுதுபோக்கு மற்றும் மாலை நேரங்களில் இளைப்பாறுவதற்கு கூட ஒரு தரமான பூங்காவோ.. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்காவோஇல்லை என்பதுதான். மேலும்மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த சிறந்த விளையாட்டு திடல் கட்டமைப்போ நீச்சல் குளமோ இல்லை. இக்குறையை களைய சர்வதேச தரத்திலான உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம் , தடகள போட்டி மைதானம் மற்றும் சிறந்த பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்க இந்த தேர்தல் அறிக்கை உறுதிகூறுகிறது..

       நமது மாவட்டத்திற்கு மாணவர் மற்றும் இளைஞர்களின் நலனில் அக்கறைகாட்டும் வேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்பதை இனி நாம் தான் முடிவு செய்யவேண்டும்.........


     

0 comments:

Post a Comment