Thursday 10 April 2014

மோடி இன்றளவும் பெருமையாக அணியும் RSS ன் தொப்பி.
சிறுவயது திருமணம் என்பது சென்றநூற்றாண்டு வரை இந்திய மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஊறிப்போன விஷயம அதிலும் வடஇந்திய குடும்பங்களில் இன்றளவும் கூட இளவயது திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.

இந்திய அரசு சிறார்கள் என வரிசைப்படுத்தியுள்ள 17 வயதில்தான் ஜசொதா பெண் என்ற சிறுமியை அவரது பெற்றோர்கள் மோடிக்கு மணமுடித்து வைக்கின்றனர். சிறார்கள் திருமணத்தில் மனம் முடிந்தபின் அவரவர் பெற்றோர்களுடன் மனம்முதிர்ச்சி அடையும் வரை மணமக்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். பெற்றோர் பராமரிப்பில் இருக்கும் இவர்கள் பிறகு ஒரு நல்லநாளில் சேர்துவைக்கப்படுவார்கள். இந்த சிறார்திருமான நடைமுறைதான் நம் தேசத்தந்தை என அழைக்கப்படும் காந்தி அவர்களின் வாழ்விலும் நடைபெற்றது என்பது காந்தியின் வாழ்கையை அறிந்தவர்கள் அறிவார்கள்.

திருமணம் முடித்த மோடி தனது பெற்றோருடன் வசித்துவருகையில் இத்ந்துதுவ சித்தனை கொண்ட அவருக்கு RSS அறிமுகமாகிறது. அந்த இயக்கத்தில் இணைந்து முழுமூச்சுடன் பணிபுரிந்துவந்தார். ஒருகட்டத்தில் RSS ன் முழு நேர ஊழியராக பணியாற்ற மனதளவில் தயாராகிறார். RSS ன் முழு நேர ஊழியர்களுக்கென சில கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு...

"திருமணம் செய்துகொள்ளகூடாது, குடும்பத்திலிருந்து வெளியேறி RSS அமைப்பு பணிக்கும் எந்த பணியாக இருந்தாலும், அந்த இடம் எங்கு இருந்தாலும் செல்லவேண்டும்.முழுநேர ஊழியர்களுக்கென ஒரு சிறுதொகையை அதாவது இந்திய அரசு இன்று கூறும் வறுமைகோட்டு வருமான அளவு தொகையை RSS அமைப்பானது அவர்களுக்கு வாழ்கைப்படியாக கொடுக்கும்.இந்த சிறுதொகையைக்கொண்டு நான்கு நாட்கள் வேண்டுமானால் தாராளமாக சாப்பிடலாம்.

அதனால்தான் RSSன் முழுநேர ஊழியர்கள் சந்யாசிபோல பணிநிமித்தம் எங்கு செல்கிறார்களோ அங்குஉள்ள RSS அனுதாபிகள் வீடுகளில் தான் தங்குவார்கள், அவர்கள் வீடுகளில்தான் சாப்பாடு. ஒருநாள் மாளிகையில், மறுநாள் குடிசையில் , எதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு கோவில் குளத்தில்தான் தூக்கம்.பலவேளைகளில் தண்ணீர்தான் சாப்பாடு. தனது பெற்றோர்களைகூட காண நேரம் மற்றும் அனுமதி கிடைப்பது அரிது. இது கதையல்ல RSS பற்றி அறிந்தவர்களுக்கு இது உண்மை என்று தெரியும்.

RSS ன் முழுநேர ஊழியர்களாக பணியாற்றிய வாஜ்பாய், இந்துமுன்னணி ராமகோபாலன், ப.ஜ.க L.கணேசன் போன்றோர் திருமணம் செய்யா காரணம் அவர்கள் நீண்ட நெடுங்காலம் RSS ன் முழுநேர ஊழியர்களாக பணியாற்றியதுதான். அத்வானி சிலவருடம் சென்னையில் RSS முழுநேர ஊழியராக பட்டாளம் பகுதியில் பணியாற்றியிருக்கிறார் என்பது வரலாறு. RSS ல் இருக்கும்வரை சந்நியாசி போல்தான் வாழ்கை நடத்தவேண்டும் என்பது அதன் விதி."

இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மோடி தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு குடும்பம் என்பது பாரதமாதாவின் குடும்பம் என்று ஆனது. ஒரு சந்யாசிபோல் RSS எங்கு பணிசெய்யுமாறு கட்டளையிடுகிறதோ அதனை செவ்வனே நிறைவேற்றினார்.

பலவேளைகளில் RSS அமைப்பின் முழு நேர ஊழியர்கள், சங்க பாரிவாரங்களின் ஏதாவது ஒரு அமைப்புக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அந்தவழி மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் இந்து முன்னணி அமைக்க ராமகோபாலன் அனுப்படுகிறார். அப்படி BJP அனுபிவைக்கப்பட்டவர்களே வாஜ்பாயி, மோடி போன்றோர்.

அன்று தொடங்கிய மோடியின் நாட்டுப்பணி இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது.வாஜ்பாய் முதல் மோடி வரை தங்களது திறமைக்கு க்கு முழுமுதல் காரணம் RSSதான் என பலவேளைகளில் கூற காரணம் அவர்கள் RSS முழுநேரமாக பணியாற்றிய அனுபவம்தான்.

சரி விஷயத்து வருவோம்.. அன்று சிறார்திருமணம் செய்த மோடி RSS ன் முழு நேர ஊழியராக ஆன பிறகு அவருக்கு திருமணம் குழந்தை குட்டி என்பதெல்லாம் அர்த்தமற்றுப்போய்விடுகிறது. பாரதமாதாவின் தாழ்பணியே கடமையாகிறது. இந்த நிலையில் மோடி திருமணம் என்பது வாக்கு அரசியலுக்காக மெல்லப்படும் விஷயமாக ஆகிப்பனதுதான் மிச்சம.

இப்பொழுது சொல்லுங்கள் மோடி திருமணம் ஆனவர்தானே...?

0 comments:

Post a Comment