Saturday 12 April 2014

வரதராஜன்.
ஹேன்ஸ் ரோவர் டயாலிஸஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்குவதற்கான தொடக்க விழா பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் பேசியது:
தூய யோவான் சங்க அறக்கட்டளை, ஆல்டிரின் ரினல் கேர் நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதற்கான முதல் டயாலிஸஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த செலவில், லாப நோக்கமின்றி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் தொடங்கப்பட்ட முதல் டயாலிஸஸ் மையமாகும். தூய யோவான் சங்க அறக்கட்டளையின் ஹேன்ஸ் ரோவர் ஹெர்பல் மருந்தகம் மூலிகை வைத்தியர் சீ. பால்ராஜ் கண்டுபிடித்துள்ள உடற்தேய்வு நோய்க்கான ஹெர்பல் மருந்தான ரோவர் வைரல் நில் என்ற மருந்தை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இந்த மருந்தை உட்கொண்டு, அந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைந்துள்ளனர் என்றார்.

நன்றி-தினமணி.

1 comment: