Wednesday 11 June 2014


ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆஜீவிகா திறன் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி
நிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.  ஆஜீவிகா திறன் விதிமுறைகள் 2013-ன் படி தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நிரந்தர பதிவு எண் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.  இந்திய அறக்கட்டளைச் சட்டம் அல்லது மாநிலச் சங்கங்கள் பதிவுச் சட்டம் அல்லது மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் சட்டம் 1956ன் கீழ் பதிவு பெற்ற
ஒரு அமைப்பாக இருக்க வேண்டும்.
மாவட்ட, மாநில அளவிலான அரசு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள். விண்ணப்பிக்கும் பயிற்சி பாடத்திட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவமுள்ள நிறுவனமாக இருக்க வேண்டும். பயிற்சி நிறைவடைந்த பின்  80 சத பயிற்சியாளர்களுக்கும், ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.  சமூக அக்கறை கொண்ட நிறுவனமாகவும், போதுமான உள்கட்டமைப்பு, பயிற்றுநர்கள், பயிற்சிக் கூடம், உபகரணங்கள் கொண்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.
விவரங்களுக்கு, பயிற்சி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி நிறுவனங்களாக பதிவு செய்ய
 http:aajeevikaskills.com இணையத்தில் உரிய விவரங்களுடன் ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் v.kalathur seithi .

-தினமணி.

0 comments:

Post a Comment