Monday 9 June 2014


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 11-ம் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் குரும்பலூர் (தெ), குரும்பலூர் (வ), மேலப்புலியூர் (கி), மேலப்புலியூர் (மே), லாடபுரம் (மே), லாடபுரம் (கி), அம்மாப்பாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உடும்பியம், பூலாம்பாடி (கி), பூலாம்பாடி (மே), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மே), தொண்டமாந்துறை (கி), வெங்கலம் (மே), வெங்கலம் (கி), வேப்பந்தட்டை (வ), வேப்பந்தட்டை (தெ), வெண்பாவூர் ஆகிய  கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை தலைமையில் நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலிங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புதுஅம்மாபாளை யம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர் (மே), பாடாலூர் (கி) ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.
குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ப. மதுசூதனன் ரெட்டி தலைமையில் திருமாந்துறை, பென்னகோணம் (வ), பென்னகோணம் (தெ), வடக்கலூர், ஒகளூர் (மே), ஒகளூர் (கி), சு.ஆடுதுறை, அத்தியூர் (வ), அத்தியூர் (தெ), கிழுமத்தூர் (வ), கிழுமத்தூர் (தெ), அகரம் சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து ஜூன் 12, 13-களில் இதர கிராமங்களுக்கான ஜமாபந்தி நடத்தப்படுகிறது. ஜமாபந்தியின் இறுதிநாளான 13-ம் தேதி வருவாய்த் தீர்வாயம் முடிவுற்றதும், விவசாயிகள் மாநாடு நடைபெறும்.  v.kalathur seithi .

0 comments:

Post a Comment