Monday 17 March 2014

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் பிரகாரத்தில் வண்ணம், ஓவியம் தீட்டும் பணி துவங்கியுள்ளது.

இக்கோவிலில், இந்தாண்டு இறுதியில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையடுத்து, சுவாமி, அம்மன் சன்னிதி, பஞ்சமூர்த்திகள் சன்னிதி விமானம், வடக்கு, தெற்கு ராஜகோபுரத்தில் மராமத்து துவக்க, கடந்த, 12ல், கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. தற்போது சுவாமி, அம்மன் சன்னிதியில் உள்ள தூண்கள், சிற்பங்கள், 40 லட்சம் ரூபாய் செலவில், வார்னிஷ் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 50 லட்சம் ரூபாய் செலவில் மூன்றாம் பிரகார தூண்கள், சிற்பங்களில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன், மேல் பகுதியில் சிதிலமடைந்த ஓவியத்தை அகற்றி, புதிய ஓவியம் வரைந்து, வண்ணம் பூசும் பணி, நடைபெற்று வருகிறது.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment