Wednesday 2 April 2014

       வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் பள்ளிவாசல் முன்பு வாக்குசேகரிக்கும்போது சில இஸ்லாமிய அடிப்படை அமைப்புகளால் தாக்கப்பட்டதும் , வழிபாட்டு தளங்களில் வாக்குசேகரிக்க கூடாது என்ற நடத்தை விதிகளை மீறியதாக கூறி சுதீஷ் மீது  வழக்கு பதிவுசெய்யபட்டது.

      விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் , சிதம்பரம் மக்களைவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான திருமாவளவன்,  சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட , பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த லப்பைகுடிக்காடு பள்ளிவாசலில் இன்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்தார் .
லப்பைகுடிக்காடு பள்ளிவாசலில் திருமாவளவன் வாக்கு சேகரித்த காட்சி
வீடியோ கூட எடுக்கப்பட்டிருக்கிறது.

  இது தொடர்பாக மாற்று கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் என்ன செய்யப்போகிறார்கள் . இது தொடர்பாக சிதம்பரம் மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பட ஆதாரம்- https://www.facebook.com/photo.php?fbid=1487849894767655&set=pcb.1487850344767610&type=1&theater

https://www.facebook.com/photo.php?fbid=1487850144767630&set=pcb.1487850344767610&type=1&theater

https://www.facebook.com/photo.php?fbid=1487850321434279&set=pcb.1487850344767610&type=1&theater

0 comments:

Post a Comment