பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன. 2 முதல் நவீன செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 40 வயதிற்குக் குறைவாக, 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 10 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஐ.ஓ.பி சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர்- 621212 (போன் - 277869) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி-தினமணி.
RSS Feed
Twitter
Monday, December 30, 2013
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment