Thursday 2 January 2014



 இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது.  அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘ அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே ‘ஆர்ட்டின் படம்‘ வரைகின்றனர். ஒருவர் பெயரை எழுதி கவிதைகள், காதல் வசனங்கள் கூட எழுதுகின்றனர்.

இந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள் இடம் பெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘ பகுதி மாசடைவதால் அந்த ரூபாய் நோட்டுகளை உண்மை தன்மையை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள், பின் அடித்த ஓட்டைகள் இருந்தால் அந்த நோட்டுகளை வங்கிகள் மீண¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது.

அந்த நோட்டுகள் புழக்கத்திற்கு அனுமதிக்க தகுதி இல்லாதது. வங்கிகளும் ரூபாய் நோட்டுகளில் எண்ணால் எழுதக் கூடாது. இது ரிசர்வ் வங்கியின் ‘கிளீன் நோட்‘ கொள்கைக்கு எதிரானது. இவ்வாறு அனைத்து வங்கிகளின் தலைவர்கள், முதன்மை செயல் அலுவலர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல்கள் வெளியானது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று தான் வங்கிகள் திறக்கப்படும். எனவே, இன்று முதல் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஏற்கனவே ரிசர்வ் வங்கி இதுபோன்று அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என வங்கி கிளைகளுக்கு முறையான தகவல¢ இல்லை‘‘ என்றனர்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment