Tuesday 31 December 2013


பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்குள்பட்ட தகுதியான நபர்கள் காலி பணியிட விவரங்களை அந்தந்த வட்டார வள மையத்தில் உள்ள தகவல் பலகையில் தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிடவற்றுடன் காலை 10 மணிக்கு வட்டார வள மையத்தில் நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்கலாம்.
காலியாக உள்ள 2 மாவட்ட ஒருங்கிணைப்பாளார் பணியிடத்திற்கு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ல் எழுதுத் தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, ஏதேனும் பட்டப் படிப்பு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 6, 000.
பெரம்பலூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ம் தேதி நடைபெறும். கல்வித் தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி, மாத சம்பளம் ரூ. 2,000.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 17 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன. 8-ம் தேதி, வேப்பந்தட்டை வட்டார வள மையத்தில் நடைபெறும். ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 மையப் பொறுப்பாளர்களுக்கு, ஜன. 9-ம் தேதி ஆலத்தூர் வட்டார வள மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். வேப்பூர் ஒன்றியத்தில் 10 மையப் பொறுப்பாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, வேப்பூர் வட்டார வள மையத்தில் ஜன. 10ம் தேதி நடைபெறும். இந்த பணி நியமனம் முற்றிலும் தாற்காலிகமானது.

நன்றி- தினமணி.

0 comments:

Post a Comment