Friday 3 January 2014

வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் நெறி குறவர் காலனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
விழாவுக்கு நெறிகுறவர் சங்க மாநில பொறுப்பாளர் நம்பியார் தலைமை வகித்தார். ஹெல்ப்பிங் ஹேன் சொசைட்டி தலைவர் சிலம்பரசி, செயலாளர் சூரியசேகர், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மக்கள் உரிமைகள் இயக்க கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் கோசிபா, நெறி குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment