பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில
அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேலமாத்தூர் அரசு
உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரம்யாவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது
வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆர். ரம்யா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஆர். ரம்யாவை வெள்ளிக்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும், முறையான பயிற்சிகளையும் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மேலமாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி-தினமணி.
பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆர். ரம்யா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஆர். ரம்யாவை வெள்ளிக்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும், முறையான பயிற்சிகளையும் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மேலமாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி-தினமணி.
RSS Feed
Twitter
Friday, January 03, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment