Friday 3 January 2014



ஆமதாபாத்: இணையதளத்தை தொடர்ந்து, ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கியுள்ளார் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சமூக வலைதளங்களை சக்திவாய்ந்த ஊடகமாக கருதக்கூடியவர் நரேந்திர மோடி. இதனால், பேஸ்புக், டிவிட்டரிலும் பிரசாரம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ‘இந்தியா 272.காம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி, தனது பிரசாரங்கள் இளைஞர் சமுதாயத்தையும் சென்றடையும் வகையில் மாற்றிக்காட்டினார்.
 இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை தொடங்கியுள்ளார்.( பதிவிறக்கம் செய்ய  http://www.india272.com/  ). வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 272 இடங்களை பாஜ பிடிக்க வேண்டுமென இலக்கு வைத்துள்ள மோடி, அதையே தனது மந்திர எண்ணாக அப்ளிகேஷனுக்கும் வைத்துள்ளார். இந்த புதிய அப்ளிகேஷனில் தன்னார்வலர்கள் இணைந்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம், அடுத்த பிரசார கூட்டத்தில் மோடி எப்படி பேசலாம் என்பது பற்றி கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

மேலும், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் புதிய பதிவுகளை இந்த அப்ளிகேஷன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கருத்தில், ‘இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்சிக்கு இன்னும் பல சக்திவாய்ந்த தன்னார்வலர்கள் கிடைப்பார்கள். அவர்கள் எளிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்‘ என கூறியுள்ளார்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment