முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ஆகியன பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான பொருட்கள் இருப்பு குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பொங்கல் பரிசு வழங்கும் தேதியை முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே சமயத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
RSS Feed
Twitter
Thursday, January 02, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment