Tuesday 7 January 2014

தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் 2-ம் இடம் பெற்றார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கலைச்செல்வன் (29). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மாற்றுத் திறனாளியான இவர்  பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். இவரை மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை பாராட்டினர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment