Wednesday 26 February 2014

பெரம்பலூர்,: பெரம்பலூரில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக எஸ்பி சோனல் சந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் தண்ணீர் பந் தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்தில் இப்போட்டிகள் மார்ச் 2ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடை பெறும்.
இதில் ஆண்களுக்கான வாலிபால், கபடிப் போட் டிகள் மற்றும் 400 மீட்டர்,  1500 மீட்டர் ஓட் டம் உள்ளி ட்ட போட்டிகள் நடை பெறும். இதே போல், இருபாலருக்கும் நீளம் தாண் டுதல், குண்டு எறிதல் உள் ளிட்ட பல்வேறு போட் டிகள் நடத்தப்படும்.பங் கேற்க விரும்புவோர் தங் கள் பெயர் மற்றும் விவ ரத்தை 04328-291013 என்ற தொலைபேசி எண் ணிலோ அல்லது  94878-97706, 95975-56678 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். இப் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 3 போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, காவல் துறை மற்றும் பொது மக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தி டும் விதமாக நடை பெறும் இந்த விளையாட் டுப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர் ந்த பொதுமக் கள் அனை வரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment