Sunday 23 February 2014

விழுப்புரம்த்தில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பன தினம் இன்று நடந்தது. இதில் எம்.எல்.டி சங்கர்  தலைமை பொறுப்பேற்றார்.
சிறப்பு விருந்திரனராக ராம கோபாலன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கோயில்கள் மோசம் அடைந்து வருவதற்கு அரசு தான் காரணம்  கோயில்களின் வரவு செலவு கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கோயில்களை அறநிலையத்துறையின்  கட்டுப்பாடில் இருந்து மாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி மடாதிபதிகள், சமுதாய ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களைக்கொண்டு சுயேட்சையான வாரியம் ஒன்று அமைக வேண்டும் சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கதக்கது. என்று கூறினார்.
மேலும் வரும் நாடாளும்னற தேர்தலில் இந்துக்கள் மீது யார் அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். நாங்கள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிப்போம் என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து கேட்டபோது கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment