Saturday 1 March 2014

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் கள் முண்டியடித்தபடி நெருங்கினர். அப்போது பெண்  கவுன்சிலர் போண்டி திடீரென ராகுலை நெருங்கி தலையில் முத்தம் கொடுததார். இன்னொரு இளம்பெண் ராகுலை நெருங்கி வந்து  கன்னத்தில் முத்தமிட்டார்  காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்நிலையில் முத்தமிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து  செய்திதாள்களிலுமி வெளியானது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ,இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் கவுன்சிலர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment