Wednesday 26 February 2014

சிவன் சந்நிதியில் அமர்ந்து பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் எல்லா நலங்களும் உண்டாகும்.

* தேவர்கள் போற்றும் மகாதேவனே! பரமசிவனே! கவுரி மணாளனே! பஞ்சமுகம் கொண்டவனே! நெற்றிக்கண் உடையவனே! கங்கையைத் தலையில் தாங்கியவனே! எப்போதும் என்னைக் காத்தருளவேண்டும்.

* பிறைநிலவைச் சூடிய பெருமானே! மன்மதனை எரித்தவனே! திரிபுரங்களைச் சம்ஹாரம் செய்தவனே! நாகாபரணம் அணிந்தவனே! நீலகண்டனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

* கைலாய நாதனே! பஞ்ச பூதங்களைப் படைத்தவனே! அண்ணா மலையானே! தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவனே! சங்கரனே! சதா சிவனே! நோயற்ற வாழ்வைத் தந்தருளவேண்டும்.

* காலனை உதைத்தவனே! சம்சாரக் கடலில் இருந்து காப்பவனே! நள்ளிருளில் சுடலையில் ஆடுபவனே!. கங்காதரனே! ஜடாபாரம் கொண்டவனே! திரிசூலம் தாங்கியவனே! வாழ்வில் எல்லா நன்மையும் பெருகட்டும்.

* மங்கல மூர்த்தியே! காளை வாகனனே! புலித்தோலை ஆடையாக உடுத்தவனே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவனே! நமசிவாயனே! அபிஷேகப் பிரியனே! ஆதியந்தம் இல்லாதவனே! உன்னருளால் உலகில் எல்லா வளமும் செழிந்தோங்கட்டும்.

0 comments:

Post a Comment