Friday 28 February 2014

நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
தரம் உயர்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட நொச்சியம் ஊராட்சியில் நொச்சியம், நெய்க்குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை கிளை நிலை யங்களை தரம் உயர்த்தி கால்நடை மருந்தகங்களாக கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
தமிழக முதல்–அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய பால் பண்ணை அமைக்க ஏற்கனவே உத்தர விட்டி ருக்கிறார். எனவே பெரம்பலூர் பகுதி மக்கள் பால் உற்பத்தியை அதிகப் படுத்த வேண்டும். அதற்கேற்ப கால்நடைகளை ஆரோக்கியமாக்கி பரா மரிக்க ஏதுவாக மானிய விலையில் உலர் தீவனங்களை தமிழக அரசு வழங்கி வரு கிறது
மேலும் நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கால்நடை கிளை நிலை யங் களை கால்நடை மருந்தகங் களாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தர விட்ட தன் அடிப்படையில் இன்று கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது
அரசின் அறிவுரை
உங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்நடைகளையும் இந்த கால்நடை மருந்தகங் களுக்கு அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள லாம். மேலும் மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கு தமிழக அரசின் அறிவுரையின்படி நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தமிழக முதல்–அமைச்சரின் இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திகொள்ள வேண் டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் .மருதைராஜா, கிருஷணகுமார், வெண்ணிலாராஜா, மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் சேகர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகர், உதவி இயக்குனர் மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment