Friday 28 February 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 காசும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. டீசல் விலையை நிர்ணயிக்க சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.கடைசியாக பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 4–ந் தேதி லிட்டருக்கு 91 காசு உயர்த்தப்பட்டது.
77 காசு உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. அதன்படி வரிகள் நீங்கலாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, வரியுடன் சேர்ந்து சென்னை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 காசு உயர்ந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 71 காசில் இருந்து 76 ரூபாய் 48 காசாக அதிகரித்தது.இதேபோல் வரியுடன் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 61 காசு உயர்ந்தது. இதனால் நகரில் ஒரு லிட்டர் டீசலின் விலை 58 ரூபாய் 56 காசில் இருந்து 59 ரூபாய் 17 காசாக அதிகரித்தது.
டெல்லி
இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73 காசு அதிகரித்து 73 ரூபாய் 16 காசாகவும், டீசல் விலை 57 காசு உயர்ந்து 55 ரூபாய் 48 காசாகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 80 ரூபாய் 96 காசாகவும், டீசல் விலை 59 காசு அதிகரித்து 60 ரூபாய் 9 காசாகவும் உயர்ந்தது.மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 82 ரூபாய் 7 காசாகவும், டீசல் விலை 63 காசு அதிகரித்து 63 ரூபாய் 86 காசாகவும் உயர்ந்தது.
அமலுக்கு வந்தது
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment