Wednesday 26 February 2014

கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் மசூதிகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது.
இரவு பத்துமணிக்கு மேல் ஒலிபெருகிகளை உபயோகபடுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை, ஆனால் ரமலான் மாதங்களில்வ.களத்தூரில் விடிய, விடிய  இறைவழிபாடு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்துக்களின் விழாக்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இஸ்லாமியர்களின் விழாக்களுக்கு இதுபோருந்தாது என்பது எழுதப்படாத விதியாக காவல்துறையும் , பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் இரவு பத்துமணிக்குமேல் ஒளிபருகிகளை உபயோக படுத்துவதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என நன்கு அறிந்திருந்தும் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

சமீபத்திய உயர்நீதிமன்ற உத்தரவு :

மதுரை: மனிதன், இரவில் தூங்குவது என்பது, அடிப்படை உரிமை. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு, அனுமதிக்க முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அறந்தாங்கி அருகே, அய்யன்குடி குழந்தைவேல் தாக்கல் செய்த மனுவில், "அய்யன்குடி, அங்காள பரமேஸ்வரி கோவில், மாசித் திருவிழாவை ஒட்டி, பிப்., 28ம் தேதி, இரவு 10:00 மணி முதல், காலை 2:00 மணி வரை, ஆடல், பாடல் நடத்த, போலீசில் அனுமதி கோரினோம். மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள், ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: "மக்களுக்கு, பேச்சு, கருத்து சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை. அதுபோல், தூங்குவதும் அடிப்படை உரிமை தான்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு, இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. ஆடல், பாடலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர் மீண்டும், அறந்தாங்கி போலீசில் மனு அளிக்க, உரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

நன்றி-தினமலர்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete