தற்போது வ.களத்தூர் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் கண் நோய் மெட்ராஸ் ஐ எனத்தவறாக ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது....
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாக்டீரியா வினால் பரவுகிறது.. ஆனால் தற்போது பரவி வரும் கண் நோய் வைரஸ் சினால் பரவும் 'பிங்க் ஐ (Pink Eye) ' எனப்படும் நோய் என கூறப்படுகிறது...
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி உபயோகம் செய்தால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவதினாலும் , நோயாளிகள்பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதனாலும் கட்டுப்படுத்தலாம். நோயாளியின் கண்களை காண்பதால் நோய் தோற்றும் என்பது தவறான கருத்தாகும்.
இந்த நோய் பாதிக்கப்பட்ட சமயங்களில் அதிக கண் கூச்சம் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். தாமதித்தால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.
மேலும் அறிய- http://www.thehindu.com/…/beware-of-pink…/article6539811.ece
RSS Feed
Twitter
Friday, October 31, 2014
வ.களத்தூர் செய்தி












