Friday, 4 April 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரையில் உள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் ரூ.6 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள்...
ராம ஜென்மபூமி பூமியில் எழுப்பப்பட்டிருந்த மசூதி இடிக்கப்பட்டது திட்டமிடப்பட்ட செயல் என்றும் இதனை கோப்ராபோஸ்ட் நிருபர் ஆஷிஷ் என்பவர் ஸ்டிங் ஆபரேசன் செய்து கண்டுபிடித்தாக அந்த இணையதள பத்திரிகை செய்தி வெளிடப்பட்டுள்ளது.  http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5789&cid=70  K.ஆஷிஷ் என்ற ஆஷிஸ் கேதன் K.ஆஷிஸ் கோப்ரா போஸ்ட் அசோசியேட் எடிட்டர். அரவித் கேஜ்ர்வால் ஆஷிஸ்...
பெரம்பலூரில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் இன்று மதியம் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான தரேஷ் அகமதுவிடம் வேட்பு மனு விண்ணப்பத்தை தாக்கல்செய்தார். பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் எத்ரில் உள்ள IJK தேர்தல் அலுவலகம். தொண்டர்கள் அணிவகுக்க கூட்டணி கட்சியான தே,மு,தி.க தொண்டர்கள். மக்கள் வெள்ளத்தில்...
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. இந்நிகழ்ச்சியில் மங்கலமேடு துணைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் துணைக் கண்காணிப்பாளர் சுருளியாண்டி, மங்கலமேடு காவல் ஆய்வாளர் தே. சிவசுப்ரமணியன், குன்னம் காவல்...

Thursday, 3 April 2014

பெரம்பலூரில், போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை தலைமைக் காவலர்கள் 2 பேர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் ஆயுதப்படைக் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா, வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடி போதையில், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிடச் சென்றனராம். அப்போது...
தேர்தல் பிரச்சாரங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறையாகும். ஆனால் 2G ஸ்பெக்ட்ரம் புகழ் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வ.களத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது சிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவருகின்றனர். இதன் மீது மாற்றுக்கட்சி தொண்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக...
பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள   ஐஜேகே கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரான பாரிவேந்தர் என்கிற டிஆர் பச்சமுத்து போட்டியிடுகிறார். இதனையொட்டி விறுவிறுப்பான தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ள பச்சமுத்து இன்று (3ம்தேதி) துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரித்துவிட்டு, நாளை(4ம்தேதி) பகல் 12மணிக்குப் பிறகு பெரம்பலூரில்...
பெரம்பலூரில் போதையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கி அவர்களின் மண்டையை உடைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள்  ஈடுபட்டிருந்தனர். இரவு சரியாக 10.30 மணிக்கு மேல் ஆயுதப்படையைச் சேர்ந்த  தலைமைக்காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா இவர்களுடன் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரும் பெரம்பலூரில் உள்ள நாமக்கல் செல்வம் எனும் ஹோட்டலில் குடி போதையில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ...

Wednesday, 2 April 2014

ராசா குடும்பத்தினருடன். நீலகிரி தொகுதியில் 2 வது முறை எம்.பி.,யாக போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா தனக்கு ரூ. 3 கோடியே 61 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் சங்கரிடம் ராசா தனது வேட்பு மனுவை கொடுத்தார். இந்த மனுவில் அவர் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு விவரம் வருமாறு: அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ; ரூ. 3 கோடியே...
பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து இன்று காலை 9.35 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி, செங்குணம், கவுல்பாளையம் வழியாக நெடுவாசல் என அடுத்தடுத்த கிராமங்களில் பிரசாரம் செய்தார்.  க.எறையூர் கிராம பிரசாரத்தில் பேசிய பாரிவேந்தர்,"...
       வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் பள்ளிவாசல் முன்பு வாக்குசேகரிக்கும்போது சில இஸ்லாமிய அடிப்படை அமைப்புகளால் தாக்கப்பட்டதும் , வழிபாட்டு தளங்களில் வாக்குசேகரிக்க கூடாது என்ற நடத்தை விதிகளை மீறியதாக கூறி சுதீஷ் மீது  வழக்கு பதிவுசெய்யபட்டது.      ...

Tuesday, 1 April 2014

தற்போதைய நிலையில், கூட்டணியில், தே.மு.தி.க., மட்டும் தான் களத்தில் இறங்கி, வேகமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த், தன்னுடைய முதல்கட்ட பிரசாரத்தை முடித்து, இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவங்க உள்ளார். இதேபோல், அவரது மனைவி பிரேமலதாவும், தமிழகத்தில் பாதி தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டார். பா.ஜ., கூட்டணி உறுதியாகி, கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், பரபரப்பான...

Monday, 31 March 2014

தேர்தல் விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள், "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டளிப்பதன் அவசியம், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வாங்கக் கூடாது போன்றவற்றை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் சார்பில், ஆறு விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் வெளியிடுவதற்காக, தணிக்கை சான்றிதழ் பெற, இந்தப்...
v.kalathur வ.களத்தூர் காவ்யா ரவியுடன் அ.தி.மு.க. வேட்பாளர் மருதை ராஜா. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வ.களத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜா வாக்கு சேகரித்தார். அவருடன் வ.களத்தூர் நிர்வாகிகளான காவ்யா ரவி, கண்ணபிரான் மற்றும் பலர்கலந்துகொண்டு வாக்குசெகரிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாலை எறையூர், அயன்பேரையூர், தைக்கால், வி.களத்தூர், இனாம் அகரம், திருவாலந் துறை, வண்ணாரம்பூண்டி, பிம்பலூர்,...
கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.ஆதர்ஷினி கூறியதாவது:லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து...

Sunday, 30 March 2014

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப் பேச்சில் இருந்தே...
ஒட்டுமொத்த தமிழகத்திலும் அம்மா அலை வீசுவதாக ஊடகங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில்தான் இந்தக் கூட்டணி அமைந்து, அனைவரையும் யோசிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில் பல மாதங்களாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட ஒரு குழு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் பாஜக தலைவர்கள் கொண்ட முனைப்பு போலவே அதன் நண்பர்கள் குழாம் மேற்கொண்ட உழைப்புக்கும்...