Saturday, 1 February 2014

 பெரம்பலூர் நகரில் நடைபெற்றுவரும் புத்த்ககத் திருவிழா வில்  நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை நாம் நேரடியாக காண முடியவில்லை என்றாலும் பத்து நாட்கள் நடைபெறுகின்ற நிகழ்ச்சியின் உடனுக்குடன் பதிவு செய்ய படுகிறது ... பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயனடையவும் , நிகழ்வுகளை கண்டு மகிழவும் ... இந்த மிக சிறந்த ஏற்பாட்டை விழா குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர் ..... பெரம்பலூர் திருவிழாவின் நிகழ்வுகளை...

Friday, 31 January 2014

புதுடில்லி: நாட்டின் உயரிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை, அரசியல்வாதிகளான ஆட்சியாளர்கள், இஷ்டத்திற்கு, இடமாற்றம் செய்து, தூக்கியடிக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள், அதே பணியிடத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட உள்ள, 'சிவில் சர்வீசஸ் போர்டு' அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைப்பாவைகளாக: அரசியல் காரணங்களுக்காக,...
புதுடில்லி: பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.ஆனால்தற்போது குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதனுடன் ஒரிஜினல் சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் எழுந்த கண்டனத்திற்கு பி்னனர் இந்த புதிய உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஜாதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி பயிலும் போதும், வேலையில் சேரும் போதும், குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள இந்த பிரிவினரை திருப்திபடுத்தும்...

Thursday, 30 January 2014

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் ரேசன் முறை கொண்டு வந்தது கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தது. இந்நிலையில் மான்யவிலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆக உயர்த்த வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கைக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முறைப்படி ஒப்புதலை வழங்கியது. இதற்கான அறிவிப்பை இத்துறைக்கான அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்தார். இவரும் அமைச்சர் மணீஷ் திவாரியும் இணைந்து நிருபர்களிடம் கூறியதாவது: நியாயமான கோரிக்கை: ராகுலின் கோரிக்கை நியாயமானது. இவர் மக்கள் பிரதிநிதி. அவர் ஒன்றை சொல்கிறார்...

Wednesday, 29 January 2014

கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும். அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,...
நன்றி-விஷால் சரவணன...
ஒரு ஏக்கருக்கு ரூ.43,816-க்கு மிகாமல் நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருதால் 5 ஏக்கர் வரைக்கும் எந்தப் பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பம் இருப்பின், அவருக்கு சொந்தமான பரப்பு முழுமைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை சிறு விவசாயி அமைத்துக் கொள்ளலாம். குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர், புன்செய் நிலமாக இருப்பின் இரண்டரை...
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி மற்றும் ஆடைகளின் அச்சுக்கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 10-ம் தேதி முதல் எம்பிராய்டரி மற்றும் ஆடைகளில் அச்சுக்கலைப்...
பெரம்பலூர் மாவட்ட ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குரலிசை, நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜன. 30) நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குரலிசை, நடனம், ஓவியப் போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் 5- 8, 9- 12, 13- 16 வயது ஆகிய மூன்று பிரிவுகளில்...

Tuesday, 28 January 2014

திருச்சி: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என  போஸ்டர்கள்  ஒட்டப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரி  இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்திவரும் தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினரை கைது செய்வதுடன் அவர்களை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்...

Monday, 27 January 2014

மூலவர்:மதுரகாளி உற்சவர்:- அம்மன்/தாயார்: - தல விருட்சம்: மருதமரம் தீர்த்தம்:திருக்குளம் ஆகமம்/பூஜை :- பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்:- ஊர்:சிறுவாச்சூர் ...

Sunday, 26 January 2014

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் பயிற்சி மையத்தில் கார் ஓட்டுநர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 20 வயதிலிருந்து 35 வயதிற்கு குறைவாகவும், 8- ம் வகுப்பு படித்தவராகவும்,...
பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜா (37). இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் சனிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பார்த்தபோது அவருக்குச் சொந்தமான மற்றொரு மாடி வீட்டின்...
ஓட்டல் மற்றும் கடைகளில், நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருட்களில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத பொருட்களை, கலப்படம் செய்கின்றனர். இதை தெரிந்து கொள்ளாமல், சுவைக்காக விரும்பி சாப்பிட்டு, உடலை கெடுத்துக் கொள்கிறோம். காசு சம்பாதிக்க, உயிரோடு விளையாடும் கயவர்களை, அடையாளம் கண்டு, தண்டனை பெற்றுத்தர வேண்டிய, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.சாதாரண ஓட்டல்கள் முதல் பெரிய, நடுத்தர...
மும்பை: நாடு தழுவிய அளவில் 3 ஆயிரம் ஏ.டி.எம்.,. மையங்களை அமைக்க இந்திய தபால் துறை முடிவெடுத்துள்ளது,. மேலும், கிராமங்களில் 1,5 லட்சம் என்ற எண்ணிக்கையில் சிறிய அளவிலான ஏ.டி.எம்., மையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் பிப்ரவரி 5ம் தேதி, டில்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்பட உள்ளன. நன்றி-தினமலர...