Saturday, 8 February 2014

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், சேலைகளில் வேலைப்பாடு செய்ய பெண்களுக்கான இலவசப் பயிற்சி பெறலாம். இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 12 முதல் சேலைகளில் வேலைப்பாடு பயிற்சி பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது....
தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் அளிக்க வருபவர்களை பொதுமக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பாமகவின் மகளிரணி அரசியல் எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிரணி செயலர் செல்வி செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் மேலும் பேசியது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும்...
கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் அமைந்துள்ளது கேணிக்கரை காவல் நிலையம். இந்தக் காவல்நிலையம் மீது 02/02/2014 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய வன்முறைத் தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குக் காரணமென்ன? இந்தக் காவல்நிலையத்திற்கு...

Friday, 7 February 2014

சரவணன் வ.களத்தூர் கிராமத்தைச்சேர்ந்த நண்பர் சரவணன் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் நான்கில் அவர் வெற்றிபெற்றுள்ளார். பத்திரிக்கைச் செய்தி   வாலிபால் மற்றும் இறகு பந்து போட்டிகளில் முதல்பரிசும், நீளம் மற்றும் உயரம் தாண்டும் போட்டிகளில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவருக்கு நமது வாழ்துக்கள். ...
வண்ணராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த E.B ரவி அவர்களின் மகன் சபரி என்கிற சபரிகிருஷ்ணன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்.... இன்று மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்........ சபரியை பிரிந்து வாடும் அக்குடும்பத்தினற்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழந்தஅனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.... சபரியின் ஆத்மா சாந்த்தியடைய மனமாற வேண்டுகிறோம்....  தோற்றம்:19.11.1990 மறைவு:06....

Thursday, 6 February 2014

அரசு கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. கருப்பசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த மாத சந்தா தொகையான ரூ. 70 மட்டுமே சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை...
பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 8-ல் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.   இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் செ. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூர்...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களில் வியாழக்கிழமை (பிப். 6) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2013-14-ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம்...

Wednesday, 5 February 2014

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.சி.யில் இருந்து விஷவாயு கசிந்ததினால் அதை சுவாசித்த தொழிலதிபர் இறந்தார்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் தாயார் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையறிந்த அவர் உறவினரும், தொழிலதிபருமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் காந்திலால் (55) துக்கம் விசாரிக்க இரண்டு நாள்களுக்கு முன்பு இங்கு வந்தார். ஏற்கனவே காந்திலால் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததினால், சென்னையில் அதற்கு...
சென்னை குன்றத்தூரில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு முன் காதலன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  பெரம்பலூர் சின்னகடை வீதியைச் சேர்ந்தவர் இளையராஜா (24). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் தங்கியிருந்து, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இளையராஜாவும், அந்த பெட்ரோல் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த குன்றத்தூர் அருகே உள்ள தெற்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யாயாவும் (21) காதலித்து வந்தாராம்....

Tuesday, 4 February 2014

" காவி பயங்கரவாதம்" .... இந்த வார்தை பதம் இஸ்லாமிய தீவிரவாத கைக்கூலிகளாலும், ஒரு சார்பு ஊடகங்களாலும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும்அரசியல் வியாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகளை இழிவு படுத்தும் நோக்கத்துடன் இதனை செய்துவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சம்ஜாதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அமைப்புகளால் , அவர்களின் எசமானர்களை திருப்திபடுத்த நடத்தப்பட்டு வருகிறது . அதன்...

Monday, 3 February 2014

மலேசிய சிறையில் உள்ள மகனை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அவரது தாய் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மனைவி பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் அளித்த மனு: அயன்பேரையூர் கிராமத்தில் வசித்து வரும் எனது மகள் சுதாவை (25), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையாவுக்கு திருமணம் செய்து கொடுத்தேன்....
மூலவர்:மாரியம்மன் உற்சவர்:- அம்மன்/தாயார்:- தல விருட்சம்:வேம்பு தீர்த்தம்:- ஆகமம்/பூஜை :- பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்:கண்ணபுரம் ஊர்:சமயபுரம் மாவட்டம்:திருச்சி மாநிலம்:தமிழ்நாடு  திருவிழா: சித்திரைத்தேர் திருவிழா - ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய...