Saturday, 4 January 2014

         வ.களத்தூரில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டியுசன் சென்டர் விவேகானந்தர் பிறந்த தினத்தன்று துவக்கப்பட உள்ளது. தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப்படும் 12-01-2014 ல்  துவக்கப்படும் சிறப்பை இந்த சிறப்பு வகுப்பு பெறுகிறது.       LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு...

Friday, 3 January 2014

வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் நெறி குறவர் காலனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.விழாவுக்கு நெறிகுறவர் சங்க மாநில பொறுப்பாளர் நம்பியார் தலைமை வகித்தார். ஹெல்ப்பிங் ஹேன் சொசைட்டி தலைவர் சிலம்பரசி, செயலாளர் சூரியசேகர், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மக்கள் உரிமைகள் இயக்க கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் கோசிபா, நெறி குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு...
ஆமதாபாத்: இணையதளத்தை தொடர்ந்து, ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கியுள்ளார் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சமூக வலைதளங்களை சக்திவாய்ந்த ஊடகமாக கருதக்கூடியவர் நரேந்திர மோடி. இதனால், பேஸ்புக், டிவிட்டரிலும் பிரசாரம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ‘இந்தியா 272.காம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி, தனது பிரசாரங்கள் இளைஞர் சமுதாயத்தையும்...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரம்யாவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார். வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச்  சேர்ந்தவர் சோலைமுத்து (42). அவரது உறவினர், கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் (55). விவசாயிகளான இருவரும், வெள்ளிக்கிழமை மாலை வேப்பந்தட்டையிலிருந்து, நெய்க்குப்பை கிராமத்துக்கு தொண்டப்பாடி கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வ. களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோட்டார்...
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.      இதுகுறித்து இன்றைய...

Thursday, 2 January 2014

non-MRP பாஸ்போர்ட் கையால் எழுதப்பட்ட / போட்டோ ஒட்டப்பட்ட  மற்றும் 2௦ வருட செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வரும் நவம்பர் 25- 2௦14 முதல் செல்லாது என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சிவில் விமான அமைப்பு , வரும் நவம்பர் முதல் இத்தகைய பாஸ்போர்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறித்தி உள்ளதால் இனி வெளிநாடுகள், கையால் எழுதப்பட்ட non-MRP என அழைக்கப்படும்...
தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் மன்றம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா பெரம்பலூரில் 31-01-2014 முதல் 09-02-2014  வரை, புதிய பேருந்துநிலையம் அருகில் நடை பெற உள்ளத...
24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள்,  தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட...
 இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது.  அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘ அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே...
மதுரை: எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனந்த முருகன் தாக்கல் செய்த மனுவில், ஆதார் அட்டை கேட்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்...
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ஆகியன பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான பொருட்கள் இருப்பு குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பொங்கல்...

Tuesday, 31 December 2013

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்குள்பட்ட தகுதியான நபர்கள்...

Monday, 30 December 2013

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன. 2 முதல் நவீன செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 40 வயதிற்குக் குறைவாக, 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக...