Saturday, 15 March 2014

vkalathur பெரம்பலூர் அடுத்த சமத்துவப்புரம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வ.களத்தூர் கைகாட்டி  பிரிவு ரோட்டில் குறுக்கே உயர் அழுத்த மும்முனை மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பி நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக திடீ ரென அறுந்து விழுந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இதுகுறித்து மின் வாரியத்தினருக்கு தகவல்...

Friday, 14 March 2014

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துகணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்டிடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிடிவி...

Thursday, 13 March 2014

வாக்குக்கு பணம் கொடுப்பது தொடர்பான விடியோ அல்லது புகைப்படங்கள் அடங்கிய சாட்சி ஆவணங்களை அனுப்ப மாவட்டம்தோறும் தனி மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுப்பது தொடர்பாக இதுவரை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், புகைப்படங்கள் உள்பட இன்னபிற ஆவணங்கள் இருப்பின் அவற்றை இந்த இ-மெயிலில் அனுப்பி வைக்கலாம். இந்த சாட்சி ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில்...
பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படை வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியல் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா மகன் அபிபுல்லா உரிய ஆவணங்களின்றி ரூ. 1.46 லட்சம் தொகையை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தேர்தல் நடத்தை...

Wednesday, 12 March 2014

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும்,  சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை)  என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது.  கடந்த  12 ஆண்டுகளாக தேசபக்தியும்  இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட  முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு...
பெரம்பலூர், :  பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பெரம்பலூர் சங்குபேட்டையில் 3 நாட்களாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை அருகே உள்ள திருவாலந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வமிக்க இவர் கல்லூரியில் படித்த போது நண்பர்களின் ஊக்குவிப்பால் இதுவரை 400க்கும் மேற்பட்ட பாரம்பரிய ஓவியங்களை வரைந்துள்ளார்.இந்நிலையில்,...
தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவால் ஒளிப்பதிவாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வரும் மக்களவை தேர்தல் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் ஒளிப்பதிவாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைக்குழு, வாகனத்...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பெரம்பலூர் மற்றும் குன்னம் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் மூடப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தனிக்குழு உறுப்பினர்கள், பறக்கும் படை, வட் டாட்சியர்களுக்கான விளக்க கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகளை கண்காணிக்கும்...
அமெரிக்காவில் அறிவியலில் சிறந்து விளங்குகிற மாணவர்களை தேர்வு செய்து இன்டெல் அறிவியல் திறன் கண்டறிவு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருது வென்ற 10 மாணவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் ஆவார்கள். ஜார்ஜியாவை சேர்ந்த மாணவர் ஆனந்த் சீனிவாசன் விருது பட்டியலில் 8–வது இடத்தைப் பிடித்தார். 10–வது இடத்தை மேரிலாண்டை சேர்ந்த ஷாவுன் தத்தா கைப்பற்றினார். இந்த மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் டாலர்...
vkalathur பெரம்பலூர் - ஆத்தூர் மாநில நெடுஞ்சாலையை வேப்பந்தட்டை யிலிருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் பேரையூர் கைகாட்டி வரை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வ.களத்தூர் மேட்டுச்சேரி முதல் கைகாட்டி வரை சாலையை அகலபடுத்தும் பணி பலமாதங்களாக நடைபெற்றுவருகிறது. சாலையை தோண்டி பலமாதங்களாக பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்த இந்த திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. ...

Tuesday, 11 March 2014

பெரம்பலூர், : கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 2 துணிகள் வாங்கினால் ஒரு துணி இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டுத் துணி விற்பனையில் 50% கட்டணத்திற்கு காட்டன், பாலியஸ்டர் துணிகள் இலவசம் வழங்கும் புதிய திட்டமும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாரதாரத்தை மேம்படுத்த,...

Monday, 10 March 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 8 ஆயிரத்து 527 பேர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 590 வாக்குச்சாவடி மையங்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 590 வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடை பெற்றது. இந்த முகாம்க ளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தொடர்பான படிவங்களை...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 6 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர்...

Sunday, 9 March 2014

பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் 152 பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளன. பதற்றமான வாக்குசாவடிகள் பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்., பெரம்பலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி கள் அடங்கி யுள்ளன. குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 247 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், லால் குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 232 வாக்குச்சாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் உள்ள 250 வாக்குச் சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகளும், முசிறி...
கீழக்கரை: துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவ விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ராமலிங்கம் (41). துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, மகனுடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். மற்றொரு மகன், சில மாதங்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்....
புதுடெல்லி: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், அது பறிமுதல் செய்யப்படாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடை செய்யும் நோக்கத்தில் தேர்தல் செலவு கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியவற்றை தேர்தல்...
கலைவாணன் பெரம்பலூர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் இன்றுமுதல் திருவாலந்துரையையை சேர்ந்த நண்பர் கலைவாணன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருவாளந்துறையைச் சேர்ந்த திரு. கலைவாணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது . நம் கண்ணுக்கு தெரியாத , அறிமுகமில்லாதவர்களின் உழைப்பை , திறமையை அங்கீகரிக்கும் நாம், நம் மாவட்ட...
துர்கேஸ்வரி கருவை கலைக்க சொல்லி கணவர் மிரட்டுகிறார் என அ.தி.மு.க., துணை மேயர் ஆசிக் மீரா மீது 8 மாத கர்ப்பிணி புகார் தெரிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்த, மறைந்த, அ.தி.மு.க., அமைச்சர், மரியம்பிச்சை மகன், ஆசிக் மீரா. அமைச்சர் மரியம்பிச்சை, எம்.எல்.ஏ., பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் வழியில், கார் விபத்தில் சிக்கி இறந்தார். அதையடுத்து, அ.தி.மு.க., தலைமையின் கருணைப் பார்வையால், ஆசிக் மீராவுக்கு,...
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது . அதன்படி கட்சிக்கொடி , சுவர்விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் போன்ற அனைத்தும் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வ.களத்தூரில் உள்ள அரசியல் கட்சி தொடர்பான அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வ.களத்தூர் தேரடி திடல் அருகே உள்ள அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன....
கலைவாணன்  திருவாலந்துரையை சேர்ந்த நண்பர் கலைவாணன் வரைந்த ஓவியங்கள் பெரம்பலூர் சங்கு அருகே இன்று மாலை வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கும் ஊர் நண்பரின்  திறமையை கண்டு பாராட்ட நாம் தவறிவிட்டோம் என்பது வருத்தத்திற்குரியது. பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருவாளந்துறையைச் சேர்ந்த திரு. கலைவாணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது...
vkalathur வ.களத்தூர் மக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்கவும் புதிதாக பெயர் சேர்க்கவும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்றுவருகிறது. இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுவதால் விரைந்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும் .  பதினெட்டு வயது நிரம்பியவர்கள் ரேசன் கார்டு , இரண்டு பாஸ்போர்ட் அளவு உள்ள போட்டோ மற்றும் பத்தாவது மதிப்பெண்...