Sunday, 20 November 2016

வ.களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வ.களத்தூரில் உள்ள IOB வங்கியில் கணக்கு உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பணம் எடுக்க வ.களத்தூர் IOB வங்கிக்கு தான் வருவார்கள். கடந்த வியாழன் அன்று கால்கடுக்க நின்றவர்களுக்கு பணம் கிடைக்காததால் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளி அன்று சென்றவர்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்ற பதிலே...

Tuesday, 15 November 2016

புதுடில்லி: ஜாகிர் நாயக்கின் என்.ஜி.ஓ., அமைப்பான ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' க்கு 5 ஆண்டு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பரப்புரை முஸ்லிம் மதபோகரான ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி., தொலைக்காட்சி மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டசேன் எனப்படும் என்.ஜி. ஓ. வை நடத்தி வருகிறார். பீஸ் டி.வி., மூலம் ஜாகிர் நாயக் பயங்கரவாத இயக்கங்களுக்கு...
   ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப்...

Tuesday, 14 June 2016

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப...

Wednesday, 1 June 2016

அத்தனையும் இலவசம்... பயணடையுங்கள் வ.களத்தூர் மக்களே,... புதிதாக கிணறு வெட்ட., பழைய கிணறு தூர் வார, ஆடு மற்றும் மாட்டுப்பண்ணை அமைக்க, பைப் லைன் அமைக்க என அனைத்தும் ஒரு பைசா செவில்லாமல் உங்கள் நிலத்தில் அரசின் முழு மானியத்துடன் அமைத்துக்கொள்ளளாம். இதற்கு நீங்க செய்ய வேண்டியது , இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவம் எல்லா அரசு அலுவலகங்களிலும் கிடைக்கும்.  குறிப்பாக வேளான்மை சார்ந்த அலுவலகங்களிலும்...

Wednesday, 25 May 2016

பத்தாம் வகுப்பு தேர்வில் வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்: முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -   450/500. இரண்டாம்...

Tuesday, 24 May 2016

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துள்ளது. மேலும், பல ஏரி,...

Monday, 23 May 2016

பெரம்பலூர் : கோடை கால விடுமுறை முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான பராமரிப்பின்றியும், கேட்பாரற்றும் கிடக்கும் சுற்றுலாத் தலங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் பரப்பளவை குறைவாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியை நம்பியுள்ள விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்கரில்...
பெரம்பலூரில் தமிழ்நாடு பிராமணர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்புகள் மதரசா சாலையில் உள்ள என்.டி.சி.மையத்தில் சனிக்கிழமை மாலை துவங்கியது. இம்மாதம் 30-ந்தேதிவரை தினமும் மாலை 4மணிமுதல் 6மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத மொழி பயிற்றுனர்கள் விஷ்ணு, மஞ்சுளா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும்...

Saturday, 21 May 2016

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம் வ.களத்தூர் சொந்தங்களே... இடையில் ஏற்பட்டசில தவிர்க்க முடியத காரணங்களால் நாங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம். இக்காலத்தில் தேரடி மண்டபம் எரிக்கப்பட்டது போன்ற கடினமான  சூழ்நிலைகளிலும் நாங்கள்  பொறுமை காத்தோம்.... ஆனால் எதிர்கால வா.களத்தூரின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் எமது சேவையை துவக்குகிறோம்......