Monday, 1 September 2014


இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.
இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.
இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–
இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–
எந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.
விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.


விநாயகர் சிலை ஊர்வலம் (மாதிரி)
 குன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி கோ விந்தராசு, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், ஆர்ஐ இளவரசன், விஏஓ மனோக ரன் மற்றும் போலீசார் பென்னக்கோணம் கிராமத்திற்கு சென்று விநாயகர் சிலையை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி வழியாக எடுத்து செல்லக் கூடாது, மாற்று வழியில் சிலையை எடுத்து செல்லுங்கள், இல்லையேல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தி, லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி வழியாக சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பென்னக்கோணம் கிராம மக்கள் சிலையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வருடமும், லப்பைக்குடிக்காடு வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது வேண்டுமென்றே வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பராபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியதோடு, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி கழிவு நீர் அ¬ னத்தும் பென்னக்கோணம் வழியாக தான் செல்கிறது என கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

-தினகரன்.

பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ’சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுசரிப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆசிரியர்கள் போற்றப்படவேண்டும்! வணங்கப்படவேண்டும்!! என்ற நம் நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உயிர்கொடுக்க மத்திய அரசு இந்த தினத்தை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இதற்கு ”குரு உத்ஸவ்” என்று பெயரிட்டுள்ளது. தர்மமும் நன்றியும் மனசாட்சியும் உள்ள எந்த நபரும் இதை வரவேற்று கொண்டாடுவார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் ஏதாவது நியாயம் உள்ளதா?
போஸ்டர்களிலும் ஃப்லெக்ஸ் பேனர்களிலும் சுவர் விளம்பரங்களிலும், கழகக் கண்மணிகளால் தமிழாகவே(!) சித்தரிக்கப்படும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் பேச்சைப் பாருங்கள்.
//ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்' என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ஆசிரியர் தினத்தை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர். அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை// - (தினமணி செப்டம்பர் 1 2014)
dinamanai newsitem
http://www.dinamani.com/tamilnadu/2014/09/01/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%86/article2408362.ece
இதில் கவனிக்கவேண்டிய சொற்றொடர் //மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர்//. இதில் ’குரு’ என்ற சொல்லை வடமொழி சொல்லாக சித்திரிக்கிறார் தமிழ் இ(ஈ)னத் தலைவர். சமயம் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக செம்மொழி மாநாட்டில், செம்மொழி தமிழுக்கு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்று வரையறை நிர்ணயித்த வ(லொ)ள்ளுவர் ஆயிற்றே இவர்! அந்த செம்மொழி மாநாட்டில் இவரால் ’சுத்த தமிழ்’ என்ற சான்றிதழ் பெற்ற ’புறநானூறு’ என்ன சொல்கிறது?
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// - புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி வரி-12
இப்பாடலில் ’பாண்டரங் கண்ணனாரால்’ பாடப்பெரும் சோழ மன்னன் ’பெருநற்கிள்ளி’, இராச சூயம் என்னும் வேள்வி செய்ததனால் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இந்த சோழனின் சீற்றத்தை முருகனுக்கு இணையாக உவமைப்படுத்துகிறார் புலவர்.
இப்பாடலில் //குருசில்// என்ற சொல் தலைவன், அதாவது மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா
’கெழுதகை நண்பரே’ என்று முரசொலியில் எழுதும்போது, கெழு என்பதற்குப் பின் 'குரு' என்ற சொல் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது, புறநானூற்றை முறையாக படித்திருந்தால் தெரிந்திருக்கும்.
இராசசூய வேள்வி செய்ததனால் சோழ மன்னனும் சோழர்குலமும் தமிழை அழித்துவிட்டது அதனால் குருசில் என்ற வடமொழி சொல்லை இந்த பாடலில் புலவர் பயன்படுத்துகிறார் என்று சோழனையும், பாடிய சான்றோனையும் ’சோற்றால் அடித்த பிண்டமே!’ என்று முரசொலியில் முரசு கொட்டாமல் இருந்தால் சரி!.
  purananooru
செம்மொழியில் இடம் பெற்ற இதே புறநானூற்றில் புலவர் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பாடும் போது
//ஓர்க்கும் உறந்தை யோனே குருசில்// - புறநானூறு 68 (வரி 17-18)
இங்கு ’குருசில்’ என்ற சொல் மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்தி பாடிய புறநானூற்றுப் பாடலில் குருசில் என்ற சொல் மன்னன் என்று பொருள் படும்படியாக அமைந்துள்ளது.
//வேல் கெழு குருசில்// - புறநானூறு 198 (வரி 10)
(வேலையுடைய தலைவா)
பத்துப்பாட்டு நூற்களுக்கு பின் தோன்றிய நீதி நூல்களை பதினென்கீழ்கணக்கு நூல்கள் என்றழைப்போம். ’நீதி’ என்ற சொல்லின் ‘ந’கர நெடில் குறிலாக ஒலித்து ’நிதி’யாக பைகளிலும் பெட்டிகளிலும் சேர்க்கும் மரபைத் தோற்றுவித்த கருணா(கரன்சி)நிதிக்கு ஆசாரக்கோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது துரதிருஷ்டம் ஆசாரக்கோவை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
//குரவர் உரையிகந்து செய்யார் விரதம்// - ஆசாரக்கோவை (பாடல் 17, வரி- 1)
நோன்பே எனினும் ஐம்பெருங் குரவர்களாகிய தாய், தந்தை, ஆசிரியர், அரசன், தமையன் முதலியவர்கள் சொல்லைக் கடந்து செய்யார் என்கிறது உரை.
இங்கு ’குரவர்’ என்ற சொல்லுக்கு ஆசிரியர் என்ற பொருளும் உள்ளது.
இளங்கோவடிகளே சிலப்பதிகாரக் காதையை நேரில் வந்து தன்னிடம் சொன்னது போல் கம்பீரமாக மேடைகளில் மேதாவித் தனமாக பேசியும் பூம்புகார் என்று கதை வசனம் எழுதி சினிமாவில் சம்பாதித்தும், பூம்புகார் வணிகர்களை விடப் பல மடங்கு சம்பாதித்த பெருமைக்குச் சொந்தக்காரர் கருணா(கரன்சி)நிதி. சிலப்பதிகாரத்தில் குரு என்ற சொல் இடம்பெற்றிருப்பதை ஏன் தான் கவனிக்கவில்லையோ. சிலப்பதிகாரத்திற்கு ”கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசம்” என்ற கிளுகிளுப்பான விளக்கம் அளித்தவருக்கு இது எங்கே தெரியப்போகிறது!.
//இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்// - (சிலப்பதிகாரம் நாடுகாண் காதை, வரி 184)
இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்
சிலப்பதிகாரமும் குரவன் என்றால் ஆசிரியர் என்கிறது.
அடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’ என்பதற்கு குருமூர்த்தி என்று குறிப்பிடுகிறார். நம் திருக்குவளை தட்சிணாமூர்த்தி குரவன் என்பதற்கு வேறு ஏதாவது பொருள் வைத்திருக்கிறாரா?
wall-paintings



சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை, குரவன் என்றால் பெற்றோர் என்கிறது
//குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ// - (புறஞ்சேரியிறுத்த காதை வரி 89)
குரு’ என்ற சொல் அரசன், தாய் தந்தையர், ஆசிரியர், தமையன் என்பதைக் குறிக்கும் சொல்லாக விளங்குவது மொழி அறிஞர்களுக்குத் தெரியும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, இந்த சொல்லிற்கு மேலும் சில பொருள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது
//குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும்// - (பிங்கல நிகண்டு, 10: 370)
இதற்கு தமிழ் இணையதளமான tamilnet.com, Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru என்ற விளக்கத்தைப் பதிவிட்டுள்ளது. (http://www.tamilnet.com/art.html?catid=98&artid=37228). இந்த தளம் கருணாநிதியின் மொழியில் சொல்லப்போனால் ஆரியக் கலப்பற்ற இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது.
தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான திரு கா.சு. பிள்ளை, ’சமயக் குரவர் நால்வர் வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதி அதை சென்னை, பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆண்டுப் பிறப்பை மாற்ற கள்ளச் சாட்சியாக கருணாநிதியால் கூண்டில் ஏற்றப்பட்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான கா.சு. பிள்ளை அவர்கள் குரவர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் எடுத்துக்கொண்டார் என்பதை இறந்தவர்களையெல்லாம் சாட்சிக்கு அழைக்கும் கருணாநிதி இவர் கல்லறைக்குச் சென்று கேட்டுச் சொல்வாரா?
சமயக்குரவர்கள், சந்தான குரவர்கள் என்று சைவர்களால் அனுதினமும் வணங்கப்படும் ஆசான்கள் தமிழர்கள் இல்லையா? குரவர் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லையா?
samya santhana kuravar



//கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க// (திருவாசகம்)
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ சமயக்குரவரான மாணிக்கவாசகர் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இந்த திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
//நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்// - காஞ்சி புராணம் - கடவுள் வாழ்த்து (பாடல் 10, வரி 2)
என் தம்பி சிவாஜி கணேசன் என்று உறவு முறை பாராட்டி, சென்னை காமராசர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவினார் கருணாநிதி. இந்தச் சிலையை ஜெயலலிதா அரசு மாற்றியபோது கடும் கண்டனத்தைத் தெரிவித்தவரும் கருணாநிதி. சிவாஜி கணேசனுக்கு ‘கலைக் குருசில்’ என்ற பட்டமும் உண்டு. ’குருசில்’ என்ற பட்டம் எந்த மொழியை அடிப்படையாகக் கொண்டது என்று, ‘முத்தமிழ் வித்தவர்” விளக்கம் தருவாரா?
’குரவன்’ என்ற தமிழ்ச் சொல்லே ’குரு’ என்ற வடமொழிச் சொல்லுக்கு வேர் என்று தனித்தமிழ் பேசும் தேவநேயப் பாவாணர் சொல்லியிருப்பது கருணாநிதிக்குத் தெரியவில்லை போலும்! சிவாலயங்களில் பூசனை செய்பவர்களுக்கு ’குருக்கள்’ என்று பெயர். இதுபோலவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூசனை செய்பவர்களுக்கு ’சிவகுராவ்’ என்று பெயர். இதிலிருந்து ’குரு’ என்ற சொல் ஒரே பொருளை குறிக்கும்படியாக வட பாரதத்திலும், தென் பாரதத்திலும் வழங்கப்படுகிறது. ’குரு’ என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. S.இராமசந்திரன் அவர்கள். 
devaneya pavanar
குரு’ என்ற உயரிய சொல்லை உலகுக்குக் கொடுத்தது உன்னதத் தமிழ் என்ற உண்மையை மறைத்த பாதகச்செயலை கருணாநிதி செய்துள்ளார். சங்க காலம் முதல் இன்று வரை பழக்கத்தில் இருந்துவரும் ’குரு’ என்ற தூய தமிழ்ச் சொல்லைத் தமிழிலிருந்து அந்நியப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளார். பிரிவினைவாத நோக்கத்திற்காக தாய்மொழியை காவு கொடுக்கும் கயவருக்கு கலைஞர் பட்டமா?
’குரு’ என்ற சொல்லின் மூலம் தமிழ் என்றாலும், குரு- சிஷ்ய பாரம்பரியம் வெறுக்கத்தக்கது அது தமிழுக்கு எதிரானது என்று கருணாநிதி அவர்கள் கருதலாம். கருணாநிதியை பொறுத்தவரை அவரின் வாழ்க்கைமுறையே தமிழ் வாழ்க்கைமுறை. அவரது அகராதியே தமிழ் அகராதி. அதனால் தானோ என்னவோ தமிழே என்று அவரை அவரே அழைத்துக்கொள்கிறார். பாடம் கேட்கப் போன மாணவியிடம் ஆசிரியர் புணர்ந்ததை வைத்து உடம்படு மெய் என்று தொல்காப்பிய பூங்காவில் ஆசிரியர்-மாணவர் உறவுக்கு விளக்கம் கொடுத்தவராயிற்றே! காவலாளி இல்லாத பூங்காக்களில் இரவு நேரங்களில் ஒதுங்குபவர்களை வைத்து கூட்டம் நடத்துபவரின் தொல்காப்பியப் பூங்கா இப்படித்தானே இருக்கும்! இந்த உடம்படு மெய் சூத்திரத்தின் அடிப்படையில் குருவைப் பார்க்கும் கருணாநிதிக்கு, குருவை தெய்வமாகக் கொண்டாடும் மத்திய அரசின் ’குரு உத்ஸவ்’ கசக்கத்தானே செய்யும்!.
கருணாநிதி கொட்டடித்தால் அந்த தமிழ் தாளத்திற்கு அடிப்படைத் தமிழும், பண்பாடும் தெரியாத ஒரு வேதாளக் கூட்டம் உடனே ஆடிவிடும். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா கழுத்தில் இருக்கும் வேதாளம் யார் என்பதற்கான போட்டா போட்டி வேறு! எப்போதெல்லாம் சர்க்கரை நோய் கூடுகிறதோ அப்போதெல்லாம் பாத யாத்திரை செல்லும் திரு.வை.கோ அவர்கள் ஏதோ ’குரு’ என்ற சொல் தமிழுக்கு விரோதமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தமிழன் என்று சொல்லி தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், இலங்கைத் தமிழருக்கும் சங்கூதும் திருமாவளவன், பழ.நெடுமாறன், போன்றோர் கொதித்தெழுகின்றனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ’குரு’ என்ற சொல்லினால் தமிழுக்குத் தீரா இழுக்கும், அழிவும் வருவதை டெலஸ்கோப் மூலம் பார்த்து வானிலை அறிக்கை படித்தனர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் மற்றும் ’சீன்’ சீமானின் அறிவுக்களஞ்சியமான திரு.ஐயநாதன்.
இந்தப் பண்பாட்டுக்காவலர்களையெல்லாம் ஒரு படி மிஞ்சி நின்றார் காங்கிரஸ் தலைவர் திரு.ஞானதேசிகன் அவர்கள். Teachers day என்பதை ‘குரு உத்ஸவ்’ என்று மாற்றியது தமிழ் விரோதம் என்கிறார். I am the last English man to rule India, என்று சொன்ன ஜவகர்லால் நேருவைப் பின்பற்றும் கட்சியினருக்கு ’குரு’ என்ற சொல் கெட்ட வார்த்தை தானே!
nehru edwina
அரசியலுக்காகவும், பிழைப்பிற்காகவும் மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இந்தக் கூட்டங்கள், ஆங்கிலத்திலுள்ள teachers day ஐ ஏற்றுக் கொள்வார்களாம்!, ஆங்கில ஆண்டுப்பிறப்பான ஜனவரியைப் போற்றிக் கொண்டாடுவார்களாம்!, அரேபிய ரம்ஜானைக் கொண்டாடுவார்களாம் !. அரபும், ஆங்கிலமும் மதுரையிலும், குமரிக் கண்டத்திலும், கோபாலபுரத்திலும் தோன்றியது! சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும் கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது! என்று இந்தத் தமிழ் கோமாளிகள் அறிவித்து, அரபியையும், ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 158 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெரம்பலூர் நகரில் 30 சிலை, பாடாலூர் பகுதியில் 25, மருவத்தூர் பகுதியில் 5, குன்னம் பகுதியில் 2, மங்கலமேடு பகுதியில் 6, அரும்பாவூர் பகுதியில் 5, கை.களத்தூர் பகுதியில் 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊர்வலத்தை முன்னிட்டு, அனைத்து விநாயகர் சிலைகளும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு செல்வகணபதி கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

விநாயகர் சதுர்த்தி விழா குழுத் தலைவர் தெ.பெ. வைத்தீஸ்வரன், கெüரவத் தலைவர் கங்காதரன், துணைத் தலைவர்கள் தேவேந்திரன், பிரபு அய்யர், செயலர் சி. நடராஜன், இணைச் செயலர்கள் கதிர்வேல், சி. ராமசாமி, பொருளாளர் சிவபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை, பாலக்கரை, துறைமங்கலம் வழியாக திருச்சிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில்: இதேபோல, அரியலூர் நகரில் 4, செந்துறை பகுதியில் 2, கீழப்பழுவூர் பகுதியில் 11, திருமானூர் பகுதியில் 16, வெங்கனூர் பகுதியில் 6, தளவாய் 1, ஜயங்கொண்டம் 14, உடையார்பாளையம் பகுதியில் 6, மீன்சுருட்டி பகுதியில் 3, தா.பழூர் பகுதியில் 5, ஆண்டிமடம் பகுதியில் 5, இரும்புலிக்குறிச்சி பகுதியில் 2, விக்கிரமங்கலம் பகுதியில் 2 என அரியலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அரியலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மருதையாற்றிலும், தா.பழூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருமானூர் கொள்ளிட ஆற்றிலும், ஜயங்கொண்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அணைக்கரை ஆற்றிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

-தினமணி.


பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். வேனை, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவக்குமார் (45) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தனியார் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றபோது, முன்னால் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (45), மாரியப்பன் (60), சுதாகரன் (34), சிவக்குமார், பிரபு, மணிகண்டன், கார்த்திக், சதீஷ், ராமச்சந்திரன், உமாராணி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-தினமணி, வசந்த ஜீவா.

Sunday, 31 August 2014

பெருமை மிக்க கலாச்சாரப் பாரம்பரியம்
hrce temple Security
நமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவை நமது பழம்பெருமை வாய்ந்த வேத நாகரீகத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும், கலச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் சின்னங்களாக நெடுதுயர்ந்து நிற்பவை. அவை கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்து வருபவை. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் வளர்க்கப்பட்டு வரும் வேத ஆகமங்கள், இலக்கியம், கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, இயல், இசை, நாடகம், கால்நடைப் பாதுகாப்பு, என அனைத்துமே ஆலயங்களைச் சார்ந்த கலாச்சாரப் பாரம்பரியம்தான்.
ஆலயங்களில் குடியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது போலவே, அவற்றைச் சார்ந்துள்ள விருக்ஷங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றையும் வழிபடுகின்றோம். அத்தெய்வங்களின் வாகனங்களையும் வழிபடுகின்றோம். இருப்பினும், ஆலயத்துள் இருந்துகொண்டு நமக்கு அருள்பாலிக்கும் தெய்வத்திற்குச் சமானமாக நாம் வழிபாட்டு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிராணி உண்டென்றால் அது பசுத்தாய் மட்டுமே. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையை நமது சனாதன தர்மம் பசுவுக்கு மட்டும் அளிக்கின்றது.
அன்றைய முடியாட்சி காலத்தில், அரசர்கள் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைத்து நந்தவனங்களும் பசுமடங்களும் அமைத்திருந்தார்கள். ஆலயவத்திற்கு வந்து இறைவனத் தரிசிப்பவர்கள், பசுமடங்களுக்கும் வந்து ஆவினங்களுக்குப் பூஜைகள் செய்வதும், உணவுகள் வழங்குவதும் வழக்காமக இருந்து வந்தது. ஆலயத்தினுள் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் செய்வதற்கான பால், தயிர், வெண்ணை, கோமியம், சாணம், போன்ற பொருட்களைப் பெறுவதற்கும், பஞ்சகவ்யம், விபூதி போன்ற பொருட்களைத் தயாரிப்பதற்கும் பசுமடங்கள் பயன்பட்டு வந்தன.
அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட சீரழிவு
அன்னியர் படையெடுப்பினால் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் அவர்கள் வசம் அடிமைப்பட்டிருந்த போதும், நமது ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மாற்றம் பெறவில்லை. அவை தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. நமது ஆலயங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், நமது வழிபாட்டு முறையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆவினங்களைப் போற்றும் நமது பண்பாடும் அழியவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டு ஆலயங்கள் பல அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், சுதந்திரம் பெற்ற பிறகு திராவிட அரசுகள் ஏற்பட்ட பிறகுதான் நமது ஆலயங்கள் பெரிதும் சீரழிக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லப்போனால், 1967க்குப் பிறகு தொடர்ந்து வரும் திராவிட ஆட்சியாளர்களின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் ஆலயங்கள் சீரழிந்தன; ஆலயங்களை இணைந்து இருந்த நீர்நிலைகளும், பசுமடங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்தன; தொடர்ந்து அழிந்து வருகின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில்தான், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, கோயில்களில் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
radharajan
பிராணிகள் நலவிரும்பியும் சமூக ஆர்வலருமான திருமதி ராதா ராஜன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் (WP 28793 & 28794 of 2013) மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். ராதா ராஜன் தன்னுடைய மனுவில், “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் உள்ளன. அங்கு பசுக்கள், கன்றுகளைப் பராமரிப்பதற்கு கோசாலைகள் (பசு மடங்கள்) உள்ளன. மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோயில்களிலேயே நிர்வாகத்தினரால் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோசாலையில் சரியான பராமரிப்பில்லாமல் பசுக்கள் இறந்தது தெரிய வந்தது. கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் நிர்வாக முறைகேடு, போதிய பராமரிப்பின்மை காரணமாக இது போன்று பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் கோசாலைகளின் பராமரிப்பைக் கண்காணிப்புக் குழு அமைத்து மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் ஆஜரானார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்குரைஞர் எஸ்.கந்தசாமி ஆஜராகி அரசாணையைத் தாக்கல் செய்தார். அதில், பசு மடங்களை ஆய்வு செய்ய கால்நடைத் துறை இணை இயக்குநர் எல்.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவருடன் சேர்த்து, விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி, மனுதாரர் ராதா ராஜன் ஆகியோரையும் உடன் நியமிக்கப் பரிந்துரை செய்தனர்.
இந்தக் குழு தமிழகத்தில் உள்ள கோயில்களின் பசு மடங்களை ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 27-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி
hrce gow issue1
சென்ற 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தருவாயில் புகழ் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பசுமடத்தில் பல பசுக்கள் திடீரென்று இறந்து போனதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அக்டோபர் மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலா பிராணிகள் காப்பகம் மற்றும் மீட்கும் மையத்திலிருந்து, மருத்துவர்கள் கோவிலின் பசுமடத்திற்குச் சென்று அங்குள்ள பசுக்களைப் பரிசோதனை செய்தனர். அந்தச் சமயத்தில் 105 பசுக்கள் இருந்தன. அவை பக்தர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. பெரும்பான்மையான பக்தர்கள் பசுக்களை நன்கொடையாகக் கொடுத்ததுடன் அவற்றைப் பராமரிக்க ரூபாய் 10,000 பணமும் கொடுத்திருக்கின்றனர். கோவிலில் உள்ள பசுக்களும் கன்றுகளும் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று பல புகார்கள் எழுந்ததால், சுமார் 50 பிராணிகள் நல ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பசுமடத்தின் சோதனைக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவின் படிதான் மேற்கண்ட பரிசோதனை நடந்தது. பரிசோதனையின் முடிவில் கீழ்காணும் கண்டுபிடிப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டன:
பராமரிப்பு போதவில்லை. அத்தனை பசுக்களையும் கன்றுகளையும் பராமரிக்க ஒரே ஒரு நபரும் அவருக்கு ஒரேயொரு உதவியாளருமாக இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அளிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 105 பசுக்கள் கன்றுகளுக்கும் சேர்த்து. ஒரு நாளைக்கு வெறும் 25 கிலோ புண்ணாக்கும், 25 கிலோ உளுந்தும், 25 கிலோ தவிடும் கொஞ்சம் வைக்கோலும் கொடுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். பச்சைப் புல் கொடுக்கப்படுவதில்லை. இந்த உணவானது 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமானது.
பசு மடத்தில் தேவைப்படுகின்ற அளவுக்கு இடமிருந்தாலும், மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பசுக்களைக் காப்பாற்ற பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை.
பசும்புல் கூட இல்லாமல், வெறும் 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமான உணவை 105 பசுக்களுக்குக் கொடுத்தால், அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாகக் கொடுத்தால், அவை எப்படி உயிர் வாழும்? 105 பசுக்களுக்கு வெறும் இரண்டு பணியாளர் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி நூறு பசுக்களையும் கவனித்துப் பராமரிக்க முடியும்? கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள கோவிலின் பசுமடமே இந்த லக்ஷணத்தில் இருந்தால், மற்ற கோவில்களில் உள்ள பசுமடங்களைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பின்னணியில்தான் திருமதி ராதாராஜன் அவர்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கோசாலைகளின் நிலை என்ன, கால்நடைகள் அக்கோசாலைகளில் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, மாட்டுத் தீவனங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன, அவைகள் முறையாகக் கோசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாடுகளுக்கு உணவளிக்கப்படுகிறதா, என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய, மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகமெங்கும் உள்ள அவலம்
இந்த அவலமான நிலை திருவண்ணாமலையில் மட்டுமல்ல. இது தமிழகமெங்கும் உள்ள பல ஆலயங்களிலும் தொடர்ந்து நிலவி வருவதுதான். பக்தர்கள் இறைவனிடம் பலவிதமான வேண்டுதல்களை சமர்ப்பித்து, ஆலயங்களுக்கு அளிக்கும் பசுக்களைப் பராமரிக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். மற்ற சில முக்கியமான கோவில்களில் நடந்த சில அராஜகங்களையும் பார்க்கலாம்.
5000 பசுக்கள் மாயமான திருச்செந்தூர் கோவில் கோசாலை
கடந்த 2012-ம் வருடம் நவம்பர் மாதம் தணிக்கைத்துறை ஆய்வு செய்யப்பட்டதில், திருச்செந்தூர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய 5000க்கும் மேற்பட்ட பசுக்கள் மாயமானது தெரிய வந்தது. பக்தர்கள் வழங்கிய பசுக்களின் நிலை குறித்து, தணிக்கை செய்யப்பட்டபோது, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான பதில் இல்லை. பக்தர்கள் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி உயரும்போது அவற்றைப் பராமரிக்க தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கே பராமரிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வதில் பல விதிமுறை மீறல்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் தனியார் கோசாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பற்றிய முறையான ஆவணங்கள் இல்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. (ஆதாரம்: - தினமலர் – 30 நவம்பர் 2012)
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட கோசாலை, கீழ நாழுமூலைகிணற்றில் உள்ளது. இங்கே 22-10-2010 அன்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்துள்ளது. இங்கு பராமரிக்கபட்டு வரும் பசுக்கள் நோய் கண்டால் அதை கவனித்துக்கொள்ள கால்நடை மருத்துவர்களும் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த இடங்களை எல்லாம் அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிரோ ஜீப் ஒன்றையும் வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது அங்கு ஓரு பசுமாடு கூட கிடையாது கோசாலை இருந்த இடம் சீமைக்கருவேலி மரங்கள் உள்ள சோலையாகவும் சமூக விரோதிகள் புழங்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அந்த பொலிரோ ஜீப்பில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காகச் செலவான திருக்கோவில் பணம் ஓரு கோடி ரூபாய்கு மேல்! (ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல்)

நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமான ஸ்ரீரங்கம் கோவில் கோசாலை
மற்றொரு புகழ் மிக்க கோவிலான ஸ்ரீரங்கம் கோவிலிலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமாகியுள்ளன. பக்தர்களால் கொடுக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, புதியதாக வந்த பசுக்களுக்கு உணவளிக்காமல் அவற்றை உடல்நலன் குன்றிப்போய் இறக்கச்செய்து, அவை நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டி, அவற்றை சுடுகாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து வெட்டப்பட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் உள்ள பல இறைச்சிக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு நாளைக்கு இவ்வாறு இரண்டு அல்லது மூன்று பசுக்கள் அனுப்பப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சில பசுக்கள் நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், பல பசுக்கள் அந்தக் கணக்கில் கூட இல்லை. (குமுதம் ரிப்போர்ட்டர் – 27-12-2007)
இந்தக் கோவிலிலும் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரே ஆண்டில் 105 பசுக்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
பழனி ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலை மர்மங்கள்
hrce palani
பழனியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது பழனி கோவிலிற்குச் சொந்தமான கோசாலை. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையாகும். அதாவது, பல்வேறு கோவில்களில் இடமில்லாத காரணத்தால் எண்ணிக்கை அதிகமாக உள்ள பசுக்களை இங்கே கொண்டுவந்து பராமரிப்பு செய்யப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கோசாலை. கோசாலை இருக்கும் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த மார்ச்சு மாதம் அங்கே ஒன்பதே ஒன்பது (9) மாடுகள் தான் இருந்தன. அந்த 9 பாடுகளில் 3 காளைகள் 6 பசுக்கன்றுகள். 3 காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும் 20 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த 4-ம் தேதி சென்ற போது ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்தார். கால்நடை அலுவலர் (Cattle Officer) திரு.திருப்பதி அவர்கள் வெளியே சென்றிருந்தார். நமது குழுவினர் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களுக்கு மேல் அங்கே இருந்த போதும் அவர் வரவில்லை.

அந்த இடம் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடமாக இருக்கிறது. கோசாலையில் நமது குழுவினர் பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்றார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம். அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம் அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம் ஒவ்வொரு பசுவிற்கும் ரூ.1000/- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்னால் 300 பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்ததாகவும் தெரிய வந்தது.
இது விதி முறைகளுக்குப் புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல், இவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் முறையான அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி தானமாக வருகின்ற பசுக்களை சுய உதவிக்குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட பக்ஷத்தில் பக்தர்களிடம் ஏன் ரூ.1000/- பராமரிப்புக் கட்டணம் வாங்க வேண்டும்? அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா? அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது? சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள்? விற்கிறார்களா அல்லது பராமரிக்கிறார்களா? விற்கிறார்கள் என்றால் ஏன்? அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர்? அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த லக்ஷணத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கோசாலையில், 2011 வரை கோசாலைக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள்! கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உடைய கோவில்களில் பக்தர்கள் தானமாகக் கொடுக்கும் பசுக்களையும் கால்நடைகளையும் பராமரிக்க முறையாக கோசாலைகள் அமைத்து நடத்த முடியாத அறநிலையத்துறை ஒன்று இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
மீறப்படும் விதிமுறைகள்
அதிக அளவில் பசுக்கள் பக்தர்களால் தானம் செய்யப்படும்போது, அவற்றைப் பராமரிக்க தனியார் நடத்தும் கோசாலைகளுக்கு வழங்கப்படும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்விஷயத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அறநிலையத்துறை பசுக்களை அனுப்பும் தனியார் கோசாலைகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்ற பசுக்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பசுவும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டுத் தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் கோவிலுக்கும் தரப்பட வேண்டும்.
தனியார் கோசாலைகள், மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியாருக்கு வழங்கப்பட்ட பசுக்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அறநிலையத்துறை அதிகாரிகள் களஆய்வு செய்ய வேண்டும்.
அறநிலையத்துறை அதிகாரிகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளுக்கு மட்டுமே பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத கோசாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்படாத தனியார் கோசாலைகளுக்கு, தெரிந்தெ பசுக்களை அனுப்பும் அறநிலையத்துறை அதிகாரிகள், அவற்றின் பராமரிப்பை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறாகத்தான் இருக்க முடியும்.
அழிக்கப்படும் ஆவினங்கள்
hrce gow
ஒரு பக்கம் அறநிலையத்துறையினரின் அலக்ஷியத்தால் ஆவினங்கள் அழிந்துகொண்டிருக்க, மறுபக்கம் இறைச்சிக்காகவும் தோல் பொருட்களைத் தயாரிப்பதற்காகவும் அவை லக்ஷக்கணக்கில் கடத்தி அழிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப்பசுக்களையும், கன்றுக்குட்டிகளையும் கூட கடத்தல்காரர்கள் இறைச்சிக்காகக் கடத்துகின்றனர்.
பழம்பெருமை வாய்ந்த நமது நாகரீகத்தில் கால்நடைகளுக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அவை நம்முடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. பசுவைப் பால் கொடுக்கும் தாயாகப் பாவித்தும், எருதுகளையும் காளைகளையும் உழவுக்குக் கைகொடுக்கும் குடும்ப அங்கத்தினராகவும் கருதி வந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் கால மற்றத்தினாலும், அன்னிய கலாச்சார மோகத்தினாலும், அவற்றை நாம் அன்னியப்படுத்தத் தொடங்கிவிட்டோம். எப்போது டிராக்டர் கண்டுபிடிக்கப்பட்டு பயனுக்கு வரத்தொடங்கியதோ அப்போதே எருதுகளையும் காளைகளையும் நாம் மறக்கத்தொடங்கி விட்டோம். ஆண் கன்றுகளைப் பயனில்லை என்று விற்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம். வாழ்நாளெல்லாம் நமக்குப் பால் கொடுத்துத் தாய்க்குச் சமமாக இருந்த பசுக்களையும், அவைகளின் பால்தரும் சக்தி குறைந்து போனவுடன் நன்றி மறந்து அவற்றையும் அடிமாடுகளாக விற்கத்தொடங்கி விட்டோம். நமது புறக்கணிப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் நம்மாலேயே வேறு பல பிரச்சனைகளையும் கால்நடைகள் சந்திக்கின்றன.
ஆவினங்களை முழுவதுமாகப் புறக்கணிக்கும் அரசு
லக்ஷக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காகவும் தோல் பயன்பாட்டிற்காகவும் கடத்தி அழிக்கப்படுவதை எப்படி கண்டுகொள்வதில்லையோ, அதே போல் அறநிலையத்துறையின் அலக்ஷியத்தால் துன்புற்று அழியும் பசுக்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தொடரில், இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது சமர்ப்பிக்கப்பட்ட, 2014-15 ஆண்டுக்கான கொள்கை அறிவிப்பில், “பசு” என்கிற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயல்லிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் “பசு” என்கிற வார்த்தை ஒருமுறை கூட இடம் பெறவில்லை.
நம்பிக்கை தரும் உயர் நீதிமன்ற உத்தரவு
அறநிலையத்துறையாலும் அலட்சியப்படுத்தப்பட்டு, அரசாலும் புறக்கணிக்கப்பட்டு துன்பத்தில் உழன்று கிடக்கும் ஆவினங்களக்கு மறுவாழ்வு பெற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது மூவர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு. அம்மூவர் குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை அரசு அலக்ஷியம் செய்யாமல், அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பக்ஷத்தில் பொது மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நன்றி- vsrc


இராமநாதபுரத்தில் 31.08.14 அதிகாலை 1.00 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வந்த 78 பக்தர்கள் இராமநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டு திருப்புல்லனை வழியாக கண்ணியகுமரி பயணம் செய்த போது எதிர் பாராத விதமாக பேருந்து தீ விபத்துக்குட்பட்டு சின்னபின்னமானது. இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயெ பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் இராமநாதுபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தென்தமிழக மாநில செயலாளர் ஆடலரசன் மற்றும் சங்க ஸ்வயம் சேவக சகோதரர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்தனர்

மேலும் படுகாயம் அடைந்த நபர்களை மருத்துவமனை சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய துண்டு மற்றும் உடைகள் வழங்கினர். மேலும் அனைத்து பொருட்களையும் இழந்து பாிதவித்த பக்தர்களுக்கு திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் திரு முனியான்டி.மற்றும் பாஜக ஒன்றிய தலைவர் திரு இராமச்சந்திரன் ஆகியோர் அவர்களுக்கு காலை உணவு மற்றும் தேநீர் கொடுத்து உதவினர் மற்றும் திருப்புல்லானி வாழ் மகளீர் அமைப்புகள் அந்த பகதர்களுக்கு புரியாத மொழியில் ஆறுதல் கூறியது அனைவரின் நெஞசையும் நெகிழ வைத்தது.

மேலும் இராமநாதபுரம் வஉசி நகர் விநாயகர் இந்து முன்னணி கமிட்டியை சார்ந்தவாகள் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் பயணம் செய்வதற்கான் பைகள் போன்றவற்றை மினி லாரி மூலம் தெரு வாழ் பொது மக்களிடம் சேகரித்து கொண்டு வந்து கொடுத்தனர். அரிமா சங்கத்தை சார்ந்த திரு சதிஷ் அவர்கள் மதியஉணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இவர்களின் பயண இதரச் செலவிற்காக ரவிசங்கர்ஜி பக்தர் திரு.இராமேஷ் மற்றும் உள்ளுர் சுய உதவிக் குழக்கள் மூலம ரூ 10.000 பணமாக கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் மூலம் இரண்டு பேருந்துகளில் இவர்களை சென்னைக்கு பேருந்துகளில் அனுப்பி அங்கிருந்து இரயில் மூலம் கொல்கத்தா செல்ல ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்.ஆர்.எஸ் தென் மாநில செயலாளர் ஆடவரசன் மற்றும் ஜில்லா சாரிரீக் ப்ரமுக் காஜேந்திரன். மற்றும் ஜில்லா ப்ரச்சார்பரமுக் சுதேசி நா. ஆறுமுகம் ஆகியோருடன் ஸவயம் சேவக சகோதரார்கள் சேர்ந்து செய்தனர்.

நன்றி - ஆறுமுகம் நாகலிங்கம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி அருகே மேற்குவங்க சுற்றுலாப் பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சனிக்கிழமை மாலை ராமேசுவரம் வந்தது. அங்கிருந்து இரவு கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே தாதனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் குளிர்சாதனத்தில் தீப்பற்றியுள்ளது. தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது. இதில், பேருந்தில் இருந்த 2 ஆண், 2 பெண் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் முழுமையாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.


வ.களத்தூர் முக்கியஸ்தர் திரு.தங்கவேல் அவர்களின் மகனும் நமது விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளராகிய செந்தில் திருமணம் இன்று காலை இனிதே நடந்து முடிந்தது...
மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்...

Wednesday, 27 August 2014

உலகளாவிய பயங்கரவாதம்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-1
இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சந்திக்கும் பெரும் சவாலாக இருப்பது பயங்கரவாதம். உலகளாவிய பயங்கரவாதம் பெருகிக்கொண்டே போகிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்த இஸ்ரேல்-அரபு பிரச்சனை இன்னும் முடிவு பெறாமல் இருப்பதற்கு இந்த பயங்கரவாதம் ஒரு காரணம். அதே போல இரான் – இராக் நாடுகளுக்கு இடையே 1980-ல் ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதும் பயங்கரவாதத்தினால்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்தினால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பயங்கரவாதம் ஒரு மாபெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கிழக்கு நாடுகளும் விதிவிலக்கல்ல. நமது நாட்டிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பயங்கரவாதச் செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது. ஆஃப்கானிஸ்தான், சிரியா, இராக், உக்ரைன், பாலஸ்தீன் என்று உலகில் பல இடங்களில் பயங்கரவாதம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இந்தியாவில் பயங்கரவாதம்
நமது இந்தியாவும் பயங்கரவாதத்தினால் மிகவும் கொடுமைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில், பாரதப் பிரிவினையின் போது ஆரம்பித்த பயங்கரவாதப் பிரச்சனை இன்று வரை தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், நமது நாட்டைச் சிதறடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில், தன்னுடைய மண்ணில் தான் வளர்த்து வரும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம்; பல்லாயிரக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் துன்பமுறும் வகையில் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். லஷ்கர்-இ-தையபா, ஜமாத்-உத்-தவ்வா, ஜெயிஷ்-இ-முகம்மது போன்ற இயக்கங்கள் மூலமாக பாகிஸ்தானும் பங்களா தேஷும் நமது நாட்டின் மீது பயங்கரவாதத்தை ஏவி விடுகின்றன; ஆஃப்கானிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அல்-கைதா இயக்கமும் அவ்வப்போது நமது நாட்டைக் குறிவைத்து இயங்குகிறது.
நமது நாட்டில் இருக்கும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்தியன் முஜாஹிதீன், அல் உம்மா போன்ற பல உள்நாட்டு அமைப்புகளும் அன்னிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக அமைதியாக இருந்துகொண்டிருந்த இந்திய முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருக ஆரம்பித்ததற்கு இந்த உள்நாட்டு அமைப்புகளே காரணம். அன்னிய இயக்கங்களால் ஊக்குவிக்கப்பட்டு வரும் இந்த உள்நாட்டு அமைப்புகள், முஸ்லிம் மக்களிடையே அடிப்படை வாதத்தையும், மாற்று மதத்தினர் மீதான துவேஷத்தையும், பிரச்சாரத்தின் மூலம் பெருக்கி வருகின்றன. இதனால், மக்களிடையே நிலவி வந்த மதநல்லிணக்கம் குறைந்து பிணக்கங்கள் அதிகமாகி வருகின்றன. ஆங்காங்கே மத வன்முறைகள் வெடிப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்தியா சந்திக்கும் புதிய பிரச்சனை
இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகப் பெருக, இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் பயங்கரவாதத்தின் மீதான கவர்ச்சி அதிகரித்து வருகின்றது. அந்தக் கவர்ச்சியை நாடெங்கும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தூபம் போட்டு வளர்த்து வருகின்றன. இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிரியா, இராக் போன்ற இடங்களில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து வருகின்றனர். காஷ்மீர், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் அந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இராக் நாட்டில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எல். (ISIL - Islamic State of Syria and Levant) என்கிற இயக்கத்திலும் இந்திய இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர். காஷ்மீரத்திலிருந்து 26 வயதான அதில் ஃபயாஸ் என்கிற இளைஞன் சேர்ந்துள்ளான். அவனைப் போலவே, மஹாராஷ்டிரா, கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து 10 இளைஞர்கள் இஸ்லாமிய காலிஃபேட் அமைக்க உதவும் எண்ணத்துடன் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் உளவுத்துறை சொல்கிறது. இந்த இளைஞர்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
ஏன், தமிழகத்திலிருந்துகூட சில இளைஞர்கள் சென்று அவ்வியக்கங்களில் சேர்ந்துள்ளனர். கடலூரைச் சார்ந்த குல் முகம்மது மரக்காச்சி மரைக்காயர் என்பவர் முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து வந்து தற்போது கடலூரில் இருக்கிறார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த உஸ்மான் அலியின் 37 வயது மகன் ஹாஜா ஃபக்ருதீன் தனது மனைவி ஆயிஷா சித்திக்கா, மூன்று குழந்தைகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராக் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு தன் தந்தைக்கு ஃபோன் மூலம் தெரிவித்துவிட்டு இணைப்பையும் துண்டித்து விட்டார். இவர் சிங்கப்பூரில் சூப்பர் மார்கெட் ஒன்றில் நல்ல பணியில் இருந்துள்ளார். இவருக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைத்தவர் மரைக்காயர். சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் இந்த ஹாஜா ஃபக்ருதீனால் மூளைச் சலவை செய்யப்பட்டு சிரியாவில் ஜிகாதிகளாகப் பணிபுரிவதாகவும் செய்தி வந்துள்ளது.
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-3
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜிகாதில் ஈடுபடும் நோக்கத்துடன் இராக் செல்ல முற்பட்ட ஐந்து இளைஞர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான ஆதரவு பெருமளவில் அதிகரித்து வருவது காவல்துறைக்குக் கவலை அளித்து வருகிறது. சென்ற மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சுமார் 25 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் சின்னம் குறிக்கப்பட்ட பனியன்களை அணிந்து கொண்டு பெரிய மசூதி வாசலில் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் இடம் பெற்றது. அது பின்னர் காவல்துறையின் கவனத்திற்குச் சென்று விசாரணை செய்யப்பட்டு, அப்துல் ரகுமான், ரில்வான் என இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அப்துல் ரகுமான் அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு வியாபாரம் நிமித்தமாகப் பயணம் செய்பவராம். அவரின் வேண்டுகோளின்படி, திருப்பூரில் உள்ள ஃபைய்ஸூர் ரகுமான் என்கிற இமாம்தான் அந்த பனியன்களை அனுப்பியிருக்கிறார். அவரையும் காவல்துறைக் கைது செய்தது. ஆயினும், அரசு தரப்பு சரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காததால், அவர்கள் மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இதனிடையே உத்திரப் பிரதேசம் லக்னோவில் உள்ள தருல் உலூம் நத்வா என்கிற இஸ்லாமிய நிறுவனத்தின் தலைவரான மௌலானா சையத் சல்மான் ஹுஸ்ஸைனி நத்வி என்பவர், இஸ்லாமிய காலிஃபேட் நிறுவுவதற்காக இராக் மற்றும் சிரியாவில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து 5 லக்ஷம் சன்னி முஸ்லிம் இளைஞர்களை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களால் பெரிதும் போற்றப்படும் இஸ்லாமிய அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த மாதிரியான இமாம்களும், மௌலானாக்களும் இளைஞர்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இவர்களது பேச்சினல் கவரப்பட்டு இராக் செல்லத் தயாரக இருப்பதும் இந்திய அரசாங்கத்திற்கும், உளவுத்துறை மற்றும் காவல்துறைகளுக்கும் பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.
உலகின் பொது பிரச்சனை
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-4
தங்களுடைய மத நூலையும் மதக் கோட்பாடுகளையும் சுட்டிக்காட்டி, அடிப்படைவாதம் புரிந்து, மூளைச் சலவை செய்து, மௌலானாக்கள் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதையில் வழிநடத்திச் செல்வது உலகெங்கும் நடந்து வருகின்றது. பல நாடுகளிலிருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தின்பால் வசீகரிக்கப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கைதா, போகோ ஹராம் போன்ற இயக்கங்களில் சேர்ந்து ஜிகாதில் ஈடுபட்டு வருகின்றனர். உலகையே இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கங்களின் முதன்மையான குறிக்கோள். அந்த நோக்கத்தில்தான் இவர்கள் உலகின் பல பகுதிகளில் ஜிகாத் என்னும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகின்றனர். உலகில் ஜனநாயக முறைப்படி இயங்கி வரும் நாடுகளில் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்கள் மூலம் வஹாபிய தீவிரவாத கலாச்சாரம் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. இதுவே இன்று உலக நாடுகள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
பயங்கரவாத இயக்கங்கள் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பல வருடங்களாகத் தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு, அவர்களுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும் எவ்வாறு கிடைக்கிறது? என்ன மாதிரியான ஆயுதங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன? இவர்களுக்கு உதவுபவர்கள் யார், யார்? ஒவ்வொரு இயக்கத்திற்கும் தொடர்பு உண்டா? இந்த மாபெரும் வலைப்பின்னலில் தொடர்புள்ள நாடுகளும், பிரமுகர்களும் யாவர்? இந்தக் கேள்விகளுக்கெல்லம் பதில் தேடும் முகமாக ஆராய்ந்து பார்க்கும்போது, நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. உடல் சில்லிட்டுப் போகிறது; மனம் மரத்துவிடுகிறது. இந்த பயங்கரவாதத்திலிருந்தும் அதை ஊக்குவிக்கும் மரண வியாபரிகளிடமிருந்தும் இவ்வுலகம் தப்பிக்குமா என்கிற சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது.
ஆயுதங்களைக் கடத்தி விற்கும் ராட்சத வியாபாரிகள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-6
உலகெங்கும் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்குப் பலவிதமான ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்வதற்கென்று ராட்சத வியாபாரிகள் குழு ஒன்றும் இயங்கி வருகின்றது. சர்வதேச அளவில் சட்டத்தின் படியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் இந்த வியாபரிகள் இயங்கி வருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஃபரேஸ் எம் மன்னா (FARES M MANNA): மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இவர் இயங்கி வருகிறார். பல்கேரியா, க்ரொயேஷியா, உக்ரைன், அஸர்பைஜான், மோல்டோவா ஆகிய நாடுகளில் உள்ள கள்ள ஆயுத மார்கெட்டுகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இயங்கி வருகிறார். அல்- ஷப்பாப் (AL-SHABBAB) போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இவர் ஆயுதங்கள் வழங்கி வருகிறார்.
முகம்மது சையத் (என்கிற) ஆடம் (MOHAMMED SAID ALIAS ATOM): சோமாலியா நாட்டில் சனாக் என்கிற இடத்தில் ஒரு சிறிய பயங்கரவாத குழுவை நடத்தி வருகிற இவர், யேமன் மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து அல் ஷப்பாப் இயக்கத்திற்கு வழங்கி வருகிறார்.
ஆத்னன் கஷோக்கி (ADNAN KHASHOGGI): இவர் சௌதி அரேபியாவில் ஆயுத வியாபாரியாக இருந்து பின்னர் தொழிலதிபராக மாறியவர். 1985 முதல் 1987 வரை அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து இரானுக்கு வழங்கியவர். எண்பதுகளில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டவர். இப்போதும் மொரோக்கோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்துகொண்டே ஆயுத வியாபரிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துபவராகச் செயல்பட்டு வருகிறார்.
செமியான் மொகிலெவிச் (செமிஒன் மொகிலெவிச்) : உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரான இவர் “தாதாக்களின் தாதா”(Boss of Bosses) என்று அழைக்கப்படுகிறார். ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் கடத்துவதற்காகவே போலி நிறுவனங்களை முன்னிறுத்தி அவைகள் மூலம் செயல்படுகிறார். உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் முக்கியமான அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, ஸ்லொவேகியா, போலந்து ஆகிய நாடுகளின் வழியாக இயங்கி வருகிறார்.
விக்டர் பௌட் (VIKTOR BOUT): ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவரான விக்டர் பௌட், கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பயங்கரவாதம் நடந்துகொண்டிருக்கும் அனைத்து இடங்களுக்கும் ஆயுதங்கள் வழங்கி வருகிறார். பயங்கரவாத இயக்கங்கள் எப்போது எந்தவிதமான ஆயுதங்கள் கேட்டாலும் உடனே ஏற்பாடு செய்து கொடுப்பதில் வல்லவர் இவர். அந்த அளவுக்கு இவருடைய தொடர்புகளின் வலைப்பின்னல் விரிந்து பரந்து உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பயங்கரவாத இயக்கத்தவர்கள் இவரை “தபால் காரர்” (The Mailman) என்று அழைப்பது வழக்கம்.
ஸ்லொபோதன் தெஸிக் (SLOBODAN TESIC): செர்பியாவைச் சேர்ந்தவரான இவர், லைபீரியா, இராக், லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வழங்கிவருகிறார். 2009-ம் ஆண்டு, 95 மில்லியன் டாலர் அளவுக்கு ஸ்னைபர் ரைஃபில்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை, யேமன் நாட்டு ராணுவத்திற்கு வழங்கியுள்ளார். பின்னர், அவற்றில் பல கள்ள மார்கெட்டுகளுக்கும் வந்துள்ளன.
ஸர்கிஸ் சொகனாலியன் (SARKIS SOGHANALIAN): லெபனான் நாட்டில் பிறந்த அமெரிக்கரான இவர் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை சத்தாம் ஹுஸ்ஸைன் இராக் அதிபராக இருந்தபோது வழங்கியுள்ளார். நிகராகுவா, அர்ஜண்டைனா, யேமன் மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கும் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் ஏராளமான ஆயுதங்கள் வழங்கியுள்ளார். இவர் ஒரு விமான நிறுவனமும் நடத்தி, அந்த விமானங்கள் மூலம் கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ‘ஏகே’(AK) ரக இயந்திரத் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதிகளில் வானிலிருந்தபடியே விமானத்திலிருந்து இறக்கியவர்.
மோன்ஸெர் அல் கஸ்ஸார் (MONZER AL-KASSAR): சிரியா நாட்டைச் சேர்ந்த இந்த ஆயுத வியாபாரி, இராக் மற்றும் சோமாலியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வழங்கியவர். எழுபதுகளில் போலந்து நாட்டிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி ஏமன் அரசுக்கு வழங்கிய இவர், அதன் பிறகு உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரியானார். இவர் ”மரபெல்லா இளவரசர்” (Prince of Marabella) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். 1984-ல் இங்கிலாந்திலிருந்து விரட்டப்பட்டார். எந்த நாட்டிலெல்லாம் ஐ.நா.சபை ஆயுதங்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதோ, அந்த நாடுகளுக்கெல்லாம் ஆயுதங்களை வழங்கி நல்ல லாபம் பார்த்து வருகிறார் இவர்.
பயங்கரவாதிகளிடம் புழங்கும் முக்கியமான ஆயுதங்கள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-5
விமான எதிர்ப்பு துப்பாக்கி (ZU-23-2 ANTI-AIRCRAFT GUN): இதன் விலை 100,000 டாலர். இது 2.5 கிலோமீட்டர் உயரத்தில் தாழ்வாக பறந்து கொண்டிருக்கும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை வீழ்த்த வல்லது. இது ஐ.எஸ்.ஐ.எல், ஹமாஸ் மற்றும் சிரியா, லிபியா ஆகிய நாடுகளின் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரிடம் உள்ளது.
பிஜிஎம்-71 டோவ் (BGM-71 TOW): இதன் விலை 80,000 டாலர் முதல் 2 மில்லியன் டலர் வரை. இது தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை வீழ்த்தும் ஏவுகணையாகும். 4200 மீட்டர் தொலைவில் உள்ள பீரங்கிகளை வீழ்த்த வல்லது. அமெரிக்கத் தயாரிப்பான இந்த ஏவுகணை ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாத இயக்கத்தின் வசம் உள்ளது.
பக் ஏவுகணைகள் (BUK MISSILE SYSTEM): முன்னாள் சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த ஏவுகணைத் திட்டம் தரையிலிருந்து வான் நோக்கி, மேலே பறந்துகொண்டிருக்கும் இலக்கைத் தாக்க வல்லது. சுமார் 18 மைல்கள் உயரத்தில் இருக்கும் இலக்கை ராடார் உதவியுடன் வீழ்த்தவல்ல இந்த ஏவுகணையின் விலை 60 மில்லியன் டாலர். சமீபத்தில் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் எம்.ஹெச்-17 (MH17) விமானம் தாக்கப்பட்டது இந்த ஏவுகணையினால்தான். இந்த ஏவுகணை, உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அல்-கைதா, அன்ஸார் டைன் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் லிபியாவில் உள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து இதை வாங்குகிறார்கள்.
டி-55 பீரங்கி (T-55 TANK): இந்த பீரங்கியின் விலை 44,500 டாலர்கள் முதல் 50,000 டாலர்கள் வரை. சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கைக்கூட சுலபமாகத் தாக்கி வீழ்த்த வல்லது. இது ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் சூடான் நாட்டு கிளர்ச்சியாளர்களிடம் இருக்கிறது. சிரியாவிடமிருந்து சுமார் 30 பீரங்கிகளை ஐ.எஸ்.ஐ.எல் கைப்பற்றியது.
டி.எஸ்.ஹெச்.கே இயந்திரத் துப்பாக்கி (DSHK MACHINE GUN) : இதன் விலை 3000 டாலர்கள். இந்த கனமான இயந்திரத் துப்பாக்கி 2000 மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது. ஒரு நிமிட நேரத்தில் 600 குண்டுகளை இதன் மூலம் செலுத்தி இலக்கைச் சுடலாம். இது ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் தாலிபான் பயங்கரவாதிகளிடம் உள்ளது.
எம் 60 பிற்சுழற்ச்சியற்ற துப்பாக்கி (M 60 RECOILLESS GUN) : யுகோஸ்லேவியாவில் தயாரிக்கப்பட்டு குரோயேஷியா கிளர்ச்சியாளர்களால் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கட்த்தப்படுகிறது இந்த பீரங்கி எதிர்ப்பு துப்பாக்கி. சுமார் 1000 மீட்டர் தொலைவில் நகரும் இலக்கைச் சுட்டு வீழ்த்த வல்லது. சிரியா கிளர்ச்சியாளர்களிடமும், ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளிடமும் இருக்கும் இந்த ஆயுதத்தின் விலை குறிப்பிடப்படவில்லை.
ஆர்.பி.ஜி 6 க்ரினேடுகள் செலுத்தும் துப்பாக்கி (RBG 6 MULTIPLE GRENADE LAUNCHER) : தோளில் வைத்து இயக்கக்கூடிய இந்த மென்கன க்ரினேட் துப்பாக்கி 400 மீட்டர் முதல் 500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. லிபியா நாட்டின் கள்ளச் சந்தைகளில் கிடைக்கிறது. இது ஐ.எஸ்.ஐ.எல், போகோ ஹராம், ஹமாஸ் மற்றும் அல்-கைதா பயங்கரவாதிகளிடம் உள்ளது. இதன் விலை 2000 டாலர்கள்.
ஆர்.பி.ஜி 7எஸ் (RPG 7S): இது தோளில் வைத்து இயக்கக்கூடிய பீரங்கிக்கு எதிரான ஏவுகணைத் துப்பாக்கி. சுமார் 920 மீட்டர் தொலைவில் இருக்கும் பீரங்கிகளைத் தாக்கி வீழ்த்த வல்லது. சோமாலியா மற்றும் யேமன் நாடுகளிலிருந்து வரவழைக்கப் படுகிறது. இதன் விலை 2000 டாலர்கள். இது ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, தாலிபான் மற்றும் போகோ ஹராம் ஆகிய பயங்கரவாதிகளிடம் இருக்கிறது.
ஆர்.பி.ஜி. 22 (RPG 22): இது ஒற்றை-விசை பீரங்கி-எதிர்ப்பு ராக்கெட் செலுத்தி. இதன் விலை 200 டாலர்கள். லிபியா மற்றும் யேமன் நாடுகளின் சந்தைகளில் கிடைக்கும் இந்த ஆயுதம், ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, தாலிபான், போகோ ஹராம், அல் ஷப்பாப் மற்றும் எ.கியு.ஐ.எம் (AQIM) ஆகிய பயங்கரவாத இயக்கங்களிடம் உள்ளது.
ஸ்டிங்கர் மேன்பேட் (FIM-92 STINGER MANPAD): இதன் விலை 40,000 டாலர். இது பூமியிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணை. தோளில் வைத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் ஆயுதம். கிட்டத்தட்ட 3000 மீட்டர் தூரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வீழ்த்த வல்லது. இந்த ஆயுதம் ஐ.எஸ்.ஐ.எல், போகோ ஹராம் மற்றும் உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரிடம் உள்ளது.
ஸ்ட்ரெலா (STRELA 2): இதன் விலை 45,000 டாலர். தோளில் வைத்துக்கொண்டு இயக்கப்படும், தரையிலிருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை. இதன் முனையில் வெடிக்கக் கூடிய குண்டுகளையும் கொண்டது. லிபியா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த முகம்மது கட்டாஃபி விரட்டப்பட்ட பிறகு அந்நாட்டிலிருந்து கடத்தப்பட்டது இந்த ஆயுதம். தற்போது பாலஸ்தீனிய பயங்கரவாத இயக்கமான காஸாவிடத்திலும், இராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடமும் உள்ளது. ஏ.பி.ஏ.எம் (ABAM) இயக்கத்திடமும் உள்ளது.
குரோம் ஏவுகணை (PZR GROM MISSILES): இதன் விலை 80,000 டாலர். தரையிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணையான இது போலந்து நாட்டின் தயாரிப்பு. சுமார் 3400 மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருக்கும் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் வீழ்த்த வல்லது. உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.
ரெட் ஏர்ரோ ஏவுகணை (HJ-8 OR RED ARROW-8): இதன் விலை 2.5 மில்லியன் டாலர். பீரங்கிகளைத் தகர்க்கவல்ல டியூப் மூலம் வீசப்படும் இரண்டாம் தலைமுறை ஏவுகணையான இது, சீனாவிலும் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்படுகிறது. இது ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளிடம் இருக்கிறது.
எம்302 தரை ஏவுகணை (M302 SURFACE-TO-SURFACE MISSILE); சிரியாவில் தயாரிக்கப்படும் இந்த தரை ஏவுகணை சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வீழ்த்த வல்லது. பாலஸ்தீனிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸ், இஸ்ரேலில் ரிஷோன், லெஸியோன், டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் ஆகிய பகுதிகளைத் தாக்க இதனைப் பயன்படுத்துகிறது. இதன் விலை குறிப்பிடப்படவில்லை.
எம்79 ஓ.எஸ்.ஏ ராக்கெட் (M79 OSA ROCKETS) : நெருங்கிய யுத்தத்தில், சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல பஸூக்கா ராக்கெட்டுகள் (Bazooka Rockets) இவை. அதிக பட்சமாக 1960 மீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய இந்த ஆயுதம், ஒரு நிமிடத்திற்கு 6 ராக்கெட்டுகளைச் செலுத்த வல்லது. யேமன் நாட்டில் உள்ள ஆயுதக் கடத்தல் வியாபாரிகளால் விற்கப்படுகிறது. இது ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, ஹமாஸ், போகோ ஹராம், தாலிபான் மற்றும் எ.க்யு.ஐ.எம் (AQIM) ஆகிய இயக்கங்களிடம் உள்ளது.
ஸ்டிங்கர் ஏவுகணை (STINGER Surface to Air Missile): இதன் விலை 1,50,000 டாலர். இது தாலிபான், அல்-கைதா ஆகிய இயக்கங்களிடம் உள்ளது.
க்ரினேட் (GRENADE) : க்ரினேட் என்று சொல்லக்கூடிய கையெறி குண்டின் விலை 7 டாலர். இந்தக் கையெறி குண்டுகள் அனைத்து பயங்கரவாத இயக்கங்களிடமும் உள்ளன.
முக்கியமான ஆயுத சந்தைகள்
சோமாலியா நாட்டில் மொகாடிஷு (MOGADISHU IN SOMALIA) என்கிற இடம், யேமன் நாடில் ஜிஹானா மற்றும் சாடா (JIHANA, SAADA IN YEMEN) ஆகிய இடங்கள், இராக் நாட்டில் பாக்தாத், பாஸ்ரா மற்றும் கிர்குக் (BAGHDAD, BASRA AND KIRKUK IN ITAQ) ஆகிய நகரங்கள், லிபியாவில் இஸ்மைத் என்னும் நகரம் (ISMAID IN LIBYA), பாகிஸ்தானில் தார்ரா கேல் மற்றும் வஸிரிஸ்தான் ஆகிய ஊர்கள் (DARRA KHEL AND WAZIRISTAN IN PAKISTAN) மற்றும் லெபனான் (LEBANON), ஆஃப்கானிஸ்தான் (AFGHANISTAN) ஆகிய நாடுகள் முக்கியமான ஆயுதச் சந்தைகளாக விளங்குகின்றன.
சுலபமாகக் கிடைக்கும் ஆயுதங்கள்
7 டாலர் விலை கொண்ட க்ரினேட் (Grenade) என்று சொல்லப்படும் கையெறி குண்டிலிருந்து 18,000 டாலர் விலை கொண்ட ஏகே-47 (AK 47) ரக துப்பாக்கி வரையிலான ஆயுதங்கள் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. 1700 டாலர் முதல் 1800 டாலர் வரை விலை கொண்ட ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஏகே-47 துப்பாக்கிகள், 500 டாலர் முதல் 900 டாலர் வரை விலை கொண்ட சீனாவில் தயாரிக்கப்படும் ஏகே-47 ரக துப்பாக்கிகள், 1000 டாலர் விலை கொண்ட எம்-16 ரக அஸ்ஸால்ட் ரைஃபில் (M 16 Assaul Rifle), 2000 டாலர் முதல் 5000 டாலர் வரை விலை கொண்ட ஆர்.பி.கே இயந்திரத் துப்பாக்கி (RPK Machine Gun), 2500 டாலர் விலை கொண்ட எம்-4 அஸ்ஸால்ட் ரைஃபில் (M-4 Assault Rfile), 1500 டாலர் முதல் 3500 டாலர் வரை விலை கொண்ட 120 மோர்டார் பீரங்கி (120 Mortars), 1200 டாலர் முதல் 2500 டாலர் வரை விலை கொண்ட 80 மோர்டார் பீரங்கி (80 Mortars), 7 டாலர் முதல் 95 டாலர் வரை விலை கொண்ட க்ரினேட் கையெறி குண்டுகள் (Grenades) ஆகிய ஆயுதங்கள் மேற்கூறப்பட்ட சந்தைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.
ஆயுதங்கள் கடத்தப்படும் பாதைகள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-7
பாதை-1:  அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளான டெக்ஸாஸ் மற்றும் அரிஸோனா (TEXAS & ARIZONA) ஆகிய இடங்களில் வசிக்கும் அமெரிக்க மற்றும் மெக்ஸிக குடிமகன்கள் (Americans and Mexican Nationals), மெக்ஸிகோ மற்றும் கரீபியன் நாடுகளுக்கு (Mexico and Caribbean nations) ஆயுதங்களை அனுப்புகிறார்கள்.
பாதை-2: உக்ரைன்(UKRAINE) மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் (ERSTWHILE SOVIET UNION NATIONS) தேவைக்கும் அதிகமாக ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எப்போதுமே கலவரத்தில் இருக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, நைஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, இராக் மற்றும் லெபனான் (SOMALIA, NIGERIA, LIBYA, EGYPT, SIRIYA, IRAQ AND LEBANON) ஆகியவற்றிற்கு உக்ரைன் நாட்டில் இருக்கும் ஆயுதக் கடத்தல் வியாபாரிகள் அனுப்புகிறார்கள். கென்யா மற்றும் தென் சூடான் (KENYA AND SOUTH SUDAN) ஆகிய நாடுகளுக்கும் இதே பாதையில் ஆயுதங்கள் அனுப்பபடுகிறது.
பாதை-3:  தஜிகிஸ்தான் (TAJIKISTAN) பகுதியில் இருக்கும் ரஷ்ய போர் வெறியர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அல் கைதா மற்றும் தாலிபான் இயக்கங்களுக்கு ஆயுதங்களை அனுப்புகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa Province) என்னும் மாகாணத்தில் இருக்கும் தர்ரா ஆதம் கேல் (Darra Adam Khel) என்னுமிடத்திலிருந்தும் தாலிபான் ஆயுதங்களை வாங்குகிறது.
மனிதத்திற்கு எதிரான பயங்கரவாதம்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-8
பயங்கரவாதத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சில சமீபத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
கடந்த மே மாதத்தில் மட்டும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் 317 அப்பாவிப் பொது மக்களைக் கொன்றுள்ளனர். போகோ ஹராம் கடந்த 6 மாதங்களில் 2000க்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 48 மணி நேரத்தில் 700 அப்பாவிகளைக் கொன்றுள்ளது ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாத இயக்கம். இராக்கில் போர் தொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வியக்கம், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 2000க்கும் அதிகமானோரைக் கொன்றுள்ளது. மேலும் யாஜிதிகள் எனப்படும் சிறுபான்மையின மக்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு அடிமைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். 50,000க்கும் மேற்பட்டோர் சிஞார் என்கிற மலைப் பிரதேசத்தில் சிறைவைக்கப் பட்டிருக்கிறார்கள். உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுக்காமல் அவர்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகுமாறு சித்தரவதை செய்யப்படுகிறார்கள்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் ஹமாஸ் இயக்கம் அப்பாவிப் பொதுமக்கள் புழங்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி வருகின்றது. பொது மக்களையும் குழந்தைகளையும் கேடையமாகப் பயன்படுத்தி இஸ்ரேலுடன் போர் புரிந்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் குழந்தைகளும் இறந்துபோகுமாறு செய்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 17-ம் தேதி எம்ஹெச்-17 (MH-17) என்கிற மலேஷிய விமானம் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 295 பேரும் இறந்துள்ளனர்.
பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் தொடர்ந்து பயங்கரவாத நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கக் கூடாது என்று தாலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து கிளர்ச்சியிலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் சன்னி பிரிவு பயங்கரவாதிகள் ஷியா மற்றும் அஹமதியா பிரிவினைரைக் கொன்று குவித்து வருகிறார்கள். அங்குள்ள ஹிந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்து விட்டனர். பாகிஸ்தானில் உள்ள பக்தூனிஸ்தான் மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில், பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்கு முறையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு லக்ஷக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானின் ராணுவமும் அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ நிறுவனமும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை இந்தியா மீது ஏவிவிட்டு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஆயுதங்கள் கடத்தி வழங்கப்படும் முறை
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராட்சத வியாபாரிகள், ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகளுடன் வலுவான அரசியல் தொடர்பு கொண்டுள்ளார்கள். அந்நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத வியாபாரிகளுடனும், இடையில் இயங்கும் சக்தி மிக்க தரகர்களுடனும், தொடர்பில் உள்ளார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் ராணுவத் தளபதிகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு.
இந்த சக்தி மிக்க வலைப்பின்னலில் கப்பல் நிறுவனங்களுக்கும் தொடர்பு உண்டு. கப்பல்கள் மூலமாக பெரும்பான்மையான ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இதற்கு உதாரணம் அமரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் உள்ளது. அந்த அறிக்கையின்படி, யேமன் நாட்டில் மட்டும் மேற்கண்டமாதிரியான 29 ஆயுத வியாபாரிகள் இயங்குகிறார்கள். யேமன் ராணுவம் சார்பாக உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆயுதச் சந்தைகளில் பலவிதமான அயுதங்களைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், யேமன் ராணுவத்திற்கு வந்தவுடன் அவற்றிலிருந்து வெறும் 20 சதவிகிதம் மட்டுமே ராணுவத்தின் கணக்கில் ஏற்றப்படுகிறது. மிச்சம் உள்ள 80 சதவிகித ஆயுதங்கள் ராணுவத் தளபதிகள் மற்றும் தரகர்களினால் பெரும் லாபத்திற்கு வெளியே விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்கப்படும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு ரகசியமாக இயங்கும் கப்பல் அதிபர்கள் மூலம் (யேமன் நாட்டைச் சேர்ந்த அபு இப்ராஹிம் என்கிற கப்பல் அதிபர் இந்தக் கடத்தலில் பெரிதும் ஈடுபடுபவர்) எகிப்து, காஸா (பாலஸ்தீன்), இராக், ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கப்பல் வழிக் கடத்தல் மட்டுமல்லாமல் வான்வழிக் கடத்தலும் உண்டு. இதைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வை குழுவின் அறிக்கை ஒன்று விவரிக்கிறது. அதாவது ஆயுதக் கடத்தல்காரர்கள், அதிகமாக மக்கள் புழங்காத, அவ்வளவாக போக்குவரத்து இல்லாத விமான நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வழியாகவும் ஆயுதங்களைக் கடத்துகின்றனர். 2007-ல் சோமாலியாவில் இயங்கிவந்த ஐநாவின் மேற்பார்வைக் குழு, ஏரோகன் ஏவியேஷன் என்கிற விமான நிறுவனத்தின் போயிங்-707 சரக்கு விமானம் மூலம், அல்-கைதாவின் சகோதர இயக்கமான அல்-ஷப்பாப் இயக்கம் பலவிதமான ஆயுதங்களைக் கடத்தியதைக் கண்டுபிடித்தது. அந்த குறிப்பிட்ட விமானம் மட்டும் போலியான போக்குவரத்துத் திட்டங்களைக் காட்டி, போலி விற்பனைப் பட்டியல்கள் கொண்டு, அஸ்மாராவிலிருந்து சோமாலியாவில் உள்ள மொகாடிஷு விமான நிலையத்திற்கு 13 முறை வந்து சென்றுள்ளது. இதில் ஆயுத வியாபாரிகளுக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பும் வெளிவந்துள்ளது.
2008-ல் சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்பட்ட எம்வி ஃபைனா என்கிற பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் (MV Faina – Registered in Panama), 33 டி-72 பீரங்கிகள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 40,000 ஏகே ரக இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் செலுத்திகள் ஆகியவை இருந்துள்ளன. அந்த ஆயுதங்கள், உக்ரைன் நாட்டிலிருந்து கெனியா ராணுவத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆவணங்களைச் சரிபார்க்கும்போது, உண்மையில் அவை உக்ரைன் நாட்டில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் தெற்கு சூடானில் உள்ள பயங்கரவாத இயக்கமான மக்கள் விடுதலைப் படைக்குக் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.
போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-11
போதைப் பொருட்களுக்குப் பதிலாக ஆயுதங்கள் வழங்கும் குழுக்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலும் உலக அளவில் இயங்கி வருகின்றது. உதாரணத்திற்கு, ஒரு கிலோ கோகெய்ன் (Cocaine) போதை பொருளுக்கு இரண்டு சீனத் தயாரிப்பு ஏகே-47 ரக துப்பாக்கிகள் கிடைக்கிறது. தென் அமெரிக்காவில் பெரிதும் பயிரிடப்படும் இந்த கோகெய்ன் போதைப் பொருளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிராக்கி அதிகம். அதே போல ஆஃப்கானிஸ்தானில் பெரிதும் பயிரிடப்படும் ஹெராய்ன் (Heroin) என்னும் போதைப் பொருளுக்கு கிராக்கி அதிகம். ஒரு கிலோ ஹெராய்னுக்கு 55 ஏகே-47 ரக துப்பாக்கிகள் கிடைக்கும்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இயங்கி வரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து கொலம்பியா வரை இந்த “போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்” வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள். அதே போல தஜிகிஸ்தான் பகுதியில் இயங்கி வரும் ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரர்கள் தாலிபான் மற்றும் அல்-கைதாவிடமிருந்து போதைப் பொருட்கள் வாங்கி அவற்றிற்குப் பதிலாக இயந்திரத் துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரைஃபில்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவற்றைத் தருகிறார்கள். உக்ரைன் பாராளுமன்ற விசாரணைக் கமிஷனின் அறிக்கைப்படி, ‘போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்’ வியாபாரத்தின் மூலம் 32 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ராணுவ ஆயுதங்களும் குண்டுகளும் திருடி விற்கப்பட்டுள்ளன.
நம்மைக் கொதிக்க வைக்கும் கசப்பான உண்மைகள்
இந்த அளவிற்கு அபரிமிதமாக போதைப் பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதும், அப்பாவி மக்கள் லக்ஷக்கணக்கில் படுகொலை செய்யப்படுவதும், போதைக்கு அடிமையாகி நாசமாவதும் தொடர்ந்து நடந்து வருவது எவ்வாறு என்று ஆய்ந்து நோக்கும்போது, வல்லரசு நாடுகளாகக் கருதப்படும் நாடுகளே தங்களிடையேயான பனிப்போரில் மேற்கண்ட தீய செயல்களை ஊக்குவித்தும், வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றில் பங்கெடுத்தும் வருகின்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.
முன்னாள் ஐக்கிய சோவியத் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி ஊக்குவித்தவை தான் அல்-கைதா மற்றும் தாலிபான் பயங்கரவாத இயக்கங்கள்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி இராக் நாட்டை ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்த அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட இயக்கம்தான் ஐ.எஸ்.ஐ.எல் என்கிற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் முன்னிறுத்தும் இஸ்லாமிய காலிஃபேட் அமெரிக்காவால் ஆதரவு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதே அமெரிக்க தற்போது அவ்வியக்கத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.எ (CIA) சிரியாவில் கிளர்ச்சியும் வன்முறையும் நிகழ்த்திவரும் ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு, பல வருடங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு, 600 டன் அளவிலான ஆயுதங்கள், வழங்கியிருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-12
அமெரிக்காவின் இந்தச் செயல்களுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் துருக்கியும் ஒத்துழைக்கின்றன.
கத்தார், துருக்கி மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையை முடிவுக்கு வராமல் பார்த்துக்கொள்வதிலும் முனைப்பு காண்பிக்கின்றன. இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவு காண்பிக்கும் விதமாக அவ்வப்போது இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலுக்குச் சாதகமாகவும் சில முடிவுகளை எடுக்கின்றன. இராக்கிலிருந்து பிரியத் துடிக்கும் குர்திக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் இருக்கிறது.
ஐக்கிய சோவியத் உடைந்ததிலிருந்தே வெறுப்புற்று இருக்கும் ரஷ்யா தற்போது முன்னாள் ஐக்கிய சோவியத் நாடுகளில் ஆங்காங்கே கிளர்ச்சிகளை மூட்டி வருகிறது. உதாரணத்திற்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களை ஊக்குவிப்பது ரஷ்யாதான்.
இந்தியாவுடன் நட்பு ரீதியாக உறவு கொண்டிருப்பதாக நடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்குப் பெரிதும் உதவி வருகின்றது. சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றது. உலக அளவில் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக விளங்கும் அளவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வருகிறது.
ரஷ்யாவைப் போலவே சீனாவும் பலவிதங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது. அதிக அளவில் ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களுடைய ஆயுத விற்பனையைப் பெருக்க பலவிதங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன.
ஒருபுறம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரடுவதாகக் காட்டிக்கொள்ளும் இந்நாடுகள்தான் மறுபக்கம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றன.
இந்தியா வல்லரசாக வேண்டியது அவசியம்
இந்த மாதிரியான சூழ்நிலையில் அமைதியை விரும்பும் இந்தியா போன்ற நாடுகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். இந்தியா பயங்கரவாதத்தினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதம் நாட்டில் எந்த வழியில், எந்தவிதமான உருவத்தில் வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அவசியம். ஆனால் தற்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால், இந்தியாவில் பயங்கரவாதம் ஓரளவிற்குக் கால் ஊன்றியுள்ளதை மறுக்க இயலாது. தேசிய அளவில் இது ஒரு புறம் இருக்க, சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்தில் ஈடுபட இந்திய முஸ்லிம் இளைஞர்கள் தயாராக இருப்பது மிகவும் கவலை தரும் விஷயம்.
நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தது போல, ஐ.எஸ்.ஐ.எல் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து இஸ்லாமிய காலிஃபேட் அமைப்பதற்காக ஜிகாத் பணியில் ஈடுபடத் தயாராக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயத்தை இந்திய அரசு தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதை முளையிலேயே தகர்த்தெறியத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இஸ்லாமிய காலிஃபேட் கொள்கைகளைப் பரப்பும் சாதனங்களும், ஐ.எஸ்.ஐ.எல் இயக்கத்தின் தலைவன் அல் பக்தாதியின் இஸ்லாமிய காலிஃபேட்டுக்கான அறைகூவல் விடுக்கும் பேச்சுக்களும் இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களிடம் கொட்டிக் கிடப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் கேட்டும் படித்தும் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் உந்துதலுக்கு உள்ளகிறார்கள் என்றும் உளவுத்துறை தெரிவிக்கிறது. சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் பயங்கரவாத மற்றும் காலிஃபேட் கொள்கை விளக்கங்களினால் கவரப்படுகிறார்கள் இளைஞர்கள். அந்த மாதிரித் தங்களைத் தாங்களே மூளைச் சலவைக்கு உள்ளாக்கிக் கொள்ளும் இளைஞர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
அதோடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பல மாநிலங்களில் பரவி வரும் அடிப்படைவாதத்தையும், இந்திய கலாச்சரத்திலிருந்து விலகி வஹாபிய கலாச்சாரத்தில் வீழ்வதையும் அழித்தொழிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். உள்நாட்டில் பல மாநிலங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களின் தேச விரோத நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, அவ்வப்போது தேவையான நடவடிகைகளை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் அவ்வியக்கங்களையும் அமைப்புகளையும் தேசிய அளவில் தடை செய்யவும் வேண்டும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப்புறங்களில் ராணுவத்தின் இருப்புகளை அதிகரித்து நடவடிகைகளையும் துரிதப்படுத்த வேண்டும். காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதத்தைப் பூண்டோடு அழிக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக அரசியல் அமைப்புச் சட்ட்த்தின் 370வது க்ஷரத்தை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தைத் தேசிய நீரோட்ட்த்தில் இணைக்க வேண்டும்.

பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
சர்வதேச அளவில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க வேண்டும். முதற்கட்டமாக தெற்கு ஆசியப் பகுதியில் தன்னுடைய தனித்தன்மையையும் தலைமையையும் மேலாதிக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும். சார்க் (SARC) நாடுகளை ஒருங்கிணைத்து தெற்கு ஆசியப் பகுதியில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, தன் தலைமையில் எடுக்க வேண்டும். அதற்கு சார்க் நாடுகளுடனான நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை வழிக்குக் கொண்டுவர மற்ற நாடுகளை ஒருங்கிணைத்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது, இந்தியா வல்லரசாவதற்கான முதற்படியாகும். அதுவே உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவிற்கு உலகின் மற்ற பிராந்தியங்களிலிருந்து ஆதரவு பெற்றுத்தரும்.
(ஆங்கிலப் பத்திரிகைச் செய்திகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து தொகுத்து எழுதப்பட்டது)
http://www.thehindu.com/news/national/chennai-youth-fighting-in-syria-jihad/article5827857.ece
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-how-isis-is-attracting-muslim-youths-through-online-merchandise/20140805.htm
http://midnightwatcher.wordpress.com/2014/07/26/india-influential-muslim-scholar-offers-to-raise-global-islamic-army-of-500000-jihadists-for-caliphate/
http://www.newindianexpress.com/magazine/The-New-Merchants-of-Death/2014/08/03/article2357941.ece 

Thanks to -vsrc

Tuesday, 26 August 2014


நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கையும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை மோடி அறிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதல் படியாக, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு "ரூபே' என்ற வங்கிப்பற்று அட்டையும் (டெபிட் கார்டு),  ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் மோடி, மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறியதாவது:
ஜன்தன் திட்டத்தின் கீழ், விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஓய்வூதியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அரசின் லட்சியம்.
இந்தத் திட்டத்தின் கீழ், 7 கோடி பேருக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமாக மாறிவரும் உலகில், வங்கியின் நவீன முறைகளையும், அதன் நிதி முறைகளையும் அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் "ஜன் தன்' திட்டத்தை 28ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அன்றைய தினம் மற்ற மாநிலங்களில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாக்களில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வ.களத்தூர் போலீசார் எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையில் நேற்று முன்தினம் இரவு வி.களத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வ.களத்தூர் கல்லாற்றில் திருட்டுத்தனமாக இரண்டு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிராக்டர்களை மடக்கி விசாரித்தனர். அதில், திருவாளந்துறை கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (49), அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (20) ஆகிய இருவரும் பர்மிட் பெறாமல் கல்லாற்றில் மண் அள்ளியது தெரிய வந்தது.
இது குறித்து எஸ்.ஐ., மாரிமுத்து வழக்கு பதிந்து இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தார். இது குறித்து பெரம்பலூர் சப்கலெக்டர் மதுசூதன்ரெட்டி மேலும் விசாரிக்கிறார்


- தினகரன்.