விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெரம்பலூர் நகரில் 30 சிலை, பாடாலூர் பகுதியில் 25, மருவத்தூர் பகுதியில் 5, குன்னம் பகுதியில் 2, மங்கலமேடு பகுதியில் 6, அரும்பாவூர் பகுதியில் 5, கை.களத்தூர் பகுதியில் 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊர்வலத்தை முன்னிட்டு, அனைத்து விநாயகர் சிலைகளும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு செல்வகணபதி கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி விழா குழுத் தலைவர் தெ.பெ. வைத்தீஸ்வரன், கெüரவத் தலைவர் கங்காதரன், துணைத் தலைவர்கள் தேவேந்திரன், பிரபு அய்யர், செயலர் சி. நடராஜன், இணைச் செயலர்கள் கதிர்வேல், சி. ராமசாமி, பொருளாளர் சிவபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை, பாலக்கரை, துறைமங்கலம் வழியாக திருச்சிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில்: இதேபோல, அரியலூர் நகரில் 4, செந்துறை பகுதியில் 2, கீழப்பழுவூர் பகுதியில் 11, திருமானூர் பகுதியில் 16, வெங்கனூர் பகுதியில் 6, தளவாய் 1, ஜயங்கொண்டம் 14, உடையார்பாளையம் பகுதியில் 6, மீன்சுருட்டி பகுதியில் 3, தா.பழூர் பகுதியில் 5, ஆண்டிமடம் பகுதியில் 5, இரும்புலிக்குறிச்சி பகுதியில் 2, விக்கிரமங்கலம் பகுதியில் 2 என அரியலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அரியலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மருதையாற்றிலும், தா.பழூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருமானூர் கொள்ளிட ஆற்றிலும், ஜயங்கொண்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அணைக்கரை ஆற்றிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-தினமணி.
RSS Feed
Twitter
Monday, September 01, 2014
வ.களத்தூர் செய்தி



0 comments:
Post a Comment