Monday, 30 June 2014



களவு போகும் தண்ணிர்
( முருகன்குடி - பெரம்பலூர் மாவட்டம்)

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சி மிகுந்த
மாவட்டம் என அனைவருக்கும் தெரிந்ததே. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு குடி நீர் திட்டம் எனும் பெயரில் மக்களை
ிசை திருப்புகின்றனர். இது வறட்சிக்கு நிரந்தர தீர்வாகாது. கூட்டு குடி நீர் திட்டம் மூலம்
பல மயில்களுக்கு அப்பால் பல கோடி செலவில் சிலருக்கு மட்டுமே தேவையான தண்ணீரை வாரி வழங்கி
மாவட்ட நிர்வாகம், எப்பொழுதும்  மக்கள் தேவயை பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் பெரம்பலூரிலிருந்து சில கிலோ மீட்டரில் உள்ள முருகன் குடி எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னால்
குவாரிக்கு விடபட்ட மலை, அளவுக்கு அதிகமாக தோண்டியாதாக கூறப்படுகிறது. அப்படி தோண்டியதால்
வற்றாத ஜீவன் போல ஊற்று எடுத்து கடல் போல காட்சி அளிக்கிறது.
சில ஆண்டுகளாக மக்களுக்காக குறைந்த அளவிலும், பணம் கொழிக்கும் கல்வி நிறுவனுங்களுக்கு மறை முகமாக குடிநீரை
வாரி வழங்கியுள்ளது. ஆனால் தற்பொழுது மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை என முழுவதும் தனியார் கல்வி
நிறுவனங்களுக்கே தாரை வார்த்துள்ளது. அந்த பகுதி மக்கள் கூட அந்த தண்ணீரை பருக முடியாத நிலை உருவாகியுள்ளது.
என் நண்பர்களுடன் அங்கு சென்ற நான் அந்த தண்ணீரை பருகிய போது சுத்திகரிகபட்ட தண்ணீரை விட
சுவையாக உள்ளது. தினமும் பல லட்சம் தண்ணீர் எடுத்தாலும் இரவுக்குள் ஊறி விடும் என அங்கு உள்ள காவலாளி
மகிழ்ச்சியுடன் கூறினார். தண்ணீர் இல்லாத காவிரியில் தண்ணீர் எடுக்க பல கோடி செலவு செய்யும் அரசும் மாவட்ட
நிர்வாகமும், சில லட்சம் செலவில் வற்றாத இந்த அமிர்தத்தை தனியாருக்கு ஏன் தாரை வார்த்தது.
சாதாரன மக்களின் சிறு பிரச்சனைகளில் கூட கடும் நடவடுக்கை எடுக்கும் அரசு துறைகள் நடவடிக்கை மகிழ்ச்சியே.
ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசும், அரசு அரசு துறை அதிகாரிகளும் என்ன செய்ய போகிறது.
இந்த செய்தியை ஊடகங்களும், நாளிதழ்களும் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் என
கேட்டு கொள்ளபடுகிறது. சமூக ஆர்வலர்கள் இதை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
 
 

Sunday, 29 June 2014

நேற்று மாலை சென்னை போரூர் அருகே மொலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இடிபாடிகளின் இடையே பல கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் RSS அமைப்பைச்சேர்ந்த தொண்டர்கள் மீட்ப்புப்பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேன்களுக்கு வழியமைப்பு செய்வது தொடங்கி மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசெல்லுதல், காஸ் வெல்டிங் செய்ய மீட்ப்பு பணிக்கு உதவியாக இருப்பதுவரை இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டருடன் கம்பிகளை வெட்டியெடுக்க உதவியாக.
தீயணைப்பு வீரர்களுடன் RSS தொண்டர்கள்.



Friday, 27 June 2014

கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிய நம் வ.களத்தூரில் இன்று மாலை மழை பெய்தது.

தமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே! ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு அரிசி வழங்கு! 

தமிழக முதல்வரின் ஆணைப்படி 3000 மசூதி / தர்க்காகளுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன் கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை?

தமிழக முதல்வர் தாம் பதவி ஏற்றபோது, எடுத்துக்கொண்ட பிரமாணத்தில் இறைவன் மீது ஆணையாக தாம் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மசூதிக்கு மட்டும் அரிசி வழங்கும் செயல் பாரபட்சமாக இல்லையா?

அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோயில்களில் கல்லா கட்டும் சில நூறு கோயில்களில் மட்டும் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக முதல்வர் அதனை அறிவித்தார் என்பது மட்டுமே அவரது சாதனையின் பங்காக இருக்கலாமா? அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில் பக்தர்களை பயமுறுத்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோயில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே அன்னதானம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் தனது ஆணைக்கு மதிப்பளிக்க தமிழக அரசின் பொது விநியோகத்துறையிலிருந்து தேவையான நல்ல அரிசியை அளித்திருக்க வேண்டாமா?

தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள ஆடி கூழுக்கு அம்மன் கோயிலுக்கும், அன்னதான திட்டம் செயல்படுத்தம் திருக்கோயில்களுக்கும் தேவையான அரிசியை அளிக்க உத்திரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது


 நம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது சென்று தரிசிப்போம்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.

பஞ்சநத நடராஜர்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
சிவகாமி அம்மையும் அழகோ அழகு.


 தனிப்பாடல் என்று இல்லாமல் மற்றொரு பாடலில் வைத்து பாடல் பெற்ற வைப்புத்தலம்.

ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்).

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணலாமே.

-அப்பர் சுவாமிகள் தேவாரம்.


இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது


நன்றி-  https://www.facebook.com/saravanan.sivathanu
 https://www.facebook.com/malar.mannan.923724

Thursday, 26 June 2014


 
அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.


எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.


- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


Monday, 23 June 2014


 தனிமனித பிரச்சினை காரணமாக செய்யப்பட கொலை போன்ற தோற்றத்தை சுரேஷ்ஜி வரை நிறுவ தமிழ் ஊடகங்களும் தமிழக ஓட்டுபொறுக்கி முதவரும் முயலுகிறார்கள். மக்களை மட்டுமல்லாது பாஜகவினரையும் நம்ப வைக்கும் வேலையில் அவர்கள் ஜெயித்துவிட்டதாகவே தோன்றுகிறது.பாஜகவின் அறிவு கொழுந்துகளில் ஒருவர் எனக்கருதப்படும் தமிழிசை யின் status அதைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் சம்பத் கூறுவதுபோல் இது இஸ்லாமிய ஜிகாதிகளின் ஒரு சதிவேலை என்று காவல்துறையும் , காவல்துறைக்கு ஏவலாளியாக இருக்கும் ஆத்தாவுக்கும் தெரியாமல் இல்லை . ஆனால் தமிழக இந்து தலைவர்கள் கொல்லப்படும் விசயத்தை ஜிகாதிகளின் சதிவேலையாக கருதி நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் இஸ்லாமியர்களின் ஒட்டு கிடைக்காது என்று கருதி திசைதிருப்பும் வேலையில் இரங்கியிருக்கிறார்கள் .

இந்த உண்மை தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாமல் போனதா.. அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. சுரேஷ்ஜி படுகொலையை தமிழக பாஜக தலைவர்கள் ஏன் CBI க்கு மாற்றக்கூடாது என்று கேட்கவில்லை.......? சரி அவர்கள்தான் கேட்கவில்லை என்றால் இந்துமுன்னணி போன்ற பாதிப்புக்குள்ளான இந்து அமைப்பு தலைவர்கள்கூட இதுபற்றி வாய் திறக்காது வருத்தமளிப்பதாக உள்ளது.

சுரேஷ்ஜிக்கு முன்னர் கொல்லப்பட்ட வர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பண்ணா இஸ்மாயில் கூட்டத்தினால் என்றால், அவர்கள் சிறையில் இருக்கும்போது யார் சுரேஷ்ஜியை கொன்றிருக்க முடியும்... என்ற வினா நம் மனதில் இயல்பாக எழுவதில் வியப்பில்லை.

நேற்று சேலம் நீதிமன்றத்தில் மூன்று முஸ்லிம்கள் குஜராத்தில் பாஜக கட்சித்தலைவரை கொலை செய்தது தொடர்பாக சரணடைந்தார்கள் என்ற செய்தியை கூர்ந்து கவனிக்கும்போது இந்து தலைவர்கள் கொலைபிரச்சினை என்பது இந்திய அளவிலானது என்பது மட்டுமல்லாது இது மிகப்பெரிய இஸ்லாமிய ஜிகாதிய சதித்திட்டத்தின் ஒரு அங்கம்தான் சுரேஷ்ஜி படுகொலை என்பது தெரியவருகிறது. அதோடு எந்தஒரு அடித்தளமும் இல்லாமல் குஜராத்தில் கொலைசெய்துவிட்டு சேலத்தில் சரணடையவேடிய காரணம் இருப்பதற்கில்லை. ஏற்கனவே கேரளா முஸ்லிம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதையும்,  இந்து தலைவர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களையும் தொடர்பு படுத்திபார்க்கும்போது இது மிகப்பெரிய ஜிகாதி சதித்திட்டம் என்பதை நாம் அறியலாம்.

சமீபத்தில் உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும்  உத்திராகண்ட் மாநிலங்களைச்சேர்ந்த பாஜக மற்றும் இந்து மத இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டுவரும் சம்பவங்களை  இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதி சத்திட்டம் என்ற முறையில் அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு காணமுடியும். அகில இந்திய அளவில் விரவிக்கிடக்கும் இந்த ஜிகாதி சத்திட்டங்களை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்போ, தேசிய தீவிரவாத தடுப்பு அமைப்போ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கண்டு களைய முடியும். பண்ணா இஸ்மாயில், போலிஸ் பக்ருதின் கூட்டம் தமிழகத்தில் கொலைகளை நிகழ்த்திவிட்டு ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்ததை நாம் மறந்துவிடலாகாது என்பதோடு அவர்கள் பிடிபட்டதாலேயே இப்படுகொலைகள் நின்றுவிடவில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

தமிழக காவல்துறை உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் என நாம் நம்பவும் முடியாது. அரவிந்த் ரெட்டி கொலையை கூலிப்படை செய்தது என்று கதைகட்டியதோடு கள்ளக்காதல்தான் காரணம் என கூறியவர்கள் தானே இந்த காவல்துறை.

இறுதியாக இந்த ஜிகாதி படுகொலைகளை மத்திய அரசின் புலனாய்வுத்துறைகள் விசாரித்தால் மட்டுமே  வரும்காலங்களில் இந்து மத அமைப்பு தலைவர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும். இதை செய்ய தமிழிசை... பொன்னார் போன்ற பாஜகவினர் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள்... இது நடக்காவிட்டால் மறுபடியும் மற்றொரு தலைவர் கொல்லப்படும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கவேண்டியதுதான் .



சென்னையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் குடும்பத்திற்கு, வேலூர் தங்ககோவில் நாராயணி பீடம் சார்பில் ரூ.5 லட்சம் கல்வி நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நாராயணி பீட மேலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் சக்தி அம்மாவால் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களும், வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்வி படிப்பதற்கு நிதிஉதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18–ந் தேதி சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணியின் திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.
அவரின் 2 பெண் குழந்தைகளின் கல்வியை தொடர்ந்து படிப்பதற்கு வசதியாக, வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தை வழங்க ஸ்ரீநாராயணிபீட அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கல்வி நிதியுதவி காசோலையை அடுத்த வாரத்தில் சுரேஷ்குமார் குடும்பத்தினரிடம் சக்தி அம்மா வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்.

பெரம்பலூரில் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் எதிரே ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த மே 4-ம் தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய விழாவையொட்டி, 19-ம் தேதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து முளைப்பாரி ஊர்வலமும், 20-ம் தேதி யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 
21-ம் தேதி 2-ம் கால யாகபூஜை, இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் கால பூஜை, தீபாராதனை, காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடு, 10 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஆ. கலியபெருமாள் உள்பட பல்வேறு பகுதிகளின் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Saturday, 21 June 2014


  • 18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்?
  • அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன? உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா? அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா?
  • கொலை செய்யப்பட்ட பாடி சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்?
  • பாடி சுரேஷ் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்த (மெயின் ரோடுகளில் மசூதி இருப்பதை காரணம் காட்டி) வழியை திடீர் திடீரென்று மாற்றி மாற்றி, வன்முறையை தூண்டியது அதிகாரிகளா? பொதுமக்களா?
  • மசூதி இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி வண்டியில் சென்ற சவ ஊர்வலத்தைக்கூட விடமாட்டேன் என்று மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது ஜனநாயக செயலா? வருங்காலத்தில் இந்துக்களும் இதுபோல் எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறை என்ன செய்யும்?
  • பல இடங்களில் இந்து முன்னணி தொண்டர்கள் மீது காவல்துறை அத்துமீறி தடியடி நடத்தியதும், கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்தியதும் யாரை திருப்திப்படுத்த?
  • கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தராதது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமில்லையா? காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தகவல் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்பது காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தானே?!
  • தடியடியின் போது காவல்துறையினர் உடன் வந்த இயக்க வண்டிகளை அடித்து நொறுக்கியதும், எந்தவித அசம்பாவிதத்தில் ஈடுபடாத மக்கள் மீது பலம் கொண்ட மட்டும் பலப்பிரயோகம் செய்தது. (இது குறித்த விடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தகுந்த நபர்களிடம் அவை சமர்ப்பிக்கப்படும்.)
  • இந்து முன்னணியின் பல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்களை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டும், அதனை அலட்சியம் செய்து, அவை போலி மிரட்டல்கள் என்ற சொன்ன அதிகாரிகள், பாடி சுரேஷ் கொலைக்கு பொறுப்பு தானே!
  • இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை எடுத்து விட்டோம் என்று பத்திரிகைகளில் பகிரங்கமா அறிவிப்பு கொடுத்த அதிகாரி செயல், கொலைகாரர்களுக்கு உடந்தை இல்லையா?
  • பாடி சுரேஷ் கொலையை பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்வதாக பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பது, மக்களை திசைத்திருப்பவோ என சந்தேகம் கொள்கிறோம். முன்னர் பக்கம் பக்கமாக பொய் அறிக்களை வெளியிட்ட உயர் காவல் அதிகாரியின் அதே கோணத்தில் காவல்துறை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
  • 21 ஆண்டுகளாக தேடப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதி ஹைதர் அலி, கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வந்த சில நாட்களில் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா? அல்லது பேரம் படிந்துவிட்டதா?
  • சிறுபான்மையினர் ஓட்டுக்காக, இந்துக்களைக் கேவலப்படுத்திய, அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள் என்னவானார்கள் என்பது சென்ற தேர்தலில் பார்த்தோம், இனி வருகின்ற தேர்தலிலும் பார்ப்போம்..
  • பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சட்டத்தின் படி செயலாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
  • சாலை விபத்தில் பலியானவர்களுக்கும், அந்நிய நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கும் துடிக்கும் அரசியல்வாதிகள், தமிழக முதல்வர் முதலானோர் இதயங்கள் - சமுதாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பாடி சுரேஷ் படுகொலைக்கு துடிக்கவில்லையே ஏன்? அவர் செய்த குற்றம் தான் என்ன?
  • மனிதாபிமானம், ஜனநாயக சிந்தனை, மனசாட்சி உள்ள அரசியல், சமுதாய தலைவர்கள் இந்தப் படுகொலையை கண்டிக்க முன் வரவேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
  • பாடி சுரேஷ் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் 10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு பணி அளிக்க மனமுவந்து முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இதற்கு முன் நடந்த இந்து முன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் படுகொலைகளில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளும், இந்தக் கொலையை செய்த கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் தமிழக அரசு தனி கவனம் கொடுத்து உடன் புலானாய்வு செய்து கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை நுண்ணறிவு பிரிவு முடுக்கிவிடப்பட்டு, செயலாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Thursday, 19 June 2014


இஸ்லாமிய பயங்கரவாதிகளை கையாலாகாத தமிழக அரசும், காவல்துறையும்  இனியும் தாமதிக்காது கைதுசெய்ய வலியுறித்தி
 இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் திரு. கே.பி.எஸ் . சுரேஷ் ஜி படுகொலையைக்கண்டித்து ஆர்பாட்டம் நடத்த இந்துமுன்னணி அழைக்கிறது....

இந்து அமைப்புகள், நடுநிலைவாதிகள், இந்துதர்மம் காக்க வேண்டுமென்ற சிந்தனை கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்....

 இந்து தர்மம் காக்க போராடிய இன்று சுரேஷ்ஜி க்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் நேரலாம்.... நம் கண்டனத்தை பதிவு செய்வோம்.... பயங்கரவாதிகளுக்கு நம் ஒற்றுமையை காட்டுவோம்.
 
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் திரு. சுரேஷ்ஜி அவர்கள் நேற்று இரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலையாளிகளை கைது செய்ய முடியாத காவல் துறை தடியடிநடத்தினர் .
  கொலையுண்ட சுரேஷ் ஜி வாழ்ந்த பாடி. பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் சென்ற போது, அங்கு மசூதி உள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்து ஊர்வலத்தை தடை செய்தனர். அதை ஆட்சேபித்த நமது மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் ஜி உட்பட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அராஜகம் புரிந்துள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஊர்வலம்.
ராமகோபாலன் ஜி காரை மறிக்கும்  காவல்துறை.
திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம்
கொலையாளியை கைதுசெய்யாத கையாலாகாத காவதுறைஅப்பாவிகள் மீதான தடியடி.
KMC யில் இருந்து அமரர் ஊர்தி கிளம்பிய காட்சி.








சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகே போராட்டம்
திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம்
காவல்துறை குவிப்பு-சென்னை.
ரமேஷ்ஜி உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி.
போலிசின் கெடுபிடி.

கோவை.
புதுச்சேரி
திருப்பூர்
திருப்பத்தூர்
வந்தவாசி
ராஜபாளையம்

Wednesday, 18 June 2014


இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10 மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச் செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாத இயக்கங்களை ஓட்டுக்காக வளர்த்தி வரும் அரசியல் கட்சிகள் இந்த தொடர்கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் 24ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணிக் காட்டிய முஸ்லீம் பயங்கரவாதியான ஹைதர் அலியை நீதிமன்றம் ஜாமீனில் வெளியேவிட்டுள்ளது. அரசின் மெத்தனப்போக்கு தொடர்வதால் தமிழகம் கொலைகளமாக மாறியுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னனியில் உள்ள அமைப்புகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த படுகொலையை கண்டித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் விடுத்த அறிக்கை:
இன்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் வைத்து இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் திரு. கே.பி.எஸ். சுரேஷ் எனும் பாடி சுரேஷ் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம் வெளியில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அமைதி பூங்காவா இருக்கிறது, பயங்கரவாதிகளுக்கு. 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன் ஜாமீன் கிடைக்கும் அளவில் தமிழகத்தின் காவல்துறை செயல்பாடு இருப்பதை கண்டு தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழக முதல்வர் அவர்கள் இக்கொலை வழக்கை நேரிடையான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி- VCRC

Sunday, 15 June 2014


பாஸ்கர் ஜி , VHP பொறுப்பாளர்.

பாஸ்கர் ஜி... பாரதமாதாவின் பாதமலர்.

ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட RSS'ன் மாவட்ட பொறுப்பாளராக பாஸ்கர் ஜி நியமிக்கப்பட்டபோது நமக்கெல்லாம் அறிமுகமானவர். இளைஞர்களுக்கே உரிய கேலிப்பேச்சு கிண்டலோடு சங்கத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தியவர். நம் வ.களத்தூரில் இன்றும் RSS சங்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற இவரும் ஒருகாரணம் .

திண்டுக்கல் மாவட்டத்திற்கு சங்கப்பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டு பணி புரிந்தபோது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் மயிரிழிலையில் உயிர் தப்பினாலும் ஒரு காலை இழந்தார்.

இத்தாக்குதலுக்கு பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டு முன்னைவிடவும் தீவிரமாக சங்கப்பணியாற்றத் தொடங்கினார் . இதனாலேயே அவரின்மீது பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டு, காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

இவரின் திறமை கண்டு சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ன் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராக  பணியை செய்ய பணித்தது . அவருக்கு இன்று பிறந்தநாள் .  நம் சங்க கலாச்சாரத்தில் தனி மனித துதிபாடலை நாம் அனுமதிப்பதில்லை என்றாலும் பாஸ்கர் ஜி போன்ற வாழும் முன்னுதாரணங்கள் நமக்கு ஒரு வழிகாட்டலாய் இருக்கிறார்கள் என்பதே இப்பதிவின் நோக்கம்....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி...

மார்க்ஸ் அந்தோணிசாமி

 இஸ்லாமியர்களின் பிச்சைகாசுக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்ட தலைவராகிய மார்க்ஸ் அந்தோணிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 'காயிதேமில்லத் பிறை' விருது வழங்குகிறது.

சென்ற வருடம் நம் வ.களத்தூரில் நடந்த இந்து-முஸ்லிம் மதமோதல் நடந்தபோது இதே மாரடிக்கும் மார்க்ஸ்'தான் உண்மை கண்டறியும் குழு என்றபெயரில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அறிக்கை தந்தது நினைவிருக்கலாம்.
http://vkalathurseithi.blogspot.in/2013/10/blog-post_25.htm

  மார்க்சின்  இது போன்ற செயல்கள் மனிதஉரிமை , சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் தான் கண்டறிந்த்ததாக கூறி ஒரு அறிக்கையை அரசு அதிகாரிகளிடமும் மூன்றாம்தர பத்திரிக்கைகளிலும் வெளியிடுவதன் மூலம்   அரசை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்ச்சியில் ஈடுபடுவதை lobbying என்ற வார்த்தை பதத்தை ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களின்  முற்போக்கு போலி மதச்சார்பின்மை முகமூடியை பொதுவெளியில் கிழித்து எறிவதே நமது இந்து தர்மத்திற்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும்.