அகமதாபாத்: குஜராத் முதல்வர் தேநீர் அருந்தியபடி காணொலிக் காட்சி மூலம் பேச்சு நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் மோடி ஆற்றும் உரை நாடு முழுவதும் டீக்கடைகளில் ஒளிபரப்பட்டது. அகமதாபாத்தில் மோடி ஆற்றும் உரை தமிழக டீக்கடைகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் வீடியோ திரை அமைக்கப்பட்டு மோடி ஆற்றும் உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காணொலிக் காட்சியில் பேசிய அவர், டீக்கடைகள் 'நாட்டின் நடைபாதை நாடாளுமன்றம்' என மோடி வர்ணித்தார்.
பல்வேறு பிரச்சனைகள் டீக்கடைகளில் விவாதப் பொருளாகி இருப்பதாக கூறிய மோடி, வியாதி போன்ற மோசமான அரசு நிர்வாகம் நாட்டை நாசமாக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறிய மோடி, கருப்புப் பணத்தை நினைத்து நாடே கவலைப்பட்டுள்ளதாக கூறினார்.
நன்றி-தினமணி.
RSS Feed
Twitter
Wednesday, February 12, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment