பெரம்பலூர்தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்படும் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் முதுகலை மாலைநேர பட்டயப்படிப்பான பி.ஜி. எல்.ஏ. மற்றும் தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் இணைந்த டி.எல்.எல்.ஏ.எல் ஆகிய கல்வித்தகுதிகள் தேவைப்படுகிறது.
மேலும் மனிதவள அலுவலர் பணிஇடங்களுக்கும் இத்தகைய கல்வித்தகுதி தேவைப்படுகிறது. ஆகவே பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிளஸ்–2 முடித்தவர்களும், முதுகலை பாடப்பிரிவிற்கும், பட்டயப் படிப்புகளும் இளங்கலை பட்டம் முடித்தவர்களும் இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம், சென்னை–5 என்ற முகவரியில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று இம்மாதம் 30–ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி-தினத்தந்தி.
RSS Feed
Twitter
Wednesday, May 14, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment