Wednesday, 8 January 2014


சென்னை;தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்ட, உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், 27 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமகளில், டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டாலும், '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும், உடனடி, '104' மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதன் தலைமையகம், சென்னை கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ளது. '104' என்ற எண்ணுக்கு, 10 இணைப்புகள் உள்ளன.இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், முதலுதவி, பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும். அருகே உள்ள மருத்துவமனை விவரம் தரப்படும். இத்திட்டம், செயல்பாட்டுக்கு வந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:
எதிர்பார்த்ததை விட, '104' திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், ஆலோசனை கேட்டு, 27,276 அழைப்புகள் வந்துள்ளன. இது எப்படி செயல்படுகிறது என, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பலரும் போன் செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இல்லை; நர்ஸ் இல்லை என்றாலும், இந்த எண்ணில் தெரிவிக்கலாம். இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
பணிக்கு வராத டாக்டர்கள், பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், வெளிப்படைத்தன்மை உருவாகும். சில மாதங்களில், தினமும், 10 ஆயிரம் அழைப்பு வரை வர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தேசிய அடையாள அட்டைக்கான இரண்டாம் கட்ட பதிவு நடைபெற்று வருகிறது பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.அ.ப., அவர்கள் தகவல்.
               
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2010 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு  தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதி  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் தங்களது தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இம்முகாமிற்கு பதிவு செய்யவரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும்.
 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் விபரங்களை பு+ர்த்தி செய்து தாக்கல் செய்திட வேண்டும். மேற்படி புதிய கணக்கெடுப்பு படிவத்தினை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
வ.களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் ஒரு நாள் மட்டுமே பொங்கல் விளையாட்டுப்போட்டி நடத்த அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி உள்ள நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .சோனல் சந்திரா IPS அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்........ வாருங்கள் உறவுகளே நம் பண்பாட்டையும் ,உரிமையையும் காக்க போராடுவோம்...... நீங்களும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு செய்யுங்கள் உறவுகளே....

மனு கொடுக்க http://cmcell.tn.gov.in/

Tuesday, 7 January 2014




வ.களத்தூரில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுவிழா நான்கு நாட்கள் நடத்திவருகிறோம்.. ஆனால் இந்தமுறை நடத்த வ.களத்தூர் காவல் நிலையத்தில் ,காவல்துறை அனுமதி வழங்க விண்ணபித்தபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் எனகூறிவிட்டார்கள் . எனவே நமது சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் .............. அதன் விபரம்.

தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு

கோரிக்கை எண் 2014/762829/KF
கோரிக்கை தேதி 08/01/2014
பெயர் S SATHIYARAJ தந்தை / கணவர் பெயர் T SELVARAJ
முகவரி 4/45, Melatheru, V.KALATHUR, Veppanthattai, V.KALATHUR,
Perambalur-621117
Tamilnadu
கோரிக்கை முதன்மை பிரிவு காவல்துறை

கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம், நான் வ.களத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் இளைஞர்களால் நடத்தப்படும் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளராக உள்ளேன் .எங்கள் ஊரில் பொங்கலை முன்னிட்டு வருடம் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்திவருகிறோம். வ.களத்தூர் காவல்துறை அனுமதியுடம் இப்போட்டிகளை நடத்திவருகிறோம் . வழக்கமாக போகிப்பண்டிகை, தைப்பொங்கல். மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நான்கு நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம் . அதுபோல் இந்த வருடமும் போட்டிகளை நடத்த அனுமதி பெற வ.களத்தூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் ஒரு நாள் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்க முடியும் என வ.களத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெற்றதில்லை. மேலும் ஒவ்வொரு முறையும் காவல்துறை அனுமதி பெற்றுதான் நான்கு நாங்களும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தவருடம் ஒருநாள் மட்டுமே நடத்த காவல்துறை அனுமதிப்பதால் எங்கள் ஊரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த போட்டிகள் நடைபெறாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. இதனால் எங்கள் ஊரின் பண்பாட்டு பாரம்பரியம் ஒழிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் கருணையுடன் இந்த மனுவை பரிசீலித்து , நான்கு நாட்களும் போட்டி நடத்த உத்தரவிடுமாறு பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.


கடலூர்:தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிர்வாகமும் இணைந்து துவங்கியுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' கடந்த நவம்பர் 16ம் தேதி மொத்தம் 103 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் மணியார்டர் அனுப்புபவரும், பெறுபவரும் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். பணம் பெற விரும்புபவர், சேவையுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய தொகையை செலுத்தியதும், 6 இலக்க ரகசிய குறியீட்டு எண் பணம் அனுப்புபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
தொடர்ந்து பணம் அனுப்பும் விவரம், பணம் பெற வேண்டிய தபால் நிலையம் குறித்த விவரங்களை பணம் பெறுபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
பணம் பெறுபவர் விவரம், அவரது அடையாளச் சான்று, பணம் அனுப்புபவர் மூலம் பெறப்பட்ட ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை, "மொமபைல் மணியார்டர் சேவை' உள்ள தபால் நிலையத்தில் காண்பித்து பணத்தை சில நிமிடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த முறையில் ஒருவர் 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். இதற்கு சேவைக் கட்டணமாக 1,500 ரூபாய் வரை 45 ரூபாய், 5,000 ரூபாய் வரை 79 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயிற்கு 112 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தற்போது இந்த சேவை மேலும் 131 தபால் நிலையங்களில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

நன்றி-தினமலர்.

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சந்தித்து தங்களின் அமைப்பில் சேர மூளைச்சலவை செய்ததாக தற்போது திடுக் தகவல் வெளியாகியிருக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பதில் உறுதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த இம்மாநில இளம் முதல்வர் அகிலேஷ் அரசின் சட்டம், ஒழுங்கு மற்றும் போலீசாரின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும் அளவிற்கு போய் விட்டது. இது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு டில்லி சிறப்பு படையினர் முஷாபர்நகர் விரைந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் உ.பி., மாநிலம் முஷாப்பர்நகர் பகுதியில் இரண்டு பிரிவினர் மோதிக்கொண்டனர். இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். பலர், வாழ்ந்த பகுதியில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்னும் பலரும் தங்களின் இல்லங்களுக்கு திரும்பாமல் உள்ளனர்.

கடந்த மாதத்தில் உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி அரியானா மாநிலம் மெவாத் என்ற பகுதியில் ஹபீஸ் ரஷீத், ஷாகித் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மதக்குருக்கள் ஆவர். இந்த இருவரும் டில்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. ஒரு போனை இடைமறித்து கேட்டபோது இந்த விஷயம் தெரிய வந்ததாக உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல முறை முஷாப்பர்நகர் சென்றதாகவும், இங்கு பலரிடம் தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்றுமாறு சிலர் கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

முஷாபர்நகரில் வசிக்கும் முகம்மது ஷாகித், அப்துல்சுவாப் உள்ளிட்ட 3 பேர் இதற்கான பணச்செலவு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரிக்க டில்லியில் இருந்து சிறப்பு செல் பிரிவு போலீசார் முஷாப்பர் நகர் விரைந்துள்ளனர்.

முன்கூட்டியே ராகுல் தகவல்: கலவரம் தொடர்பாக ஒரு கூட்டத்தில் ராகுல் பேசுகையில் முஷாப்பர்நகரில் கலவரத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முக்கிய பிரச்னை ஆகும். மத்திய அரசு இது குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும், இதற்கு அரசு பதில் சொல்லி தெளிவுப்படுத்த வேண்டும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறியுள்ளார்.

சரியாக சொன்னார் ராகுல்: இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் திக்விஜய்சிங் கூறுகையில்: ராகுல் சொன்னது சரியா போச்சு, அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எது உண்மையோ அதையே ராகுல் பிரதிபலித்துள்ளார் என்றார்.

Click Here

நன்றி-தினமணி.


செட்டிக்குளத்தில், ஜன. 12-ல் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூரில் பொங்கல் சுற்றுலா விழா நடத்துவது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது:
ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு அருகில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் கிராமிய முறையில் பொதுமக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, நாதஸ்வரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 700-க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், வாலிபால் மற்றும் 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான சாக்கு ஓட்டம் மற்றும் தேக்கரண்டியில் எலுமிச்சை பழத்துடன் ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் போட்டியில் வெற்றி பெறுபவரைத் தேர்வு செய்ய நடுவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 10-க்குள் தங்களது விண்ணப்பங்களை செட்டிக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.   ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெண்ணிலா ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. சைமன்ராஜ், செட்டிக்குளம் ஊராட்சித் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.     

நன்றி-தினமணி.
தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் 2-ம் இடம் பெற்றார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கலைச்செல்வன் (29). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மாற்றுத் திறனாளியான இவர்  பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். இவரை மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை பாராட்டினர்.

நன்றி-தினமணி.

Monday, 6 January 2014


அண்ணா பல்கலைகழகம்.
அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும்.
இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் http://online.annauniv.edu:8080/dbms/home.php  என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.
தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக பட்டியல் வெளி யிடுவது வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். 

நன்றி-தி இந்து.


பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையே சாரும்.
எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட, போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012 2013 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்; சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்தப் பணியாளர்கள்; ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்கள்; பல்கலைக்கழக மானியக்குழு, அனைத் திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள்; அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

நன்றி-தி இந்து.
பெரம்பலூரில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கலை,  இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சி மையானத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை புத்தக திருவிழா - 2014 நடைபெற உள்ளது. அதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜன. 6 காலை பேச்சுப்போட்டி, மாலை கவிதைப் போட்டி, 7-ம் தேதி காலை வினாடி- வினா போட்டி,  மாலை பாட்டுப்போட்டி, 8-ம் தேதி காலை ஓவியப் போட்டி, மாலை கதை சொல்லும் போட்டி, 9-ம் தேதி காலை தமிழ்சொல் கூறுதல் போட்டி, மாலை தமிழில் உரையாடுதல் போட்டி, 10-ம் தேதி காலை பழமொழிப் போட்டி, மாலை தனித்திறன் போட்டிகள் நடைபெறும்.
காலையில் 10.30-க்கும், மாலையில் 2.30-க்கும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் வட்டத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 1,000, ரூ. 500, ரூ. 300க்கான பரிசுக் கூப்பன்கள், சான்றிதழ்கள் புத்தகக் கண்காட்சிமேடையில் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்படும். பரிசுக் கூப்பன்களை அரங்கத்தில் உள்ள புத்தகக் கடைகளில் அளித்து, தேவையான புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.

மூக்கணாங்கயிறு

பெரம்பலூர், : பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகள், பசுக்களுக்கு கட்டும் புத்தம்புது மூக்கணாங் கயிறு மற்றும் சலங்கைகள் விற்பனை களை கட்டியுள்ளது.
பொங்கல் என்றதும் செங்கரும்பு, மஞ்சள் நம் நினைவுக்கு வருவது போல், உழவர் திருநாள் என்றால் உழவர்களின் உற்றத் தோழனாகத் திகழும் காளை மாடுகளும், இல்லந்தோறும் உள்ளம் மகிழும் பசுக்களும் கட்டாயம் நம் நினைவுக்கு வரும்.
பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் புத்தம் புது பானையில் சமைத்த பொங்கலை படையலிட்டு முதலில் வயலை உழுத காளை மாடுகளுக்குத்தான் ஊட்டி விடுவர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை மாடுகளை பெருமைப்படுத்த மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணமடித்து, குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டுகள் இட்டு, கழுத்தில் விதவிதமான சலங்கைகள் கட்டி அலங்கரிப்பது வழக்கம்.
மேலும், மாடுகளுக்கு வழக்கமாக அணிவிக்கப்பட்டிருக்கும் பழைய மூக்கணாங் கயிறுகளை மாற்றிவிட்டு, புத்தம் புது கயிறுகளை வாங்கி அணிவிப்பர். இதன் படி, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாடுகளுக்கு அணிவிக்கும் சலங்கைகள், மாட்டு வண்டிக்கும், கொம்புகளுக்கும் பூசக்கூடிய வண்ண வண்ண பெயிண்டுகளோடு, மூக்கணாங் கயிறுகளின் விற்பனையும் பெரம்பலூர் நகரில் களை கட்டியுள்ளது. இங்குவிற்கப்படும் மூக்கணாங் கயிறு, சலங்கைகள் ஆகியவற்றை பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தோல் பட்டைகளில் இணைத்துள்ள விதவிதமான சலங்கைகள், கழுத்துக் கயிற்றில் தொங்கவிடும் சலங்கைகள் என விதவிதமான சலங்கைகள் விற்பனைக்காக கடைகளின் முன்பு தொங்கவிடப்பட்டுள்ளன.
ஊருக்கே  உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய, உழைத்து வாழும் தங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிடும் காளைகளுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அன்றாடம் சத்துள்ள அமிர்தமாக பாலைத் தரும் பசுக்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரிக்கும் பணியில் உழவர்கள் இப்போதே ஈடுபட்டுள்ளனர்.

நன்றி-தினகரன்.


பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதை 13ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் (பொ) சுப்பிரமணியன் தெரிவித்தார்.
   தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக் கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம், விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் 42 ஆயிரத்து 535 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 272 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 70 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் அட்டைதாரர்களுக்கும், 42 ஆயிரத்து 877 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகாவில் 43 ஆயிரத்து 364 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 36 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 43 ஆயிரத்து 400 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குன்னம் தாலுகாவில் 44 ஆயிரத்து 333 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர் களுக்கும், 16 காவலர் குடும்ப அட்டைதாரரர்களுக்கும், 44 ஆயிரத்து 349 கிலோ பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலத்தூர் தாலுக்காவில் 30 ஆயி ரத்து 172 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 20 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக் கும், 30 ஆயிரத்து 192 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இம் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், தலா ரூ.100 வீதம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 800 மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 987 ஆண்களுக்கு வேஷ் டியும், 1 லட்சத்து59 ஆயி ரத்து 2 பெண்களுக்கு  சேலையும் ரேஷன் கடை கள் மூலமாக விநியோகம் செய்யப்பட உள்ளன.இந்த பரிசுத் தொகுப்பை இம் மாதம் 13ம் தேதி வரை வார்டு வாரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என் றார்.


நன்றி-தினகரன்.

Saturday, 4 January 2014


       வ.களத்தூரில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டியுசன் சென்டர் விவேகானந்தர் பிறந்த தினத்தன்று துவக்கப்பட உள்ளது. தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப்படும் 12-01-2014 ல்  துவக்கப்படும் சிறப்பை இந்த சிறப்பு வகுப்பு பெறுகிறது.
      LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும்  பயிற்சி அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
         வாரம் ஒருமுறை, இன்று பள்ளிகளில் கற்றுகொடுக்க மறந்த பண்பாட்டு கல்வி கற்றுகொடுக்கப்படும். மாதம் ஒருமுறை ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நடத்தட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.
       வ.களத்தூர் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு- 99484 46709, 80152 55587, 97867 62199.

Friday, 3 January 2014

வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் நெறி குறவர் காலனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
விழாவுக்கு நெறிகுறவர் சங்க மாநில பொறுப்பாளர் நம்பியார் தலைமை வகித்தார். ஹெல்ப்பிங் ஹேன் சொசைட்டி தலைவர் சிலம்பரசி, செயலாளர் சூரியசேகர், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மக்கள் உரிமைகள் இயக்க கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் கோசிபா, நெறி குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

நன்றி-தினகரன்.


ஆமதாபாத்: இணையதளத்தை தொடர்ந்து, ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கியுள்ளார் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சமூக வலைதளங்களை சக்திவாய்ந்த ஊடகமாக கருதக்கூடியவர் நரேந்திர மோடி. இதனால், பேஸ்புக், டிவிட்டரிலும் பிரசாரம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ‘இந்தியா 272.காம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி, தனது பிரசாரங்கள் இளைஞர் சமுதாயத்தையும் சென்றடையும் வகையில் மாற்றிக்காட்டினார்.
 இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை தொடங்கியுள்ளார்.( பதிவிறக்கம் செய்ய  http://www.india272.com/  ). வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 272 இடங்களை பாஜ பிடிக்க வேண்டுமென இலக்கு வைத்துள்ள மோடி, அதையே தனது மந்திர எண்ணாக அப்ளிகேஷனுக்கும் வைத்துள்ளார். இந்த புதிய அப்ளிகேஷனில் தன்னார்வலர்கள் இணைந்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம், அடுத்த பிரசார கூட்டத்தில் மோடி எப்படி பேசலாம் என்பது பற்றி கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

மேலும், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் புதிய பதிவுகளை இந்த அப்ளிகேஷன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கருத்தில், ‘இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்சிக்கு இன்னும் பல சக்திவாய்ந்த தன்னார்வலர்கள் கிடைப்பார்கள். அவர்கள் எளிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்‘ என கூறியுள்ளார்.

நன்றி-தினகரன்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரம்யாவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆர். ரம்யா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஆர். ரம்யாவை வெள்ளிக்கிழமை பாராட்டிய  மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும், முறையான பயிற்சிகளையும் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மேலமாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச்  சேர்ந்தவர் சோலைமுத்து (42). அவரது உறவினர், கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் (55).
விவசாயிகளான இருவரும், வெள்ளிக்கிழமை மாலை வேப்பந்தட்டையிலிருந்து, நெய்க்குப்பை கிராமத்துக்கு தொண்டப்பாடி கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, வ. களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து
மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்த வேலாயுதம், பெரம்பலூர் அரசுருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வ. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நன்றி-தினமணி.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                    எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்  பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2008க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.  மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50.000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.
மனுதாரர்கள் தங்களின்  அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வருகை தந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக  பூர்த்தி செய்து  படிவங்கள் 28.02.2014க்குள் அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம்.   இந்த வாய்ப்பை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday, 2 January 2014


non-MRP பாஸ்போர்ட்

கையால் எழுதப்பட்ட / போட்டோ ஒட்டப்பட்ட  மற்றும் 2௦ வருட செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வரும் நவம்பர் 25- 2௦14 முதல் செல்லாது என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சிவில் விமான அமைப்பு , வரும் நவம்பர் முதல் இத்தகைய பாஸ்போர்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறித்தி உள்ளதால் இனி வெளிநாடுகள், கையால் எழுதப்பட்ட non-MRP என அழைக்கப்படும் எந்திரத்தால் படிக்க முடியாத இத்தகைய பஸ்போர்டுகள் செல்லாது என அறிவிக்க உள்ளன. எனவே இத்தகைய பாஸ்போர்டுகள் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்டுகள் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிக்கு தேசிய அழைப்பு எண் 18002581800 எண்ணுக்கோ அல்லது www.passportindia.gov.in என்ற இணையதள முகவரிக்கோ சென்று விபரம் அறியலாம். மேலும் பாஸ்போர்ட் விபரம் அறிய 9704100100 என்ற எண்ணுக்கு sms அனுப்பியும் விபரம் பெறலாம்.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் மன்றம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா பெரம்பலூரில் 31-01-2014 முதல் 09-02-2014  வரை, புதிய பேருந்துநிலையம் அருகில் நடை பெற உள்ளது.


24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள்,  தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும்  சந்தேகங்களைக்  கேட்டு தெளிவு பெற   1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள  24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

நன்றி-தினமணி.


 இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது.  அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘ அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே ‘ஆர்ட்டின் படம்‘ வரைகின்றனர். ஒருவர் பெயரை எழுதி கவிதைகள், காதல் வசனங்கள் கூட எழுதுகின்றனர்.

இந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள் இடம் பெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘ பகுதி மாசடைவதால் அந்த ரூபாய் நோட்டுகளை உண்மை தன்மையை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள், பின் அடித்த ஓட்டைகள் இருந்தால் அந்த நோட்டுகளை வங்கிகள் மீண¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது.

அந்த நோட்டுகள் புழக்கத்திற்கு அனுமதிக்க தகுதி இல்லாதது. வங்கிகளும் ரூபாய் நோட்டுகளில் எண்ணால் எழுதக் கூடாது. இது ரிசர்வ் வங்கியின் ‘கிளீன் நோட்‘ கொள்கைக்கு எதிரானது. இவ்வாறு அனைத்து வங்கிகளின் தலைவர்கள், முதன்மை செயல் அலுவலர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல்கள் வெளியானது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று தான் வங்கிகள் திறக்கப்படும். எனவே, இன்று முதல் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஏற்கனவே ரிசர்வ் வங்கி இதுபோன்று அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என வங்கி கிளைகளுக்கு முறையான தகவல¢ இல்லை‘‘ என்றனர்.

நன்றி-தினகரன்.
மதுரை: எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனந்த முருகன் தாக்கல் செய்த மனுவில், ஆதார் அட்டை கேட்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை கேட்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அமைச்சரவை செயலாளர் உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்தனர்.

நன்றி-தினகரன்.


முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ஆகியன பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான பொருட்கள் இருப்பு குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பொங்கல் பரிசு வழங்கும் தேதியை முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே சமயத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Tuesday, 31 December 2013


பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்குள்பட்ட தகுதியான நபர்கள் காலி பணியிட விவரங்களை அந்தந்த வட்டார வள மையத்தில் உள்ள தகவல் பலகையில் தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிடவற்றுடன் காலை 10 மணிக்கு வட்டார வள மையத்தில் நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்கலாம்.
காலியாக உள்ள 2 மாவட்ட ஒருங்கிணைப்பாளார் பணியிடத்திற்கு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ல் எழுதுத் தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, ஏதேனும் பட்டப் படிப்பு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 6, 000.
பெரம்பலூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ம் தேதி நடைபெறும். கல்வித் தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி, மாத சம்பளம் ரூ. 2,000.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 17 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன. 8-ம் தேதி, வேப்பந்தட்டை வட்டார வள மையத்தில் நடைபெறும். ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 மையப் பொறுப்பாளர்களுக்கு, ஜன. 9-ம் தேதி ஆலத்தூர் வட்டார வள மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். வேப்பூர் ஒன்றியத்தில் 10 மையப் பொறுப்பாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, வேப்பூர் வட்டார வள மையத்தில் ஜன. 10ம் தேதி நடைபெறும். இந்த பணி நியமனம் முற்றிலும் தாற்காலிகமானது.

நன்றி- தினமணி.

Monday, 30 December 2013


பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன. 2 முதல் நவீன செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 40 வயதிற்குக் குறைவாக, 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 10 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
 பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு ஐ.ஓ.பி சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர்-  621212 (போன் - 277869) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.

Saturday, 28 December 2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 04.01.2014 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுகளுக்கும், பெரும் காயம் மற்றும் சிறு காயம் அடைந்த நபர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாலைவிபத்து நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 04.01.2014 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
                வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்முகாம் நடத்தப்படவுள்ளது. எனவே சாலைவிபத்தில் இறந்த நபரின் வாரிசுதாரர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது குடும்ப அட்டை நகல், வாரிசுச்சான்று, இறந்த நபருக்கான இறப்புச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் தவறாது இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தொழில்பயிற்சி(ITI) , வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தகவல்
பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                                தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் விவரங்கள் யாவும் இணையதளத்தின் வழி ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் முழுமைப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின்  பதிவு விவரங்களையும் சீரான கால இடைவெளிகளில் குறிப்பிட்ட தகுதி பதிவுதாரர்களின் வகைபாடுகள் வாரியாக இணையதளத்தில் சரிபார்த்து முழுமைப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                                எனவே பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து வகையான தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) முடித்துள்ள பதிவுதாரர்களுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள (Dip. In Agri/Hortculture) பதிவுதாரர்களுக்கும்  தங்களது பதிவு அடையாள அட்டையின் இணையதள கணினிப் பிரதி ஒன்றினை   www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டையில் பதியப்பட்டுள்ள கல்வித்தகுதிகள்  மற்றும் இதர குறிப்புகள் யாவும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் மட்டும் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகளுடன்  11.01.2014ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு  நேரில் வந்து  தங்களது பதிவு விவரங்களை இணையதளத்தில் விடுபாடின்றி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். விபரங்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
 இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Friday, 27 December 2013



ரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன.புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர்.28 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன. மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார்.
அருந்ததி ராய்
இந்து கும்பலால் ஜாஃப்ரியின் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர் என விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரைடை அவுட்லுக் பத்திரிகையில் வெளியிட்டார். கூடவே மோடி இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக ஜாஃப்ரி கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்றும் சொல்லி கோடி காட்டினார். ஆனால் ஜாஃப்ரியின் மகன் ஏற்கனவே ஆசியன் ஏஜ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்போது இந்தியாவில் வாழ்ந்த அவரது வாரிசு தான் மட்டுமே அவரது இதர சகோதர சகோதரிகள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்றும் கூறினார்.பகிரங்கமாக அசிங்கப்பட்ட அருந்ததி ராய் இப்படி பச்சையாக பொய் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது.ஆனால் பொய்க்கு மன்னிப்பு கேட்பதில்கூட அருந்ததிராயால் பொய் சொல்ல முடியும்.
நச்சல்களுடன் அருந்ததி ராய்
‘அன்று சமன்புராவில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து பெண்களில் ஜாஃப்ரியின் மகள்கள் இல்லை.’ ஆனால் மார்ச் 2002 முதல் வாரம் வரை இந்த பலாத்காரம் குறித்த செய்திகள் சமன்புராவிலிருந்து கலவரங்களை ரிப்போர்ட் செய்த பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. மார்ச் இரண்டாவது வாரம் முதலே வர ஆரம்பித்தன. பிப்ரவரி 28 கலவரங்கள் குறித்த செய்திகள் மார்ச் 1 ஆம் தேதி வந்த ரிப்போர்ட்கள் எதிலும் அவை இல்லை. ஒரு கட்டத்தில் இந்த போலி மதச்சார்பின்மை சக்திகளின் பிரச்சார பொய்கள் எந்த அளவு இருந்தது என்றால், ஏப்ரல் 2002 இல் நஃபீஸா ஹுசைன் எனும் (மோடிக்கு எதிரான) தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் பல அமைப்புகளையும் ஊடகங்களையும் சிறுபான்மை சமுதாய பெண்கள் கலவரங்களில் சந்தித்த வன்முறைகளை பல மடங்கு அதிகரித்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். உண்மையில் நடந்தது என்ன? காவல்துறை விரைந்து வந்தது. தீயணைக்கும் படையும் வந்தது. ஆனால் காவல்துறை ஒரு பெரிய கலவரக் கும்பலை எதிர்க்க வேண்டி இருந்தது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. கலவரக் கும்பலில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டனர். கலவரக் கும்பலால் தீயணைப்பு படை வேன் நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் மேல் காவல்துறை குல்பர்காவில் வாழ்ந்த 250க்கும் அதிகமான இஸ்லாமியரில் 200 பேரை காப்பாற்றினார். அவர்களால் காப்பாற்றப்பட முடியாமல் போன ஐம்பதுக்கும்அதிகமான இஸ்லாமியரில் ஜாஃப்ரியும் ஒருவர்.இந்த படுகொலை குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகள் செய்ய ஆரம்பித்த புனைவுகளில் 2006 க்கு பிறகுதான் ஜாஃப்ரியின் மனைவி தனது கணவர் முதலமைச்சர் மோடிக்கு தொலைபேசி உதவி கேட்டதாகவும் ஆனால் அதை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டார்.2002 இல் இருந்து 2006 க்குள் நானாவதி கமிஷன் முன்னால் சாட்சியமளித்த போது ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் ஸாக்கியா ஜாஃப்ரி, மோடிக்கு எதிராக இயங்கும் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட், தீஸ்டா செதால்வத் ஆகியோர் இணைந்து மோடிக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்கினார்கள். குல்பர்கா கலவர படுகொலையில் மோடிக்கு பங்கு உண்டு என்பதாக ஒரு பிரச்சார மாயையை அவர்கள் உருவாக்கினார்கள். இது நீதித்துறைக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் ஒரு தனி சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது.
சஞ்சய் பட்

சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:
சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.
இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.
மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்?
எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.
இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார்.ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை. 

நன்றி-http://www.tamilhindu.com
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம்  - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: 



லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம். அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருக்க வேண்டும்
லஞ்சம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்று நினைப்பது முறையான செயல் அல்ல. எனவே பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் 94441-75000 என்ற எண்ணிலோ, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரிடம் 94450-48952, 94450-48862 என்ற எண்களிலோ அல்லது அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday, 26 December 2013

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில்  இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
                விவசாயிகளுடனான வேளாண் உற்பத்திக்குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2013) நடைபெற்றது.
                இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
வேளாண் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் ஈட்டும் இடைத்தரகர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர் தலைமையில் விரைவில் குழு அமைக்கப்படும். விவசாயிகளும் இடைதரகர்களை நம்பாமல் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளைபொருட்களை இடைதரகர்கள் யாருமின்றி நேரடியாக பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக அதிக விலைக்கு  விற்பனை செய்திடலாம்.  ஒழுங்குமுறை கூடத்தில் மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம்.
பருத்தி பயிர்கள் நோய்தாக்குதலுக்கு உள்ளானதற்கு வழங்கப்பட்ட விதைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவசாயிகள் கருதுவதால் அந்த விதைகளை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டில் தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் 5,000 ஹெக்டேரில்  தோட்டக்கலை பயிர்களை பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு விவசாயிகள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.ஏ. சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு. திரு. வே. அழகிரிசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள், விவசாய சங்ககங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
      செய்தி வெயீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 22.12.2013 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிலம் வாங்கும் திட்டம்,  இருபாலருக்குமான நிலம் மேம்பாடு திட்டம்,  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பெட்ரோல் டீசல் கேஸ் மற்றும் சில்லரை விற்பனை நிலையம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்  மருத்துவமனை, மருந்துக்கடை, கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாரா கடனுதவி விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி. உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 இலட்சமாக இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.
இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கும் , தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை. பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க மனுதாரரின் வயதுவரம்பு 25லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
                இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள்  http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். மனுதாரரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அரியவாய்ப்பை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

Tuesday, 24 December 2013


பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்ககாவல் படைக்கு வரும் ஜனவரி-8 , 2014 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதற்கான தகுதிகள் 1௦ ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் 20 முதல் 45  வரை வயது உள்ளவராக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும்.
அம்மா திட்டம் (AMMA ‘Assured Maximum Service to Marginal People in All Villages’) வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஒரு சீரிய திட்டமாகும் . தமிழக முதல்வர் அவர்களின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தில் , வருவாய் துறையினர் 27-12-2013 , வெள்ளிக்கிழமை அன்று திருவாலந்துறை மற்றும் அகரம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அங்கேயே அதற்க்கு தீர்வு காண்பார் கள். இத்திட்டத்தின் கீழ்...........

1. பட்டா மாறுதல்,
2. குடும்ப அட்டை திருத்தம்,
3. பிறப்பு மற்றும் இறப்புச் சான்று,
4. சாதிச்சான்று , வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று.
5. வாரிசுச் சான்று,
6. முதல் பட்டதாரிச் சான்று,
7. முதியோர் உதவித்தொகை, மேலும் விவசாயிகளுக்கானபல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் வருவாய்துறையில் உள்ள பிற சலுகைகளுக்கும் இம்முகாமில் விண்ணப்பிக்கலாம்.
திரு.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.
பெரம்பலூர் சார் ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி அவர்களின் சிறப்பு  மனுநீதி நாள் நிறைவு நாள் விழா (26-12-2013) வியாழக்கிழமை  காலை 11மணி அளவில்  வாலிகண்டபுரம் கிராமம் , ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேப்பந்தட்டை வட்டாட்சியர் இரா.திருஞானம் அவர்கள் இப்பகுதி வாழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, 23 December 2013

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.12.2013 அன்று நடைபெறவுள்ளது.  மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) திரு. எம்.ஏ.சுப்பிரமணியன்  அவர்கள் தகவல்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.12.2013 அன்று காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) திரு. எம்.ஏ.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
சங்க சித்திரம் ஒன்று உள்ளது. பாரி தனது தேரை கானகத்தில் ஓட்டிச் செல்கிறான். ஒரு இடத்தில் அந்த தேரின் மீது ஒரு முல்லைக் கொடி படர்ந்துவிடுகிறது. அதை பார்த்த பாரி அந்த தேரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறான். இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது? எதன் உருவகம் அது?  நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி இதுதான். அந்த தேர் ஒரு அரசின் திட்டங்களை உருவகிக்கிறது. அதன் மூலமாகவே ஒரு அரசு செல்கிறது. அதன் மீது படரும் கொடி என்பது என்ன? இந்த சிந்தனையின் தூல உருவம் நமக்கு சுதந்திரத்துக்கு பின் உருவான இந்தியாவிலிருந்தே கிடைக்கிறது.
சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயகத்தன்மையுடன் எல்லாவிதமான விதிகளுக்கும் அப்பால் அதில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் அந்த மரபு. இந்த நவீன மரபு சிறிது சிறிதாக திரண்டு வந்து இன்று நாம் அனைவராலும் ஊழல் என அழைக்கப்படும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது. உண்மையில் இது அதிகார பகிர்ந்தளிப்புதான். எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது. சீன இந்திய போரின் போது உளவுத்துறையால் தேச பாதுகாப்பு எனும் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட சில ரெய்ட்களின் போது நேருவின் காப்புரிமை கணக்குகள் சோவியத் வங்கிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இதை கேட்டு நம் நாட்டின் இறுகிய தேசிய வாத குறுமனக்குழுக்கள் அதிர்ந்திருக்கலாம். ஆனால் இது உண்மையென்றால் நேரு எத்தனை தொலை நோக்குடன் சர்வதேச பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதன் நீட்சியே இன்று சுவிட்சர்லாந்து வரை இந்திய செல்வம் பரந்து விரிந்து மானுடத்தை தழுவியிருக்கிறது. இந்திய மக்களின் உழைப்பின் பயனால் லாபம் அடைவது சுவிஸ் வங்கிகள் என்றால் அதிலுள்ள கடைநிலை ஊழியனும் லாபம் அடைவானே. ஆக சுவிஸ் வங்கியை சுத்தம் செய்யும் ஒரு கடைநிலை ஊழியன் உறிஞ்சும் தேநீரில் இந்திய உழவனின் பணமும் உள்ளது என்பது எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி. எனவேதான் காந்தி கூட லண்டன் சென்ற போது அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தங்கினார்.
கேரளாவில் இது குறித்த ஒரு ஆழமான காந்திய-மார்க்ஸிய புரிதல்பாடு உள்ளது. ஒரு சிறிய சூரிய மின் சக்தி திட்டத்திலும் கூட ஊழல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இதுதான நவீன ஜனநாயகத்தன்மை. இந்த ஊழலின் விளைவாக ஊடகங்கள் அந்த திட்டத்தை குறித்து பரபரப்பாக பேசுகின்றன.  பெண்கள், இளைஞர்கள். அரசியல்வாதிகள் என பலதரப்பு மக்கள் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளனர். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையை அது காட்டுகிறது. சிறிது யோசித்து பாருங்கள். இந்த ஊழலின் அளவு பத்து கோடி ரூபாய் என்கிறார்கள். சின்ன திட்டத்திற்கு ஏற்ற கச்சிதமான ஊழல். காந்திய பொருளாதார அறிஞர் ஷீமேச்சர்’ சிறியதே அழகானது’ என கூறினார்.


ஆனால் குஜராத்தில் நடப்பதை பாருங்கள். 16 லட்சம் அலகுகள் கொண்ட சுத்தமான மின்சக்தியுடன் 90 லட்சம் லிட்டர்கள் நீர் ஆவியாகி செல்வதையும் இது தடுக்கும். நர்மதா நதியின் நீர்வழிகளின் ஒட்டுமொத்த நீளம் 19000 கிலோ மீட்டர்கள். இதில் பத்து சதவிகிதம் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் 2200 மெகாவாட் சக்தி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதில் எந்த ஊழலும் இல்லை. அதாவது அதிகார பகிர்ந்தளிப்பு இல்லை. அதை அளிக்க மோடியால் முடியவில்லை . என்பதுதான் உண்மை.  இதைத்தான் சர்வாதிகாரம் என்று சொல்கிறோம். சிலர் சொல்கிறார்கள் மோடியை எதிர்த்து குஜராத்தின் தலைநகரிலேயே பிரசுரங்களை மக்களால் எளிதாக விநியோகிக்க முடிகிறதே என்று. இது ஜனநாயகத்தை குறித்த மிகவும் மேலோட்டமான அபத்தமான வாசிப்பு. இணையம் முழுக்க நிரம்பியுள்ள மோடி ஆதரவாளர்களால் இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத்தான் நிகழ்த்த முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் அதிகாரம் செடி போல படர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்கையில் அந்த செடிகளில் கனியாக தோன்றுவது ஊழல். அது இல்லாமல் மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்துவதென்பதே ஒருவித பாசிச மனநிலைதான்.  


யோசித்து பாருங்கள். கேரளாவின் இந்த சோலார் ஊழலால் இனி எத்தனையோ திரைப்படங்கள் வரக்கூடும். அழகிய பெண். விலை போகும் அரசியல்வாதி, பின்னால் இருக்கும் சோகம், அந்த அரசியல்வாதியின் ஆதி இச்சையான அந்த பெண்ணின் பின்னால் இருக்கும் சோகம்,தனிமை, இதனை பயன்படுத்தும் ஒரு வியாபார உள்ளம்… எத்தனை அருமையான நாவல்கள், எத்தனை எத்தனை திரைப்படங்கள்… இவையெல்லாம் பெரும் அறக் கேள்விகளை  வாசகன  மனதுக்குள்ளும் பார்வையாளரின் அந்தரங்கங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கும். இந்த கேள்விகளின் மூலமாகத்தான் நாம் அறத்தை நோக்கி ஒரு சமுதாயமாக நகர முடியும்.  ஆனால் எல்லா செயல்திட்டங்களும் மக்களுக்காகத் தீட்டப்பட்டு ஊழலில்லாமல் குஜராத் போல அரசு நிர்வாகம் நடந்ததென்றால் அந்த சமுதாயத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? அந்த சமுதாயத்தில் வாழும் கலைஞன் என்ன அறச்சீற்றத்தை அடைய முடியும்? மீண்டும் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா எனும் கேள்விக்கா நாம் திரும்ப செல்வது?
எனவேதான் சொல்ல வேண்டி உள்ளது. ஊழலே இல்லாமல் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் மூலம் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் நற்பயன்கள் மட்டுமே கிடைக்கும் ஒரு நிர்வாகத்தை மோடி அளித்துவிடுவார். ஊடகங்களுக்கு யார் வாழ்வளிப்பார்கள்? ஊடக இந்தியா, ஊழல்களால் கொழித்த உயர்குடி இந்தியா எதிர்நோக்கும்  மிகப் பெரிய அபாயம் எது என்றால் நிச்சயமாக அது மோடிதான். இதில் இரண்டுவித கருத்துக்கு இடமே இல்லை.

நன்றி- http://www.tamilhindu.com

Sunday, 22 December 2013


vkalathur வ,களத்தூரில் வரும் ஜனவரி 8 மற்றும் 9  தேதிகளில் ஊரக விளையாட்டுபோட்டி நடைபெற உள்ளது. இதற்கென நமது ஊராட்சிக்கு ரூபாய் . 2௦௦௦௦/- ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் , சுய உதவிக்குழு உறுப்பினர்கள்  மற்றும் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் . போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 3௦-12-2௦13 க்குள் தங்களது பெயரை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
       பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 27-ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு மற்றும் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மது கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் 1 கார், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை எனது உத்தரவின்பேரில், மதுவிலக்கப் பிரிவுக் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் டிச. 27-ல் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகின்றன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் டிச. 23 முதல் 26ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நன்றி - தினமணி.