Wednesday, 6 August 2014


பெரம்பலூர்:
மாவட்டத்தின் வடஎல்லையிலுள்ள திருவாளந்துறை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படவேண்டும். 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகிறோம் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வேப்பந்தட்டை தாலுகா, திருவாளந்துரை கிராமத்திலிருந்து வந்திருந்த மக்கள் கலெக்டர் தரேஸ்அகமதுவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தின் வடகோடியில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது திருவாளந்துறை கிராமம். இங்கு 3ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். அருகிலுள்ள இனாம் அகரம் கிராமத்தில் 2ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருவாளந்துறையில் ஆர்சி பள்ளியும், மாணவ,மாணவியர் விடுதியும் உள்ளது. இங்குள்ள மேல்நிலைக் கல்விபயி லும் மாணவ, மாணவியர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூரில் வேலை செய்பவர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் வணிகம், மருத்துவம், கல்வி போன்ற அனைத்திற்கும் பெரம்பலூரையே சார்ந்துள்ளோம்.
திருவாளந்துறை கிராமத்திற்கு தடம் எண் 2 நகரப்பேருந்து காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும், இரவு 9 மணிக்கும் மட்டுமே இயக்கப்படுகிறது. மீதம் நான்கு முறை 4 கி.மீ. முன்னதாக இருக்கும் வி.களத்தூருடன் திரும்பி விடுகிறது. காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடைப்பட்ட 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியே இல்லாமல் தவித்து வருகிறோம். இதனால் மருத்துவ தேவை க்கு கூட 4 கி.மீ. நடந்து சென்று வி.களத்தூரில் பேருந்து பிடிக்க வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வி.களத்தூர் வழியாக இயக்கப்படும் அனைத்து நடைகளையும் திருவாளந்துறை முடிய இயக்க உத்தரவிட வேண் டும். அதே போல தாலுகா தலைநகராக உள்ள வேப்பந்தட்டைக்குச் செல்ல 40 கி.மீ. கடந்து பெரம்பலூருக்கு சென்று, அங்கிருந்து வேப்பந்தட்டைக்கு 13 கி.மீ.செல்ல வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை வழியாக வி.களத் தூர் வரை இயக்கப்படும் நடைஎண் 15, அல்லது நடை எண் 18 ஆகிய நகரப்பேருந்துகளை திருவாளந்துறைவரை நீட்டித்து இயக்க உத்தரவிட வேண்டும், திருச்சியிலிருந்தும் திருவாளந்துறைக்கு நேரடியாக புறநகர் பேருந்து இயக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

-தினகரன்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை குழந்தையுடன் ஆஜரான துர்கேஸ்வரி.
இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை விதித்தார்.
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத் துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெ னவே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை ஆஜராகினர்.
அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனி யாண்டி ஆகியோர் கூறியது:
துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள் ளன.
அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார். துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்.
தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். 

அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர்.
சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.

பங்களிப்பு -தி இந்து 
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே ஆலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரஜீஷ்(24). எலக்ட்ரீஷியனான இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (டிஒய்எப்ஐ) செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரஜீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் மாதா அமிர்தானந்தமயி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இவரது கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து கொல்லம் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் உமேஷ் பாபு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரஜீஷை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் பேஸ்புக்கில் பிரசுரித்த கருத்துக்களுக்கு ஏராளமானோர் லைக் செய்திருந்தனர். அவர்கள் குறித்த விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

-one india.
தளபதி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கலெக்டரும் எஸ்பியும் அமர்ந்து கொண்டு லோக்கல் தாதாவையும் அவனது கைத்தடியையும் கண்டிப்பார்கள். நீங்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள் என்பார் எஸ்.பி. உடனே தாதாவின் கைத்தடி ஒரு வசனம் சொல்வார். ”கலெக்டர் சார்! நீங்க எப்பவாவது ஏழையா இருந்திருக்கீங்களா? பட்டினியா இருந்திருக்கீங்களா? பைல நாலணா காசில்லாம அலைஞ்சிருக்கீங்களா? வயிறு காலியா இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க. அவங்களுக்கு வேண்டியது நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”
04.09.21.SwordInjustice-X
இதே போன்ற ஒரு வாதத்தை வைத்து விஸ்வலோசன் மதன் என்பவர் 2005ல் தொடர்ந்த வழக்கில் (WRIT PETITION (CIVIL) NO. 386 OF 2005) உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல செக்கூலரிச புத்திஜீவிகள் வாதாடுகிறார்கள். சில முஸ்லிம் அறிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வஹாபியச் சிந்தனையில் ஊறிப்போன பலரும் இப்படித்தான் பேசுகிறார்கள். ”நீதிபதி சார்! நீங்க எப்பவாவது வஹாபி முஸ்லிமா இருந்திருக்கீங்களா? 4 பொண்டாட்டி கட்டி ஒருத்திக்கு நாலுங்கிற கணக்கில 16 புள்ள பெத்திருக்கீங்களா? வேற ஒருத்தி மேல ஆசை வந்துட்டா இருக்கிற நாலுல ஒருத்திய காரணமே சொல்லாம தலாக் தலாக் தலாக் அப்படின்னு மூணு வாட்டி சொல்லிட்டு வீட்டவிட்டு பத்திவிட்ருக்கீங்களா? மருமகளை பலாத்காரம் செஞ்சு அவள் மகனுக்கு இனி மனைவியில்லை அப்படின்னு ஃபத்வா வாங்கிருக்கீங்களா? இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க? அவங்களுக்கு வேண்டியது அவங்களுக்கான நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”

இந்த ரீதியில் நீதிமன்றத்தால் வழக்குகளில் ஆஜராகத் தடை செய்யப்பட்ட வக்கீல் ராஜீவ் தவன் லண்டன் பத்திரிகை ஒன்றில் பொறுமுகிறார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு ஒரு வேளை உணவைத் தவிர்த்ததாகச் சொல்கிறார் இவர். உலமாக்கள் வருந்துகிறார்கள். நமது ஆங்கிலேயச் சட்ட அமைப்பில் முஸ்லிம்களை திணிப்பது தகாது என்கிறார் தவன். அதே சட்ட அமைப்பில் ஹிந்துக்களைத் திணித்திருப்பது பற்றி வாய்திறந்தால் மதசார்பின்மை மாசுபடும் என்பதால் அது பற்றிப் பேசவில்லை அவர். ஆனால் நீதிபதி ஹிந்துத்வ அமைப்புகளுக்கு அனுசரணையாகத் தீர்ப்பளித்திருப்பதாகப் புலம்புகிறார்.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2690781/Supreme-Courts-ruling-fatwas-faulty.html

மேற்கத்திய நாடுகளில் ஷரியா சட்டப்படியான நீதிமன்றங்களே உள்ளன. பிரிட்டனில் 5 ஷரியா நீதிமன்றங்கள் 2008ல் தொடங்கப்பட்டன. ஆனால் நம் நாட்டில் இருக்கும் இந்த தாருல் உலூம்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை அல்ல. ஆகவே இவற்றைப் புறக்கணித்து ஷரியாவைச் சட்டபூர்வமானதாக ஆக்கினால் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இருக்காது என்கிறார் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆலோசகர் சைஃப் மகமுது.

சிவில் வழக்கு என்பதால் நடுரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் படியாக கும்பல் கூடித்தொழுவது, அயல்நாட்டுத் தூதரகத்தில் கல்லெறிவது, எங்கோ நடந்த விவகாரங்களுக்கு எங்கேயோ கலவரம் செய்வது போன்ற சம்பவங்களை இங்கே பேச இடமில்லை. உரிமையியல் சிக்கல்கள் என்று அறியப்படும் நிலத்தகராறு, கணவன் மனைவி பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள், விவாகரத்து, அனைத்துவிதமான காதல்கள், இப்படி பலவற்றில் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் மத அறிஞர்கள் தீர்ப்புச் சொல்கிறார்களே! இதெல்லாம் நம் நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இல்லையே. நியாயம் என்பது எள்முனையளவும் இல்லாத தீர்ப்புகளாக இவை இருக்கின்றன. இதை எப்படி ஒரு பன்முகச் சமுதாயம் ஏற்கமுடியும் என்ற கேள்வியுடன் தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய நீதி என்று நடத்திவரும் கட்டப்பஞ்சாயத்துக்களைத் தடை செய்யவேண்டும் என்று கோரினார். மத்திய மாநில அரசுகளுக்கு தாருல் காஜா எனும் இஸ்லாமிய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை உடனடியாகக் கலைத்துவிடவும் இவர்கள் ஃபத்வா என்ற பெயரில் வழங்கிவரும் தீர்ப்புகள் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளிக்கவும் உத்தரவிடக் கோரினார். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தையும், இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனங்களையும் இதுபோன்ற மதம் சார்ந்த தீர்ப்புகளை அளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களைப் பயிற்றுவிப்பதைத் தடை செய்யவும் வழக்கில் கோரப்பட்டது. அரசு அளித்த பதில் மனுவில் முஸ்லிம் உலமாக்கள் அளிக்கும் தீர்ப்புகள் அவர்களின் கருத்துக்கள்தானே தவிர சட்டப்பூர்வமான தீர்ப்புகள் அல்ல என்று தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் தவிர்த்து வேறு எந்த அடிப்படையில் வழக்கில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அத்தகைய முடிவுகளுக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் தன் நிலைப்பாட்டைச் சொன்னது அரசு.

வாதப் பிரதிவாதங்கள் நடந்து முடிந்தபிறகு நீதிபதிகள் பிநாகி சந்திர கோஷ், சந்திரமௌலி குமார் பிரசாத் ஆகியோர் கடந்த 2014 ஜூலை மாதம் 7ஆம் நாள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பின் சாரம் ஃபத்வாக்கள் தீர்ப்புகள் அல்ல, ஷரியா சட்டம் அல்ல என்பதே. தீர்ப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41747
அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்பது உலமாக்களைக் கொண்ட ஒரு அமைப்பு. உலமாக்கள் இஸ்லாமிய மதச் சட்டம், இறையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். மனுதாரர் தெரிவித்தபடி இந்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய அரசியல் சாசனப்படியான நீதிபரிபாலன முறையில் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாகச் சொல்லி ஒரு தனிப்பட்ட நீதித்துறை அமைப்பை நம் நாட்டில் உருவாக்க முனைகிறது. மேலும் நீதித்துறையில் வழக்கு நடத்துவதில் ஏற்படும் காலதாமதங்கள் ஏழ்மையில் வாழும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்துகிறது என்றும் இந்த வாரியம் சொல்கிறது. இதனால் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களை அமைக்கவேண்டியதானது என்றும் இந்த வாரியம் கூறுகிறது.

நாட்டில் தாரும் காஜா என்ற பெயரில் இது போன்ற இணை நீதித்துறையை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு மட்டுமான தனிச்சட்டம், தனி நீதி என்று அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக இந்த ஷரியா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன. இது போன்ற இஸ்லாமிய மத அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிவகுப்புகள் நாடு முழுவதும் இந்த வாரியத்தால் நடத்தப்படுகின்றன. இதில் பயிற்சி பெற்ற உலமாக்கள் எனும் இஸ்லாமிய மத அறிஞர்கள் நாடுமுழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கும் நீதிபதிகளாக சட்டவிரோதமான இணை நீதிமன்றங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கட்டப்பஞ்சாயத்துக்களில் நீதி முறையாக வழங்கப்படுவதில்லை என்பது மனுதாரரின் வாதம். பல ஃபத்வாக்களில் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது இந்த வாதத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இம்ரானா என்ற 28 வயதுப் பெண், 5 குழந்தைகளுக்குத் தாய், தன் கணவனின் தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார், அவரது மணவாழ்வின் நிலை குறித்தும் ஐந்து குழந்தைகளின் நிலை குறித்தும் கேள்வி எழுந்தது. இதில் தாருல் உலூம் அளித்த ஃபத்வா “அந்தப் பெண் தன் கணவனின் தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்பது சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது பலாத்காரம் செய்த ஆண் ஒப்புக்கொண்டாலோ ஹராம் முஷஹரத் நிரூபிக்கப்படுகிறது. அவள் தன் கணவனுக்கு சட்டப்பூர்வமான மனைவியாக வாழத் தகுதியற்றவள் ஆகிறாள். தன் தந்தை பலாத்காரமாகவோ அல்லது சம்மதத்துடனோ உறவுகொண்ட ஒரு பெண்ணை மகன் மனைவியாகக் கொண்டு வாழமுடியாது. ஏனெனில் ‘உன் தந்தை புணர்ந்த பெண்ணை நீ மணந்து கொள்ளாதே’ என்று குரான் சொல்கிறது.” இந்தக் கருத்தைச் சொல்லி மணவாழ்வை முறித்து கணவன் மனைவி சேர்ந்து வாழக்கூடாது என்று தீர்ப்பளித்தது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

(மகன் மணந்த பெண்ணைப் புணராதே என்று குரான் சொல்லவில்லையா என்று கேட்டால் நீங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் மதவாத நச்சுப்பாம்பாக அறியப்படுவீர்கள்.)

இதே போல அசூபி என்ற பெண்ணை அவளது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அந்தக் குற்றத்துக்கு காவல்துறையில் புகார் தரக்கூடாது என்று ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாமனார் மீது குற்றத்தை நிரூபிக்க சாட்சி இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் புகாரை பரிந்துரைத்தாலோ மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படும் என்றது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

இன்னொரு ஃபத்வா 19 வயது ஜட்சொனாராவை கணவனை விவாகரத்து செய்துவிட்டு பலாத்காரம் செய்த மாமனாரைக் கணவனாக ஏற்கச் சொன்னது. இதுவரை கணவனாக இருந்தவனை மகனாகப் பார்க்கச் சொன்னது. இதுவரை தந்தை நிலையில் இருந்தவனைக் கணவனாக ஏற்கச் சொன்னது.

இத்தகைய ஃபத்வாக்கள் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது. இந்த வாரியம் நாடு முழுவதும் இத்தகைய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை முஸ்லிம் சட்டப்படி அமைக்க விழைகிறது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. நீதிநிர்வாகம் என்பது அரசாங்கத்தின் கடமை அது தனியார் வசம் போவது மக்கள் நல்வாழ்வுக்கும் சட்டப்பூர்வமான வாழ்வு முறைக்கும் உகந்ததல்ல. மேற்கண்ட சம்பவங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் வழக்கினைத் தொடர்ந்தார். இதில் ஃபத்வாக்களையும் ஷரியாவையும் சட்டவிரோதம் என்று அறிவிப்பதோடு இதுவரை அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் அனைத்தும் செல்லாது என்றும் அவை சட்டவிரோதமானவை என்றும் அறிவுறுத்தக் கோரினார் மதன்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஃபத்வாக்கள் வெறும் கருத்துக்களே தீர்ப்புகள் அல்ல என்று சொன்ன போதும், இந்த தாருல் காஜா எனப்படும் அமைப்பு ஒரு பிணக்குத் தீர்வுக்கான மாற்று முறையாகக் கொள்ளலாம் என்றும் இந்த தாருல் காஜாக்கள் உரிமையியல் பிரச்சினைகளையே கையாள்வதால் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் வராது என்றும், செலவு குறைந்த முறையில் நீதிமன்றத்துக்கு வெளியிலான தீர்வுகளைத் தர இவ்வமைப்பு உதவக்கூடும் என்றும் சொன்னது. இதற்கு சட்டப்பூர்வமான தீர்ப்பாய அங்கீகாரம், தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், ஆகியவை இல்லை என்பதால் இணை நீதிமன்றங்களாக இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்களைக் கருத முடியாது என்றும் சொன்னது.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தனது மனுவில் தாருல் காஜாக்களை ஏற்படுத்துவதையோ, காஜிக்களைப் பயிற்றுவித்து ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ஃபத்வா வழங்குவதையோ மறுக்கவில்லை. அது ஒரு இணக்கமான பிணக்குத் தீர்வு முறை என்றும் சட்டத்தின் பாற்பட்ட நீதித்துறைக்குப் போட்டியாகவோ, இணையாகவோ செயல்படாது என்றும் கூறியது.

தாருல் உலூம் என்ற இஸ்லாமிய மத அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் அமைப்பு தன் மனுவில் இம்ரானா வழக்கின் ஃபத்வா ஹனாஃபி சட்டமுறையின்படி (ஃபிக் எ ஹனாஃபி) சரியானது என்றும் ஹனாஃபி முறை குரான், ஹதிஸ் இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியது. ஆனால் ஃபத்வாக்களை நடைமுறைப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கில்லை என்றும் அது ஒத்துக் கொண்டது. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஈமான்களான முஸ்லிம்கள் ஃபத்வாக்களைப் பின்பற்றுவார்கள் என்றும் அதை மீறுவோர் இறைவனின் சட்டத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றும் அவ்வமைப்பு கூறியது.

மத்தியப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் சட்டத்தின் முன் எந்தவித மதிப்பும் கொண்டவையல்ல என்று தெளிவுறக் கூறியது. உத்திரப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் ஆலோசனைகள் மட்டுமே தீர்ப்புகள் அல்ல என்றது. ஆனால் முஸ்லிம்கள் நீதிமன்றங்களை அணுகுவதை தாருல் காஜாக்கள் தடுக்க முடியாது என்றும் ஆகவே அவை இணை நீதிமன்றங்கள் அல்ல என்றும் உ.பி அரசு கூறியது.

காஜி அல்லது முஃப்தி எனப்படும் மத அறிஞர்கள் தங்கள் கருத்துக்களான ஃபத்வாக்களை யார் மீதும் எந்த வகையிலும் திணிக்க முடியாது. தங்கள் ஃபத்வாவுக்கு மிரட்டிப் பணிய வைப்பதும் கூடாது. மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஃபத்வாவுக்கு இருந்த அங்கீகாரமோ மதிப்போ சுதந்திர பாரதத்தில் கிடையாது. யாருக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கப்பட்டாலும் அவர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும். ஃபத்வாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அவசியமில்லை. ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. புறக்கணிப்பது சட்டபூர்வமானதே.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் “முஸ்லிம்களுக்கான ஒரு தனிப்பட்ட நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் அமைக்கப்படவேண்டும் என்றும், முஸ்லிம்கள் தங்களுக்கான ஒரு நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் இருக்கிறது என்றும் தங்கள் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மத அறிஞர்கள் உள்ளார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் விழைகிறது. வாரியத்தின் சொற்களில் “அல்லாவின் புத்தகத்தையும் ரசூலின் சுன்னத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டு இவ்விரண்டின் அடிப்படையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்படவேண்டும். இந்த முறை முஸ்லிம்களை முஸ்லிம் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரும். அவர்களுக்கு நீதி கிடைக்கும்.” நீதி கிடைக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த அமைப்புக்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

தாருல் காஜாக்களின் அமைப்போ, அவர்களது ஃபத்வா கருத்துக்களோ இருக்கவேகூடாது என்பதோ இருப்பது சட்டவிரோதம் என்பதோ இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் கிடையாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த அமைப்பு நீதிமன்றத்துக்கு வெளியே சிக்கல்களை சுமுகமாகத் தீர்த்துவைக்க முயற்சி செய்யலாம். ஆனால் இவர்களது முடிவுகளில் திருப்தி இல்லாதோர் நீதிமன்றங்களை அணுகி சட்டப்பூர்வமான தீர்வுகளைப் பெறமுடியும். ஃபத்வாக்களை ஏற்பதோ மறுப்பதோ தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் மதத்தின் அதிகாரம் கொண்டு ஃபத்வாக்கள் தரப்படுவதால் அவற்றால் நீதி மறுக்கப்படுவோர் மாற்று வழி தேடுவதற்குள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னது நீதிமன்றம்.

தாருல் உலூம் “கடவுளுக்கு அஞ்சும் யாரும் ஃபத்வாக்களை ஏற்பார்கள்” என்கிறது. ஃபத்வாக்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமை என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தாருல் உலூம் அதே பத்திரத்தில் “கடவுளுக்கு அஞ்சி வாழ்வோர், தாங்கள் கடவுளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று நம்புவோர், தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளைக் கடவுளின் ஆணைப்படிச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்வோர் ஃபத்வாக்களை மதித்து ஏற்பார்கள்” என்று சொல்கிறது. இது அப்பட்டமான மதரீதியான மிரட்டல்.

இம்ரானா விவகாரத்தில் மாமனாரின் காம வெறிக்குப் பலியான அந்த அப்பாவிப் பெண் தண்டிக்கப்பட்டாள். அவளோ அவளது கணவனோ கருத்துக் கேட்டு ஷரியா நீதிமன்றத்தை அணுகவில்லை. யாரோ சம்பந்தமில்லாத நபரான ஒரு பத்திரிகையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளது திருமணம் முறிக்கப்பட்டு அவள் கணவனுடன் வாழ தடை விதிக்கப்பட்டது. வன்கொடுமைக்கார மாமனாருக்கு எந்த தண்டனையும் இல்லை. இது நீதியே அல்ல.

சட்டத்தின்பாற்பட்ட ஆட்சி நடைபெறும் நாட்டில் இப்படி ஒரு சிக்கல் தீர்வு முறைகள் ஏற்கப்பட முடியாதது. மதம் சார்ந்த விவகாரங்களில் ஃபத்வா வெளியிடுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோருக்கான தனிப்பட்ட விவகாரம். ஆனால், ஒரு தனிநபரின் விவகாரத்தில் சம்பந்தமில்லாத ஒருவரின் வேண்டுகோளின்படி பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையும், குற்றவாளிக்கு விடுதலையும் வழங்கும் ஒரு முறைமையை நீதி நிர்வாகம் என்று ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட நபரோ அல்லது விவகாரத்தில் நேரடியான ஈடுபாடு உடையவரோ கேட்டால் மட்டுமே அந்த விஷயங்களில் ஃபத்வா வழங்கப்படலாம்.

ஆனால் இரு தரப்பாரில் ஒருவர் ஃபத்வாவை ஏற்கவில்லை என்றாலோ அல்லது இந்த பிணக்கு தீர்ப்பு முறைக்கு உடன்படவில்லை என்றாலோ அவர்களைக் கட்டுப்படுத்தி தங்கள் கருத்தை ஏற்கச்செய்யும் அதிகாரம் இந்த காஜி, முஃப்தி ஆகியோருக்கோ அல்லது தாருல் உலூம் அமைப்புக்கோ இல்லை.

முஸ்லிம் தனிநபரின் உரிமை, தனிநபர் நிலை, கடமைகள் ஆகியவற்றில் அந்த நபர் கேட்டுக் கொண்டால் மட்டுமே ஃபத்வா வழங்கவேண்டும். சம்பந்தமில்லாத நபர்களின் வற்புறுத்தலில் வழங்கப்படும் ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டோரைத் தண்டிப்பதோ, அப்பாவிகளை துன்பத்துக்கு ஆளாக்குவதோ, இரக்கமின்றி நடந்து கொள்வதோ அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். மனிதாபிமானமற்ற செயல்களுக்கு மத நம்பிக்கை பயன்படுத்தப்படக் கூடாது. சட்ட அங்கீகாரமற்ற எந்த ஒரு அமைப்பும் யாரையும் கட்டுப்படுத்தி எந்த ஒரு கருத்தையும் மதத்தின் பெயராலோ வெறெந்த நம்பிக்கையின் பெயராலோ திணிக்கமுடியாது.

சட்ட அங்கீகாரம் இல்லாத எந்த ஒரு அமைப்பும் எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்ப்புக்கூற உரிமையில்லை. அப்படித் திணிக்கப்படும் கருத்துக்கு சட்டப்படியான வலு இல்லை. சட்ட அங்கீகாரமில்லாத ஃபத்வாக்களை எவ்வித
மிரட்டலின் மூலமாகவும் நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி நடைமுறைப்படுத்த முயலும் யார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பினை சரியான முறையில் அமலாக்கினால் நாட்டில் சட்டப்படியான ஆட்சி நிலவும். ஹிந்துக்களுக்கு மட்டும் மதம் சாராத சட்டத்தின்படியான ஆட்சி முஸ்லிம்களுக்கு மதம் சார்ந்த சட்டத்தின்படி நீதி என்ற அநீதி இந்தத் தீர்ப்பின் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. குரான், ஷரியா என்று நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் தனித் தர்பார் நடத்திவந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவர்களை ஊக்குவிக்கும் மதத் தலைவர்களும் இந்தத் தீர்ப்பின் மூலமாகச் சட்ட அங்கீகாரம் அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஷாபானு வழக்குப் போல நீதிமன்றத்தின் நீதியைக் கேலிக்கூத்தாக்கி ஓட்டுக்கு மாரடிக்கும் அரசு மத்தியில் இல்லை என்ற நம்பிக்கையுடன் நாட்டின் அரசியல் சாசனத்தை அனைத்திலும் மேலானது என்று உயர்த்திப் பிடித்த இந்தத் தீர்ப்பை வரவேற்போம். வந்தே மாதரம்!

Monday, 4 August 2014


இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், இஸ்லாமிய மயமாக்கப்படுவதை கண்டித்தும் பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் 04.03.2014 அன்று பின்வரும் கோரிக்கைகளை மையமாக வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
  • பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்.
  • தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.
இது குறித்த செய்தி அறிக்கையை  வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக அறநிலையத்துறை, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு எதிராக புதிய வழக்குறைஞரை நியமித்து சரியான முறையில் வழக்கை நடத்தியது. இதன் விளைவாக ஏப்ரல் 17 2014 க்குள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் 22 2014 அன்று பழனி மலை பாதையில் (யானை பாதை, நடைபாதை இரண்டிலும்) இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
இதே போல், பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி விவகாரத்தில் ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் முஸ்லீம் இடஓதுகீட்டிற்கு கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதிலும் இந்துக்களுக்கு வெற்றி கிடைத்தது.

palani tasmac shop
இந்த இரண்டு வெற்றிகளை தொடர்ந்து பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தொடர்ந்து பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில் அரசு நடத்தி வரும் மதுபானக்கடையை அகற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இதன் விளைவாக நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பேரில் அரசு பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில் நடத்தி வந்த டாஸ்மாக் கடைகளை 01.08.2014 அன்று அகற்றியது.
ஒற்றுமையாக இந்துக்கள் போராடியதின் விளைவாக இந்த வெற்றிகள் படிப்படியாக பழனியில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இதை ஒருங்கிணைத்து வழி நடத்திய பழனிமலைக் கோவில் பாதுகாப்பு பேரவையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். இதுபோலவே அனைத்து ஊர்களிலும் இந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் அதர்மம் அகன்று தர்மம் நிலைபெறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!! 


திருவள்ளுவர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ்குமார் அண்மையில் ஜீன் 18ம் தேதி முஸ்லீம் பயங்கிரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் அருள்திரு.சக்தி அம்மா அவர்கள் (வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி கோவில்) சார்பாக ரூ.5 ஈலட்சம் வழக்கப்பட்டது. சுரேஷ்குமார்ன் மனைவி புவனா பெற்றுக்கொண்டார். அருகில் மாநில பொதுச் செயலாளர் சி.பரமேஸ்வரன் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கோட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி



பெரம்பலூர்,அரியலூர்,துறையூர், நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐஜேகே எனப்படும் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது. இதற்கு முன்னரே ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தருக்கு சொந்தமான கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றபோது, சிறப்பு விருந்தினராக மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார். இப்போது கூட்டணியில் உள்ள நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஐஜேகே கட்சி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார் பாரிவேந்தர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மேற்கண்ட ஊர்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைத்து நாட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.


-தினகரன்.

Saturday, 2 August 2014

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடலூர் அருகிலுள்ள இருரில்  இன்று மாலை நடந்த சாலைவிபத்தில் மூன்றுபேர் பலியாயினர்.

 பெரம்பலூர் அருகே சனிக்கிழமை மாலை சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மணப்பாறையிலிருந்து வேலூருக்குச் சென்ற காரில், வேலூரைச் சேர்ந்த சு. பாண்டுரங்கன் (60), அவரது மகளான கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதவள்ளி (35), பாண்டுரங்கனின் நண்பர் குப்புசாமி (52) ஆகியோர் இருந்தனர். காரை, திருச்சியைச் சேர்ந்த க. விஜய் (33) ஓட்டினார்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர மரத்தில் கார் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டுரெங்கனும், குப்புசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த பாடாலூர் போலீஸார் விபத்தில் சிக்கிய அமுதவள்ளி, ஓட்டுநர் க. விஜய் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அமுதவள்ளி உயிரிழந்தார். ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 


நன்றி-வசந்த ஜீவா..

பெரம்பலூர்,:  பெரம்பலூரில் ஆடிமாத 3வது வெள்ளியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
பெரம்பலூர் பூசாரித்தெருவிலுள்ள ரேணுகாம் மாள் கோயிலில் நேற்று மா லை ஆடிமாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, வீட்டிலுள்ளோர் ஆயுள்விருத்தி, ஆரோக்கியம் அதிகரிக்க செய்தல், சகல ஐஸ்வர்யங்களை வேண்டுதல், கல்விவிருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பகோணம் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணகிரி, நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் பாபு, பிரியதர்ஷினி சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டனர்.இதேபோல பெரம்பலூர் அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சிறப்புபூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அகமுடையார் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மழைக்காகவும், உலக நன்மைக்காகவும் வழிபாடு செய் தனர். மேலும் பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் தென்புறத்திலுள்ள அய்யப்ப சுவாமி திருக்கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 250 திருவிளக்குகள் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வாசவி கண்ணிகா பரமேஸ்வரி கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 108விளக்குகள் ஏற்றிவைத்து சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


-தினகரன்.

பெரம்பலூர், : செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட் டம் செங்குணத்தில் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆடிபெருந்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் திருத்தேர் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான தேர்திருவிழா கடந்த 17ம்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 24ம்தேதி காப்பு கட்டுதல், 25ம்தேதி அன்னவாகனத்திலும், 26ம்தேதி புஷ்பவாகனத்திலும், 27ம்தேதி சிம்ம வாகனத்திலும், 28ம்தேதி பூப்பல்லக்கிலும், 29ம் தேதி மயில்வாகனம் என பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் தினமும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். 30ம்தேதி பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி ஏந்துதல், அலகுகுத்துதல், தீ மிதித்தல்  நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 10மணியளவில் திருத்தேர் வடம்பிடித்து இழுக் கப்பட்டு வீதியுலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
மாலையில் தேர்நிலைக்கு வந்ததடைந்தது. இரவு நாடகம் நடைபெற்றது. விழாஏற்பாடுகளை ஊராட்சிமன்றத் தலைவர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

- தினகரன்.

Thursday, 31 July 2014

He is a suspected terrorist for India’s security establishment.
However, this hasn’t stopped Kerala Chief Minister Oommen Chandy meeting Bangalore blasts accused Abdul Nasser Madani. Investigators and the prosecution team in Karnataka are fuming. And quite understandably.
Madani an accused in the 2008 Bangalore blasts case. He was released on bail for a month on medical grounds after being jailed for four years. Kerala CM Chandy, throwing all sense of propriety to winds, called on him at a health resort in Bangalore a couple of days ago, angering investigators and the prosecution team in Karnataka.
“Madani is not in custody for any ordinary case. It is a case of terrorism,” a member of the prosecution team in the Bangalore blasts case said. “The evidence is very circumstantial like it is in any case of terrorism and the battle in court is a tough one. It is very important that the witnesses stick to their stand. If chief ministers call on an accused, then it could prove fatal.”
A state chief minister so brazenly meeting terror accused like Madani shows the extent to which the Congress is desperate for the Muslim vote. Madani is an accused in terror attacks, but this has made no difference to the clout enjoys among Muslims in Kerala. And the Congress, desperate to hang on the power in a state that gave it its maximum number of MPs in its ignominious national tally of 44 parliamentary seats, has decided that it dare not ignore a man who can influence Muslim votes in the some of the Kerala’s regions, particularly Malabar. For those who may not know, there are posters in this region demanding his release. Not only that, the state Kerala government had also staged a symbolic protest when the Karnataka police arrested Madani in August 2010 for his suspected role in the Bangalore bomb blasts.
The Kerala Congress regime, in fact, even called on the Karnataka government for releasing Madani. Not content with that, a resolution was passed in the state assembly to this effect as well.
Investigating officials of the 2008 Bangalore blasts case say, “Madani was arrested when the BJP was in power in Karnataka. A change in the state government today cannot be allowed to lead to a change in the policy of the state. A chief minister of a state cannot come in and go about his business personally, as there is protocol involved. For any such visit, a clearance has to be given by the state home ministry”.
For certain politicians though, courting the votes of the openly anti-national to cling on the power is all that matters, the nation and its security be damned. 


Amarnath Yatra pilgrims have been attacked by local Muslims in J&K.
More anguishing is the fact there has been a near-total blackout of news about this development by almost all leading media outlets, even as endless space is being devoted to the baseless allegations of Arvind Kejriwal, about the BJP out to buy some of the AAP legislators in what he alleges is a bid to form a government in Delhi.
According to reports, there have been incidents of violence against the langarwalas and pilgrims at Baltal, by local Muslim miscreants, which include pony operators. Amarnath Yatris were attacked at Kangan and Baltal by the violent Muslim mob, in which has dozens of yatris of seriously injured. Some CRPF personnel have also been injured.
Reports received say that the attackers burnt down three langars, broke and looted the provisions including on whatever they could lay their hands on, of the remaining langars at Baltal. Reports also say that these incidents of violence have spread up to Sonamarg. There is all likelihood of it spreading to other the other areas of valley if the state government doesn’t take appropriate steps.
It is no secret that J&K state governments, over the years, have been trying everything to scuttle the Amarnath Yatra using various pretexts. The latest attacks have created a fear psychosis among both yatris and Langarwalas. The anti-Hindu state administration leaves no stone unturned to either obstruct the Amarnath Yatra by fomenting trouble every year with the sole aim of discouraging the yatris, or to get the pilgrimage scuttled altogether. Hindu leaders from Jammu & Kashmir have repeatedly alleged in the past that the state’s various regimes are bent on ending the Amarnath Yatra, an ancient historic and religious legacy of all Hindus, by encouraging separatist and even terrorist elements.
The state VHP has warned the state government and take action to immediately control the situation and arrest the perpetrators of this attack, as well as pay full compensation for the losses incurred due to the damage of the langars. It has also demanded that the state government must ensure that full safety of the yatris. The VHP intends to send a delegation to Baltal and other affected areas involved. After assessing the situation, the VHP may call for a Jammu Bandh and even a Bharat Bandh later.
Advocate Chander Mohan Sharma, National Co-Convener of Jammu and Kashmir Cell of BJP demanded that the state government provide adequate security to the Amarnath Yatris immediately.
This incident should serve as eye-opener for the government who is claiming of providing foolproof security for the yatris. He alleged that the latest attack on Hindu pilgrims has been provoked by the anti-national utterances of Kashmiri separatist Ali Shah Geelani and also due to slackness on the part of administration. He warned the state government that such incidents in future will not be tolerated.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 14 வயது சிறுவனை பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அவரது பக்கத்துவீட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அண்மையில் பாலியல் வல்லுறவு செய்தாராம். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த சிறுமியின் தாய் வெண்ணிலா, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஆய்வாளர் ரஞ்சனா, மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தார். மேலும் மாணவி குழந்தைகள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்களை தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வந்த சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணான 100-ல் கடந்த 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, இளைஞர் ஒருவர் ஒரே செல்போனிலிருந்து, பல்வேறு எண்கள் மூலமாக அங்கு பணிபுரியும் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, காவலர்களை மிரட்டியும் வந்தார்.
ஏறத்தாழ ஒரே நேரத்தில் 25 அழைப்புகள் வந்துள்ளன. மகளிர் போலீசார் போனை எடுத்து பேசினாலும், அவர்களுக்கும் இதே நிலை நீட்டித்தது.


பொறி வைத்து பிடித்தனர்!
   
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அதிகாரி மரிய ஆரோக்கியம் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மகாவிஷ்ணு (17) என்பதும், இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்புகொண்டு காவலர்களை திட்டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மகாவிஷ்ணுவை கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

-தினகரன்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் திறந்தமுறை ஏலம் நடைபெறும் என்றார் வேளாண்மை துணை இயக்குநர் செ. சுப்ரமணியன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 24-ம் தேதி செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் ஏலம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொள்ளும்போது வெங்காயத்தை விற்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எற்படும் சிரமங்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, மறைமுக ஏலத்துக்குப் பதிலாக திறந்தமுறை ஏலம் ஒவ்வொரு குவியலுக்கும் தனித்தனியாக நடத்தி உடனடி பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்தமுறை ஏலம் நடைபெறும்.
எனவே, விவசாயிகள் தங்களிடமுள்ள சின்ன வெங்காயத்தை முற்பகல் 11 மணிக்குள் செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
வியாபாரிகள் தங்களது பெயரை பதிவு செய்த பின் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். அதிக விலை குறிப்பிடும் வியாபாரிக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஏலம் எடுத்ததற்கான தொகையை வியாபாரிகளால் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின்மூலம் கிராம வறுமைஒழிப்பு சங்கங்கள் வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குழுக் களை வலுப்படுத்தி பயிற்சி மற்றும் ஆதாரநிதி வழங்கப்பட்டுவருகிறது.
மாற்றுத்தினாளிகள் மற்றும்நலிவுற் றோர் வாழ் வில் முன்னேற்றமடைய தாங்கள் சிறு தொ ழில் தொடங்க தனி நபர்கடன் வழங்கியும் மாற்று திறனாளிகளுக்கு தேவை யான உதவி உபகரணங்களும் பெற்று தரப் பட்டு வருகி றது. 18வயதுமுதல் 35வயது வரையுள்ள இளைஞர்களுக்கு ஜேசிபி டிரை விங், வெல்டிங், கணினி, டை லரிங், கேட்ட ரிங், சிஎன்சி, கொத்தனார், பிளம் பிங், சென்ட்ரிங், பொக்லிங் டிரைவிங் போன்ற பயிற்சியளித்து பயி ற்சி முடிந்தவுடன் தனியார் நிறுவனங் களில் வேலை வாய்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு கிராம வறுமைஒழிப்பு சங்கங்களின்மூலம் கிராம கற்றல் மையம் அமைக்கப்பட்டு போட்டித் தேர்வாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு, புத்தகம் மற்றும் சிடிக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புது வாழ்வுத் திட்டத்தின்மூலம் தற்பொழுது அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் ஆகியகிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் மின்ஆளுமைத் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் சேவைமை யம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் பொது மக் கள் பயன்பெறும் வகையில் வருமான சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடச்சான்று, விதவைசான்று மற்றும் முதல் பட்டதாரிக்கானசான்று போன்ற சான்றிதழ்களை இந்த மையத்திலேயே பெற் றுக் கொள்வதற்கான வசதி கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்சொன்ன சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு செல்லவேண்டியதில்லை. பொதுமக்கள் சேவை மையங்களிலேயே பதிவுசெய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரியவாய்ப்பினை முறையாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கலெக்டர் (பொ)ராஜன் துரை தெரி வித்துள்ளார்.


-தினகரன்.

Wednesday, 30 July 2014


கும்பகோணம், : ஆடிபெருக்கு விழாவுக்காக கும்பகோணத்தில் அவல் இடிப்பதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழர்களின் முக்கிய திருவிழாவில் ஒன்று ஆடிபதினெட்டாம் நாள் வரும் ஆடிப்பெருக்கு விழா. இந்த விழா காவிரி ஆறு துவங்கும் தலைக்காவிரியில் தொடங்கி அந்த ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் வரை நடக்கிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், விவசாயிகளை காப்பாற்றி வரும் நீர் ஆதாரமாக திகழும் ஏரி, குளம், ஆறுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு வரும் 3ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் எவ்வளவு உற்சாகமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் பதினெட்டாம்பெருக்கு விழா மட்டும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், தங்களுக்கு விவசாயத்தை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக விளங்கும் நீர் நிலைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி கரையோர மக்கள் குறுவை, சம்பா இப்படி எந்த போகத்தில் நெல் விளைந்தாலும் அந்த நெல்லில் கொஞ்சம் எடுத்து காவிரி தாய்க்கு படைப்பதை இன்றளவும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்படி எடுத்து வைத்த நெல்லை அவலாக இடித்து இதை காவிரிக்கு படைப்பதும், உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் வழக்கம்.
குறிப்பாக காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களும், வீராணம் ஏரிக்கரையோர மக்களும் அதிகளவில் ஆடிப்பெருக்கு விழாவில் அவல் வைத்து படைத்து வருகின்றனர். இதற¢காக விளைந்த நெல்லை எடுத்து அவலாக இடித்து வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள மில்லில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று அவல் இடித்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்குடி, த.பழூர், அரியலூர், மதனத்தூர், நீலத்தநல்லூர், அணைக்கரை, முள்ளங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெண்கள், ஆண்கள் அதிகாலை முதல் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அவல் இடிக்கும் மில்லில் குவிய துவங்கினர். நேற்று அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்று நெல்லை கொடுத்தனர். இந்த நெல்லை வாங்கி அதை வறுத்து பின்னர் அவலாக இடிப்பதற்கு ஒரு கிலோவுக்கு கூலியாக ரூ.7 வசூல் செய்யப்படுகிறது.
இந்த அவலை சில மணி நேரங்களில் கொடுப்பதும் உண்டு. கூட்டம் அதிகமாக இருந்ததால் மறுநாள் வழங்கப்படுவதும் உண்டு. அவல் இடிப்பதற்காக காசிராமன் தெருவில் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.  இதுகுறித்து அணைக்கரையை சேர்ந்த விசாலாட்சி கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஆடிபெருக்குக்கு கும்பகோணத்தில் அவல் இடிப்பது வழக்கம். இந்த பகுதியில் இங்கு மட்டும் தான் அவல் மிஷின் உள்ளது. நான் காலை 5 மணிக்கு வந்து 8 மணிக்கு தான் மில்லில் கொடுத்துள்ளேன். நாளை தான் கிடைக்கும் என்கின்றனர். வழக்கம்போல் இந்தாண்டும் கூட்டம் அதிகமாக உள்ளது என்றார்.
ஒழுகச்சேரி ராஜேஸ்வரி கூறுகையில், ஆடிப்பெருக்கு விழாவில் பழங்கள் வைத்து படையலிட்டாலும் அவல் தான் முக்கியம். வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்யும் முன் ஒரு 6 மரக்கால் எடுத்து தனியாக வைத்துவிடுவோம். ஆடிபெருக்கு வரும்போது அந்த நெல்லை எடுத்து அவல் தயாரிப்போம். எங்கள் ஊரிலிருந்து 30 பெண்கள் வந்துள்ளோம். காலை 6 மணிக்கு நெல்லை கொடுத்துள்ளோம் என்றார்.
அவல் தயாரிப்பாளர் தங்கப்பன் கூறுகையில், காலம்காலமாய் இந்த பழக்கவழக்கம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடக்குகரையில் உள்ளவர்கள் தான் இங்கு அதிகம் வருகின்றனர்.
பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் பகுதியை எடுத்து கொண்டால் கும்பகோணத்தில் இங்கு மட்டும் தான் மில் உள்ளது. ஆடிபெருக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவல் தயாரிப்பு துவங்கிவிடும். இதற்காக இரவு பகலாக தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் வேலைபார்த்து வருகிறோம். முன்பெல்லாம் நெல்லை கொடுத்து 2 மணி நேரத்தில் அவல் பெற்று செல்லலாம். கூட்டம் அதிகமாக இருப்பதால் நெல்லை வாங்கி கொண்டு மறுநாள் வரச்சொல்கிறோம். முடிந்தால் அன்றே கொடுத்து விடுவோம். தற்போது நாள் ஒன்றுக்கு 6 டன் நெல்லை அவலாக இடித்து தருகிறோம் என்றார்.தாய் வீட்டு சீதனமாக அவல்
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு எப்படி தாய் வீட்டு சீதனம் பெண்களுக்கு அனுப்பப்படுகிறதோ, அதேபோல் ஆடிப்பெருக்கு விழாவிற்கு கொள்ளிடம் கரையோர கிராமத்தில் அவல் சீதனமாக வழங்கப்படும். பிறந்த பெண்களுக்கு அவலை மகிழ்ச்சியாக வழங்கினால் அந்த வீடும் மகிழ்ச்சியாக ஆண்டு முழுவதும் இருக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் இடித்து செல்லும் அவலில் அதாவது 6 மரக்கால் இடித்தால் 2 மரக்கால் பெண்களுக்கு வழங்கப்படுவதுண்டு.
உற்சாகமான நாள்
காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றாலும், ஆடிப்பெருக்கு விழாவின்போது அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று புதுமண தம்பிகள் மட்டுமல்லாது, கிராம மக்கள் அனைவரும் வழிபாடு செய்வர். புதுமண தம்பதிகள் மஞ்சள் கயிறு மாற்றி கொள்வதும், சர்க்கரை கலந்து அவலை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வதையும் உற்சாகமான விழாவாக கொண்டாட போவதாக அவல் உடைக்க வந்த பெண்கள் பலரும் தெரிவித்தனர்.

-தினகரன்.

பெரம்பலூர், : பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது என சதுர்த்தி விழா ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பூசாரித் தெருவிலுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.
விழா கமிட்டியின் தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். பிரபு அய்யர் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட துணைத்தலைவர் வாசு தேவன், நகரத் தலைவர் குருராஜேஷ் ஆகியோர், சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில், கதிர்வேல், கஜேந்திரன், ராஜேஷ், சிவகுமார், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணன், ஞானப்பிரகாசம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் வருகிற ஆகஸ்டு 29ம்தேதி விநாயகர் சிலைகளை வைப்பது. 31ம்தேதி (ஞாயிறு) மாலை 3 மணியளவில் அனைத்து சிலைகளையும் பெரம்பலூர் பழைய பஸ்ஸ் டாண்டு அருகிலுள்ள செல்வவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பது என முடிவு செய்யப் பட்டது. கமிட்டியின் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

-தினகரன்.

பெரம்பலூர், : அயன்பேரையூர் வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் கலெக்டர்(பொ) இராஜன்துரையிடம் வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:
வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்காக இதுவரை மயான வசதி செய்துதரவில்லை. இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் நீண்ட காலமாக வெள்ளாற்று புறம்போக்கில் உறவினர்களின் சடலங்களை புதைத்து வருகிறோம். அப்பகுதிக்கான பாதை வசதி கிடையாது. ஏற்கனவே பாதை வசதிக்காக அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தனியார் நிலத்தில் நில உரிமையாளர் நீதிமன்ற தடையாணை பெற்று பயிரிட்டு வருகிறார்.
எனவே ஆற்று வெள்ளத்தில் சடலங்களை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்படாமல் இருக்க ஆற்றின் கரையோரம் தடுப்பணை கட்டி பாதை வசதி செய்துதர வேண்டும். வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள எங்கள் மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டும். வெள்ளம் வரும் முன்பாக இதற்கான தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

-தினகரன்.
தினகரன் செய்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருந்துவமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச கண் புரை பரிசோதனை முகாம் இன்று (30ம் தேதி) முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கண் புரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர் களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கும் வகையில் இம்முகாம் நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சிப் பகுதிக்கு சென்று மருத்துவக் குழுவினர் கண்புரை உள்ளவர்களை கண்டறியும் பரிசோதனை நடத்த உள்ளனர்.
இதன் படி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் திருமாந்துறையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நாளை (31ம் தேதி) சு.ஆடுதுறையிலும், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1ம் தேதி) வடக்கலூரில் நடைபெறுகிறது,.
2ல் அகரம்சீகூர், 5ல் கீழ பெரம்பலூர், 6ல் துங்கபுரம், 7ல் காடூர், 8ல் பெரிய வெண்மணி, 9ல் அந்தூர், 12ல் வேப்பூர், ஒலைப்பாடி, 13ல் கீழு மத்தூர், 14ல் சிறுமத்தூர், 16ல் கீழப்புலியூர், 19ல் சித்தளி, 20ல் குன்னம், 21ல் மூங்கில்பாடி, 22ல் பேரளி ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடைபெறுகிறது.
இன்று பெண்ணகோணத்திலும், நாளை (31ம் தேதி) ஒகளுர், ஆகஸ்ட் 1ல் அத்தியூர், 2ல் வசிஸ்டபுரம், 5ல் வயலப்பாடி, 6ல் புதுவேட்டக்குடி, 7ல் கொளப்பாடி, 8ல் வரகூர், 9ல் பரவாய், 12ல் நன்னை, 13ல் பெருமத்தூர், 14ல் ஆண்டிக்குரும்பலூர், 16ல் எழுமூர், 19ல் அசூர், 20ல் பெரியம்மாபாளையம், 21ல் ஒதியம் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 முதல் மாலை 4 வரை முகாம் நடைபெறுகிறது.

வ.களத்தூர் -ஆகஸ்ட் 2ம் தேதி.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக.1ல் அன்னமங்கலம்,  ஆகஸ்ட் 2ல் வ.களத்தூர், 4ல் தொண்டமாந்துறை, 5ல் தேவையூர், 6ல் வெங்கலம், 7ல் நூத்தப்பூர், 8ல் எறையூர், 9ல் வாலிகண்டபுரம், 11ல் பசும்பலூர், 12ல் கை.களத்தூர், 13ல் அனுக்கூர், 14ல் காரியனூர், 16ல் மளையாளப்பட்டி, 18ல் பிரம்மதேசம், 19ல் மேட்டுபாளையம், 20ல் நெய்க்குப்பை, 21ல் அயன்பேரையூர், 22ல் பெரியம்மாபா ளையம், 23ல் பில்லாங்குளம், 25ல் பிம்பலூர், 26ல் தழுதாழை, 27ல் தொண்டபாடி, 28ல் திருவாளந்துறை, 30ல் பெரியவடகரை, செப்.1ல் இனாம்அகரம், 2ல் வெண்பா வூர், 3ல் பாண்டகபாடி, 4ல் உடும்பியம் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
இதே போல், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கவுல்பாளையம், நாளை கல்பாடி, ஆக.2ல் நொச்சியம், 5ல் அம்மாபாளையம், 6ல் அய்யலூர், 7ல் வடக்குமாதவி, 12ல் லாடபுரம், 13ல் சத்திரமனை, 14ல் கீழக்கரை, 16ல் சிறுவாச் சூர், 19ல் எசனை, 20ல் வேலூர், 21ல் கோனேரிபாளையம், 23ல் செங்குணம், 26ல் எளம்பலூர், 27ல் பொம்மனப்பாடி, 28ல் மேலப்புலியூர், செப்.2ல் செஞ்சேரி, 3ல் புது நடுவலூர், 4ல் பெரம்பலூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 30) செட்டிகுளம், நாளை (31ம் தேதி) அடைக்கம்பட்டி, ஆக. 1ல் காரை, 2ல் கொளக்காநத்தம், 4ல் மேலமாத்தூர், 5ல் ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 6ல் நாரணமங்கலம், 7ல் நாட்டார்மங்கலம், 8ல் மாவிலங்கை, 9ல் தேனூர், 11ல் நக்கசேலம், 12ல் தெரணி, 13ல் சிறுகன்பூர், 14ல் சாத்தனூர், 16ல் கொட்டரை, 18ல் அல்லிநகரம், 19ல் கூடலூர், 20ல் திம்மூர், 21ல் இலந்தங்குழி, 22ல் அயனாபுரம், 23ல் சில்லக்குடி, 28ல் ஜமீன் ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.
ஆக.6ல் இரூர், 7ல் குரூர், 8ல் கண்ணப்பாடி, 9ல் டி.களத்தூர், 11ல் சிறுவய லூர், 12ல் வரகுபாடி, 13ல் குரும்பாபாளையம், 14ல் பிலிமிசை, 16ல் கீழமாத்தூர், 18ல் ஜமீன்பேரையூர், 19ல் கூத்தூர், 20ல் அருணகிரிமங்கலம், 21ல் நொச்சிக்குளம், 22ல் புஜங்காரயநல்லூர், 23ல் ராமலிங்கபுரம், 28ல் கொளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை கண்புரை நோயாளிகள் கண்டறியும் முகாம் நடை பெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர், செயலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


-தினகரன்.

சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநில இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று மதியம் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதை இந்து முன்னணி நிர்வாகிகள் படித்து பார்த்தனர்.
அதில் இந்து இயக்கம் மற்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர்களை கொலை செய்யப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், பரமேசுவரன், முருகேசன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் இளங்கோ அதை பெற்றுக் கொண்டார். அதில் கூறிஇருப்பதாவது:–

  "இஸ்லாத்தை இழிவு படுத்தியும் எங்கள் அன்பு மதத்தை கொச்சைப் படுத்தியும் பேசி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருபவர்களை ‘குர்பானி’ இடுவோம். சென்னையில் பி.ஜே.பி.யில் ‘தீ’ என்றாலும் தஞ்சையில் ‘ம்’ என்றாலும், சிவகங்கையில் ‘ஜா’ என்றாலும், கோவையில் ‘ஸ்’ என்றாலும், திருச்சியில் ‘ர்’ என்றாலும், விருதுநகரில் ‘தீ’ என்றாலும் முன்னணியில் சென்னை ‘ன்’ என்றாலும், திருப்பூர், கோவையில் ‘ணி’ என்றாலும், நெல்லையில் ‘ஜா’ என்றாலும் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள்.
இப்படிக்கு இம்மாமலை சகோதரர்கள், மத்வா குழு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புவோர் விலாசம் பாலக்காடு, கேரளா என்று எழுதியுள்ளது.
  இந்த மிரட்டல் கடிதத்தில் 9 பெயர்கள் குறிப்பிட்ட எழுத்துக்கள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் கொலை ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்பு இந்த மர்ம கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பத்வா கடிதம்.


பத்திரிக்கைச் செய்தி

மாலைமலர்

Monday, 28 July 2014







Two people have been reported dead, 20 injured and more than 50 Shops burnt in a violent altercation that took place between 'the minority' and other communities in Saharanpur today. All this barely three moths after Congress LS2014 candidate Imran Masood had said "Muslims are 40% in Saharanpur, if Modi comes we'll chop him to pieces".

The riot started after an old prolonged quarrel between Muslims and Sikhs bodies over a religious land - Guru Singh Sabha on Gurdwara Road of Qutub Sher area. The roots of this riot go back months when the land for Sikhs Gurudwara was claimed by a local Muslim body.The concerned parties took the matter to courts and after years of deliberation the local court ruled in favour of Sikhs, declaring the Muslims’ claim as illegal trespassing on Gurudwara land.
Following this verdict from courts, the infuriated Muslim community started the construction at the disputed site by placing a lintel at wee hours of Saturday morning (26th July 2014). This irked the Sikh community and led to clashes which soon erupted into a major violence all over the town.
However, the issue didn’t stay limited to the Sikh and Muslim bodies. The fire spread to other communities as well when good Samaritans in the region came forward in support of the law and court verdict and stood besides the sikh community. Soon personnel and property of every non-Muslim community in the area was attacked turning this into a major riot situation. Two Hindus were killed in the mob attack by Muslim mobs.

As reports last came in, 50 shops of the majority community were burnt to cinder. Prohibitory orders under section 144 of CrPC have been invoked in the district and curfew has been clamped in six areas. Unfortunately, the local police have lost the trust of the people after earlier such incidences of riots. People suspect that the local police will not touch Muslim rioters unless Azam Khan lets them. Some eyewitnesses report that Muslim mobs in thousands came and surrounded the Police Station in the area and assaulted the police personnel as well.
As a matter of fact the Muslim rioters were spotted assaulting the police leading to complete mayhem on the streets.


Sensing the urgency of the situation a large contingent of security personnel including those of police, Provincial Armed Constabulary (PAC) and Rapid Action Force (RAF) has been deployed in the area and paramilitary forces have also been called. The Security forces are being rushed in to control the situation.

Sunday, 27 July 2014


பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 9 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரத்தில் கல்விக்கடன் பெறுவதற்கான ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கி அலுவலர்களும் பங்கேற்றனர்.
664 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதில், 586 பேரின் விவரங்கள் கணினிகள் மூலம் பதியப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
வங்கியாளர்களிடம் கல்விக்கடன் கேட்டு வழங்கிய 537 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கல்லூரிக் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று கல்விக்கடன் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விஏஓ, வருவாய் ஆய்வாளர்களால் கணினியில் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் வட்டாட்சியர்களின் மின் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. 68 மாணவ, மாணவிகளுக்கு உடனடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் ஆக. 2-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார் அவர்.
முகாமில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் என். ராஜா (தஞ்சை), கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் ராமசாமி, முதன்மை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் அருகே சனிக்கிழமை பிடிபட்ட மலைப்பாம்பு சிறுவாச்சூர் காப்புக் காட்டில் விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிக் குழுவினருக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று மலைப்பாம்பை பிடித்து, வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 9 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை சிறுவாச்சூர் காப்புகாட்டில் உள்ள பெரியசாமி கோயில் பகுதியில் விட்டனர்.


-தினமணி. பட உதவி-வசந்த ஜீவா .

அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்' http://mygov.nic.in/home_new#  என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 60 நாள்கள் நிறைவடைந்துள்ள தினத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தங்கள் நேரத்தையும், உழைப்பையும் அளிக்க பொது மக்கள் தயாராக உள்ளனர். இதை கடந்த 60 நாள் ஆட்சியில் எனது அரசு உணர்ந்துள்ளது.
ஆகையால்தான், அரசு நிர்வாகத்துக்கு நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக இந்த புதிய இணையதளம் (ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) தொடங்கப்பட்டுள்ளது.
இதில், கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து, மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம். இது அரசு நிர்வாகத்துக்கும், பொது மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக செயல்படும். பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் ஜனநாயகம் எப்போதும் வெற்றி பெறாது.
மக்களின் பங்களிப்பு தேர்தலுடன் நின்றுவிடக்கூடாது. இந்த இணையதளத்தை நடைமுறைப்படுத்தியுள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, அதைத் தொடர்ந்து கையாளும். தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த இணையதளம், நல்லாட்சிக்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் ஆய்வு: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஆர்.எஸ். சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுத்தமான இந்தியா, திறன் மிக்க இந்தியா, வேலைவாய்ப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட இந்தியா என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், எண்ணங்கள் பெறப்படும்.
அவை நிபுணர்கள் குழுவில் வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும். அதில் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த இணையதளத்தின் செயல்பாடு குறித்து 3 மாதங்களில் ஆய்வு செய்யப்படும். அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீதும் மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என்று கூறினார்.
கருத்து பதிவு செய்வது எப்படி?: இந்தப் புதிய இணையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். இதற்காக "ஆலோசனை', "செயல்' என்ற இரு பிரிவுகள் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதைச் சொடுக்கி (கிளிக் செய்து) தங்கள் விவரங்களைப் பதிவு செய்து "பயன்பாடு பெயர்' மற்றும் "கடவுச் சொல்' பெறலாம். அதைக் கொண்டு, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பதிவு செய்யலாம்.
அரசுச் செயலர்களுடன் ஆலோசனை: இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அமைச்சகங்களின் செயலர்களுடன் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மின்னுற்பத்தி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, நிலக்கரி உள்ளிட்ட அமைச்சகங்களின் செயலர்கள் பங்கேற்றனர்.
மத்தியத் திட்டக் குழுவின் செயலர் சிந்துஸ்ரீ குல்லர், 2013-14ஆம் ஆண்டில் முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிகழாண்டில் அந்தத் துறைகளுக்குள்ள சவால்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
நிகழாண்டில் 300 கி.மீ. தூரம் புதிதாக ரயில் பாதை அமைப்பதற்கும், 700 கி.மீ. இரட்டை வழி ரயில்பாதை அமைப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்தும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு 2017ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை சேவை வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.