Friday, 14 February 2014



தெரிந்து கொள்வோம் - அல்உம்மா மற்றும் சிமி
...................................................................................
1993-ல் அல்உம்மா இயக்கம் எஸ்.ஏ.பாட்சா மற்றும் எம்.ஹெச்.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள உக்கடம் கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைத்து தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை ஆரம்பித்தது இந்த இயக்கம்.

அல்உம்மா இயக்க தலைவர் பாட்சா மர வியாபரம் செய்து வந்தவன். மேலும் பல முஸ்லிம் வியாபாரிகள் இந்த இயக்கத்திற்கு பண உதவி செய்தனர். ஆரம்பத்தில் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்க்காக என்று சொல்லி ஆரம்பிக்கபட்டாலும் பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதும், இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கட்ட பஞ்சாயத்து செய்வதும் தினசரி வேலையாக மாறிவிட்டது.

1996-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 15 அல் உம்மா இயக்கத்தினர் ஜனவரி மாதம் 1997-ல் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவுடன், மீன்டும் தங்களது பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முனைந்தார்கள் அதன் விளைவாகவே சில சம்பவங்கள் நடைபெற்றன.

அல்உம்மா இயக்கத்தினரால் 1996-ல் நடு நிலை வகித்த இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காகவே, சென்னையில் 30.7.96-ல் ஆசியா ஹோட்டல், 27.9.1996-ல் ஹோட்டல் இம்பீரியல், 25.10.1996-ல் லக்கி ஹோட்டல்கள் தாக்கப்பட்டன, இந்த தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்த இயக்கத்தினரால் 3.12.1997-ந் தேதி உடுமலை பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

மேலும் 6.12.1997-ந் தேதி அயோத்தி சம்பவத்தின் நினைவு தினத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டு வெடித்ததில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

29.8.1997-ல் மதுரை சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் சிறைசாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இதே சமயத்தில் காவல் துறை ஆய்வாளர் முரளி மீதான வெடி குண்டு தாக்குதலில் அதிர்ட்ஷவசமாக அவர் உயிர் தப்பினார்.

29.11.1997-ந் தேதி எவ்வித ஆவணங்கள் இல்லாமல் உக்கடம் பகுதியில்இரு சக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எவ்வித ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் தாங்கள் இஸ்லாமியர்கள் எங்களை விசாரிக்க கூடாது என ஆர்பாட்டங்கள் நடத்தி வெளியேறிய போது அருகில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

14.2.1998ந் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்குகொள்வதற்காக வருகை புரிந்த அத்வானி அவர்களை கொல்லும் விதமாக வெடி குண்டுகள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதல் என்பதும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் இந்த சம்பவம் மட்டுமே. 19 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்த்தின் காரணமாக 58 பேர்கள் இறந்தார்கள், 250க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். மேலும் 13 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

14.2.1998ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் சில தினங்களில் இஸ்லாமியர்களின் வன்முறை சம்பவங்களின் காரணமாக மேலும் 10 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

அல் அமீன் காலனியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போது, வீட்டில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்து நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. அல்உம்மா நிர்வாகிகள் உடனே தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டுமே மாறி இருக்கிறது. தமிழகத்தின் சிமி பொறுப்பாளராக இருந்து ஜவஹருல்லா இன்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவன் ஆகி விட்டார். 


நன்றி-https://www.facebook.com/hindumunnani.rameswaram
           முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்  மதரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் அமைப்புச்சட்டதிற்கு எதிரானது என்பது மட்டுமல்ல , தமிழ்நாட்டின் மக்கள்தகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட(BC) மக்களிடமிருந்து  பிடுங்கப்பட்டதே. ஏன் இதனை நாம் எதிர்க்க வேண்டும்.....? 

          தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 25 சதவீதமாக குறைந்தது. கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 1..5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள்  கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து  ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என   கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால்  முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

         உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும்  நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு . இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின்  இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின்   தற்போதைய இடஒதுக்கீடு  முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

         தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட  இடஒதுக்கீடானது  பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது.   தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது  தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் ,  பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

          பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சார்ந்த சாதிஅமைப்புகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீடு BC எனப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை என்பதை கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் காத்துவருகின்றன. நீதிமன்ற படியைகூட இதற்க்கு எதிராக மிதிதார்களா எனத்தெரியவில்லை .மேலும்இஸ்லாமியஅமைப்புகளின்கோரிக்கையான ஏழு சதவீதமும் வழங்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை பிற்படுத்தப்பட்ட மக்களும், அதன் சாதி சங்கங்களும் கண்டுகொள்ளாமல் உள்ளதுதான் வேதனை.

      

Wednesday, 12 February 2014



அகமதாபாத்: குஜராத் முதல்வர் தேநீர் அருந்தியபடி காணொலிக் காட்சி மூலம் பேச்சு நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் மோடி ஆற்றும் உரை நாடு முழுவதும் டீக்கடைகளில் ஒளிபரப்பட்டது. அகமதாபாத்தில் மோடி ஆற்றும் உரை தமிழக டீக்கடைகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் வீடியோ திரை அமைக்கப்பட்டு மோடி ஆற்றும் உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காணொலிக் காட்சியில் பேசிய அவர், டீக்கடைகள் 'நாட்டின் நடைபாதை நாடாளுமன்றம்' என மோடி வர்ணித்தார்.

பல்வேறு பிரச்சனைகள் டீக்கடைகளில் விவாதப் பொருளாகி இருப்பதாக கூறிய மோடி, வியாதி போன்ற மோசமான அரசு நிர்வாகம் நாட்டை நாசமாக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறிய மோடி, கருப்புப் பணத்தை நினைத்து நாடே கவலைப்பட்டுள்ளதாக கூறினார்.

நன்றி-தினமணி.

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 40பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் தேசியஅளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.1963ம்ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 50ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது, அதே நாக்பூர் நகரில் தேசிய அளவி லான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், மரவள்ளி, பயிர்வகைகள், கீரைவகைகள் உள்ளிட்டவற்றில் திறம்பட சாகுபடி செய்துவரும் விவசாயிகள், ஒன்றியத்திற்கு 10பேர்என மாவட்டஅள வில் 40பேர் தேர்வுசெய்யப்பட்டு, தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங் கில் பங்கேற்க வேளாண்மைத்துறை அலுவலர் துணையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.
இதில் பெரம்பலூர் வட்டாரத்திலிருந்து கோனேரிப்பாளையம் பெருமாள், அம் மாப்பாளையம் புருஷோத்தமன், துரைராஜ், கீழக்கரை செந்தில்குமார், செங்குனம் முத்தமிழ்செல்வன், எசனை செல்வக்குமார், களரம்பட்டி சுந்தரராஜ், குரும்பலூர் செல் வக்குமார், பெரம்பலூர் ஹரிஹரசுதன், துறைமங்கலம் தேவராஜ், சத்திரமனை செல்வ ராஜ், புதுநடுவலூர் சின்னத்தம்பி ஆகியோரென 4வட்டாரங்களில் இருந்து 40பேர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாக்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்டு, சாகுபடிக்கான வழிமுறைகள், வேளாண் மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள், நவீன யுக்திகள், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியுதவிகள், உற்பத்திப் பொருளை தரம்பிரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட சாகுபடி யுக்திகளை நேரில் கண்டறிந்தும், கேட்டறிந்தும், குறிப்பெடுத்தும் வரவுள்ளனர். இவர்க ளுக்கான போக்குவரத்து செலவுகளை வேளாண்மைத்துறையே மேற்கொண்டு வழங்கி யுள்ளது.
பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளைக் கொண்டு, வட்டாரம் வாரியாக அனைத்து விவசாயிகளுக்கும் தாங்கள் கேட்டறிந்த, கண்டறிந்த வடஇந்திய, தென் னிந்திய சாகுபடித் தொழில் நுட்பங்களை விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்படுமென வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினகரன்.

Tuesday, 11 February 2014


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரூப் 2 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,229 உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பானது புதன்கிழமை (பிப். 12) காலை 10 முதல், அனைத்து நாள்களிலும் தேர்வு முடியும் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டப் படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 150 நபர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் அரசு பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி வகுப்பானது அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற அரசு பணியாளர்களை பயிற்றுநர்களாக கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர்  9842196910 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி

Monday, 10 February 2014

vkalathur வ.களத்தூர் கிராமம் திரு.பழனிச்சாமி அவர்களின் மகள் திருமண விழா  9 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.




பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மின் மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.

நன்றி-தினமணி

Sunday, 9 February 2014


 தலபெருமை-

சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு, இவளது அக்கா செல்லியம்மன் சன்னதியிலிருந்து இரண்டு குதிரைகளில் சக்தியை அழைத்து வருவார்கள். அதற்கு முன்பே யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவே திருவிழா ஆரம்பம் என்பதற்கு முக்கிய அறிவிப்பு. இதன்பிறகு காப்பு கட்டி எல்லா பிரிவினரும் வந்து கலந்து கொள்வர். திருவிழா ஆரம்பம் முதல் 15 நாட்கள் வரை நடைபெறும் ஒவ்வொரு நாளும் சக்தி அழைத்து வரும்போதே ஊர் எல்லைகளில், எல்லைக்கு ஒரு ஆட்டுக்கடா வீதம் பலிகொடுப்பார்கள். அப்படி பலி கொடுத்த ஆட்டு ரத்தத்தைப் பிடித்து துணியில் மூடி கட்டி வைத்திருப்பார்கள். 15 நாட்கள் கடந்த பிறகு அதை எடுத்து ஊர் எல்லையில் வைத்து சட்டியை உடைப்பார்கள். அப்போதும் அந்த ஆட்டு ரத்தம் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் அம்மன் இவள்

தலவரலாறு-

முற்காலத்தில் கொல்லி மலையில் இந்த ஏழு சகோதரிகளும் துஷ்ட தெய்வங்களாக இருந்துள்ளனர். அப்பகுதி மக்கள் இரவானால் பயந்து நடுங்குவார்களாம். இரவில் கும்பலாக கும்மியடிப்பது, பாடுவது, ஆடுவது என இவர்கள் பல அமர்க்களமாக இருந்துள்ளனர். இவர்களால் நமக்கு நிம்மதி போச்சு; பயந்து பயந்து எத்தனை காலம்தான் இப்படி வாழ்வது என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்து, ஒருநாள் பகல் பொழுதில் இந்த ஏழு அம்மன்களையும் தனித்தனியே கூடைகளில் வைத்து, அப்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் வந்த வெள்ளத்தில் அந்தக் கூடைகளை வைத்து அனுப்பிவிட்டனர். அப்படி மிதக்கவிடப்பட்ட இத்தெய்வங்கள் பெரம்பலூர் நடுவில் மூத்தவளான செல்லியம்மனும்,ஊருக்கு மேற்கில் அரணாரை பகுதியில் நீலியம்மனும், ஏரிக்கரையோரம் வெள்ளம் தாங்கியம்மனும், ஊருக்கு கிழக்கில் ஆலந்துறையம்மனும், வடக்கில் திருமங்கையம்மனும், லாடபுரத்தில் திரவுபதியம்மனும், நொச்சியத்தில் பூவாடையம்மனும் கரை ஒதுங்கி, அங்கேயே கோயில் கொண்டு, தங்கள் கோபதாபங்களை எல்லாம் விட்டுக் குளிர்ந்து, பக்தர்களின் மனதையும் குளிரவைத்து, அவர்களுக்கு எல்லையம்மன்களாக விளங்கி பலவிதமான நிகழ்வுகளை நடத்திக்காட்டி பெரும் புகழ் பெற்றுள்ளனர்.

இந்த ஏழுபேரில் வெள்ளம் தாங்கியம்மன் கோபக்கனல் கொண்டவள். இவள் இங்குள்ள ஏரியின் கீழ்ப்பகுதிக் கரையோரம் வந்து ஒதுங்கியதால், அதே இடத்தில் வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் பெரு மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளம். பெரம்பலூர் ஏரி நிரம்பி விட்டது. எப்போது வேண்டுமானாலும் கரை உடைந்து ஊரே நாசமாகும் அபாயம். மக்கள் அம்மனிடம் அருள் கேட்டனர். அப்போது அருள் வந்து சாமியாடிய பெண்ணோ, நிறைமாத கர்ப்பிணியைப் பலி கொடுக்க வேண்டும் என்று சொல்ல, மக்கள் மிரண்டு போனார்கள். ஆனாலும் என்ன செய்வது? ஊர் பெரியவர்களின் பார்வை கோயில் பூசாரிமீது விழுந்தது. பூசாரி மிரண்டு போனார். காரணம், பூசாரியின் மகள் முதல் பிரசவத்திற்கு வந்து தங்கியிருந்தாள். பூசாரிக்கும் அவரைச் சார்ந்த பங்காளிகளுக்கும் விஷயம் புரிந்தது. விபரீதம் நிகழாமல் எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்தார்கள். மறுநாள் காலை பூசாரியும் அவரைச் சார்ந்த உறவுக் குடும்பங்கள் அத்தனை பேரும் தலைப்பிரசவ மகளோடு இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். விடிந்ததும் விஷயமறிந்த ஊர் மக்கள், வேறு வழியின்றி தாங்களும் ஊரைக் காலி செய்தனர். ஏரிக்கரை உடைந்து வெள்ளமாக ஓடியது. எப்படியோ உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் கோயில் திறக்கப்படவில்லை. இதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கோயில் பூசாரி குடும்பங்களை மீண்டும் அழைத்து வருவதற்குத் தேடிப்போனார்கள். தஞ்சை மாவட்டம், வல்லம் பகுதியில் குடியேறியிருந்த அவர்களைக் கண்டு, தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர்களோ, இந்த ஊரே எங்களுக்குப் பிடித்து விட்டது. இனிமேல் பூசாரிப் பணிக்கு வேறு நபர்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்றனர். வேறு வழியின்றி இவர்களும் திரும்பி வந்துவிட்டனர். ஆனாலும் அவ்வப்போது இந்த அம்மனை வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதன்பிறகு வெள்ளம் தாங்கியம்மன் அருள் வாக்குமூலம், என் கோபம் தணிய ஏரிக்கு நடுவிலே கோயில் கொள்கிறேன் என்று சொல்ல, அதன்படியே எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் கோயில் அமைக்கப்பட்டு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.

அதிசயத்தின் அடிப்படையில்:  

இவ்வூரில் காப்பு கட்டி திருவிழா ஆரம்பிக்கும் முன்பே நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு


நேர்த்திக்கடன்-

வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பட்டு சார்த்தி, அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 

பொதுதகவல்-
இங்குள்ள அம்மனுக்கு காவலாக  இரண்டு குதிரைக்கு நடுவே புலி வாகனத்தில் அமர்ந்துள்ளார் புலிமுத்தையா.


நன்றி-http://temple.dinamalar.com/New.php?id=1904



சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உடன்பாடு நிலுவையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் நலனுக்கு எதிரான வங்கி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வெளிநாட்டு வங்கிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வங்கிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஊதிய உயர்வை 5 சதவீதம் அதிகரித்து 9.5 சதவீதம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி மாதம் 0.5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. 30 சதவீதம் ஊதிய உயர்வு வலியுறுத்தி வரும் வங்கிகள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளையும், நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2 நாள் வேலை நிறுத்தத்தில் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். வேலை நிறுத்தம் குறித்து இந்திய வங்கி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த வங்கி யூனியன்களில் அங்கம் வகிக்கும் ஊழியர்களின் ஏஐபிஇஏ, என்சிபிஇ, ஐஎன்பிஇஎப், என்ஓபி டபிள்யு.

பிஇஎப்ஐ ஆகிய 5 யூனியன்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஏஐபிஓசி, ஐஎன்பிஓசி, எஐபிஒஏ, என்ஒபிசி ஆகிய நான்கு கூட்டமைப்புகள் ஆகியவை ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்து நாளை மற்றும் 11ம் தேதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது. வங்கிகள் குழுமம் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. ஒரு வேளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் மேற்கூறிய 2 தினங்களில் வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக ஏடிஎம்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்.
புதுடில்லி : காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ரயில் டிக்கெட்கள் உறுதியானதும், சம்பந்தப்பட்ட பயணிக்கு தானாக எஸ்.எம்.எஸ்., சேவையை ரயில்வே நிர்வாகம் துவக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி-தினமலர்.

Saturday, 8 February 2014



பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், சேலைகளில் வேலைப்பாடு செய்ய பெண்களுக்கான இலவசப் பயிற்சி பெறலாம். இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 12 முதல் சேலைகளில் வேலைப்பாடு பயிற்சி பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி.  கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி. சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்)
ஆத்தூர் சாலையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.


தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் அளிக்க வருபவர்களை பொதுமக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பாமகவின் மகளிரணி அரசியல் எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிரணி செயலர் செல்வி செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் மேலும் பேசியது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஒரு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள்.
பாமகவினர் மீது மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது, ஆவதும் பெண்ணாலே; ஆவதெல்லாம் பெண்ணாலே. அழிவது ஆண்களாலே. படைக்கும் ஆற்றல் பெண்களுக்குதான் உள்ளது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதிவைத்து மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.  பணக்காரர்களின் குழந்தைகளின் கிடைக்கும் கல்வி ஏழைகளின் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.  குன்னம் பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜே. குரு, மாநில துணைச் செயலர் பாலு, பெரம்பலூர் மாவட்டச் செயலர் செந்தில்குமார், அரியலூர் மாவட்டச் செயலர் வைத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்

 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் அமைந்துள்ளது கேணிக்கரை காவல் நிலையம். இந்தக் காவல்நிலையம் மீது 02/02/2014 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய வன்முறைத் தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குக் காரணமென்ன? இந்தக் காவல்நிலையத்திற்கு எதிரில்தான் காவலர் குடியிருப்பு மற்றும் காவலர் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது!


ramanathapuram kenikarai policestation
சில நாட்களுக்கு முன் இந்த இராமநாதபுரத்தின் மாவட்ட ஆட்சியர் திரு நந்தகுமார் அவர்கள், இந்து மாணவர்கள் ரட்சை, காப்புக் கயிறு, செந்தூரம் போன்ற இந்துமதச் சின்னங்களை பள்ளிகளுக்கு அணிந்து வர தடை விதித்தார். இது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த செய்தியின் இணைப்பு இதோ: 

இப்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வந்த பயங்கரவாதத்திற்கு அடிப்பணிந்து, அரசு அதிகாரிகளே துணைப்போனதின் விளைவாக இன்று இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்நிலையத்தைத் தாக்கி காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி முன்னணித் தமிழ் நாளிதழ்களான தினமலர், தினமணி, தினத்தந்தியில் பிரசூரிக்கப்பட்டன. இதை, செய்தி விமர்சகர் திரு.நம்பிநாராயணன் அவர்கள் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் கவனத்திற்குக் கொண்டுவர, அப்பகுதியில் வசிக்கும் திரு.சுதாகர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். திரு. சுதாகர் அவர்கள் அங்கு நடந்த சம்பவத்தை பின் வருமாறு விவரித்தார்

இந்த சம்பவம் மோட்டார் சைக்கிளைத் தெருவில் வேகமாக ஒட்டுவது, மற்றும் இருசக்கரவாகனத்தில் பயங்கர ஒலி எழுப்பும் ஹாரன் அடிப்பதை மையமாகக் கொண்டு தொடங்கியது. ஷேக் என்பவர் தனது இருசக்கரவாகனத்தில் மிக அதிவேகமாக, அடிக்கடி புளியக்காரத் தெருவை கடந்து சென்றுள்ளார். இதை புளியக்காரத் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இருவர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்கள். இச்சம்பவம் நடந்த இரண்டாம் நாள் அதாவது 2/2/2014 அன்று மணிகண்டனையும் மற்றவரையும் தாக்கும் நோக்கத்துடன் ஷேக் ஒரு ஐந்து ஆறு பேரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே சமயத்தில் மணிகண்டன் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் இருந்துள்ளார். ஷேக் மற்றும் அவருடன் வந்தவர்கள் மணிகண்டனை வாளால் காலில் தாக்கினர். இதைத் தடுக்க முற்பட்ட மணிகண்டனின் கூட்டாளிகளையும், ஷேக்குடன் வந்த முஸ்லீம்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்து மக்கள் கூட்டம் கூடியவுடன், ஷேக் குழுவினர் தப்பிச்சென்று 1000 பேருக்கு மேல் அழைத்துக் கொண்டு வந்தார்கள். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்து, ஷேக் மற்றும் அவர் குழுவினரை கைது செய்ய முயலும்போது அவர்களை கைது செய்ய விடாமல் முஸ்லீம்கள் தடுத்தார்கள். மேலும், அவர்கள் போலீஸ் வண்டியை அடித்து நொறுக்கிவிடுவோம், கொளுத்திவிடுவோம் முடிந்தால் எங்களைக் கைது செய்து பார் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகளை மிரட்டினர். போலீஸ் அதிகாரிகள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, அவ்விருவரை விரட்டி சென்று பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு செல்வதற்குள், 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், இவர்கள் போலீஸ் அதிகாரிகளை தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதோடு, காவல்நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்தக் கலவரச் சூழலை பயன்படுத்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷேக்கும் அவன் கூட்டாளியும் தப்பமுயன்றனர். அதை தடுத்து நிறுத்த சென்ற உதவி ஆய்வாளர். ஜெயபாலை முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கினர். இச்சம்பவமறிந்த மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) திரு. வெள்ளத்துரை, விரைந்து சென்று, போலீசாரைக் காப்பாற்றி, தாக்குதலில் ஈடுபட்ட ஏழு இஸ்லாமிய வெறியர்களைக் கைதுச் செய்தார்.

இந்தச் சம்பவத்தை பத்திரிகைகள் பலவிதமாக வெளியிட்டுள்ளன.

கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உதவி ஆய்வாளர் ஜெயபால் புகாரை ஏற்று, ஆய்வாளர் கிருஷ்ணகுமார் , பாசிப்பட்டறை தெரு இர்ஷன், அகமது அலி, மை கொல்லர் தெரு முகமது அலி, பாம்பூரணி முகமது ரியாஸ், தெற்குதரவை தாரிக்கான், பரமக்குடி சிக்கந்தர் அலி, வாணி சகுபர் சாதிக் ஆகிய ஏழுபேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இன்னும் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த ஏழு நபர்களும், சம்பவம் நடந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரமக்குடி, வாணி, பாம்பூரணி, புதுமடம் போன்ற வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள், அடையாளம் தெரியாமல் இங்குவந்து கலவரம் செய்துவிட்டுப் போகிறார்கள். இதற்கு முன்பு நடந்த பிரச்சனைகளின் போதும் இப்படித்தான் அடையாளம் காணமுடியாதபடி வெளியூர்கார்களைக் கொண்டு உள்ளூர் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் 5, 6 மாதங்களுக்கு முன் கலவரம் நடந்துள்ளது. சின்னக்கடை பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள், ஒரு இந்துவின் வாகனப்பட்டறையில்(workshop) இருந்த 15 வண்டிகளை அடித்து உடைத்தனர். மேலும், இங்குள்ள கண்ணண் கோயிலில் , முஸ்லீகள் இளைஞர்கள் சிறுநீர் கழித்து, கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தினர்.

சிலகாலமாகவே, இராமநாதபுரம், புளியக்காரத் தெருவில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சின்னக்கடைப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வசித்துவரும் முஸ்லீம்கள், இத்தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லீம்களின் வன்முறைக்குப் பயந்த நிர்வாகமும், காவல்துறையும் இக்கலவரங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் திரு.சுதாகர் அவர்கள் நம்மிடையே கூறும் போது, விநாயகர் சதுர்த்தி விழாவின் போது எவ்வித காரணமுமின்றி 17வயது இந்து வாலிபனை காவல் துறையினர் கைது செய்தனர். அது குறித்து காவல்நிலையத்திற்கு சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவரிடம் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் “நீங்களும் முஸ்லீம்கள் போல் 100பேரை அழைத்து வாருங்கள் அப்போது தான் விடுவார்கள்” என்று கூறினார்.

இப்படி 100 பேர், 50 பேர் கூட்டம் கூடினால் அவர்கள் மிரட்டல்களுக்கு அடிபணிந்த காவல்துறையின் கோழைத்தனம், இன்று காவல்நிலையத்தையே தாக்கும் அளவுக்கு முஸ்லீம் பயங்கரவாதம் கோலோச்சிவிட்டது. கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்து மாணவர்களின் மதச் சின்னங்களை அகற்ற ஆணையிட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) அமைப்பினர், கண்ணண் கோவில் அருகே நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை இந்துக்கள் அடித்து உடைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த வண்டி பலகாலமாக பழுதடைந்து ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை என்றார் சுதாகர்.
ambulance small

இந்தச் சம்பவம் எழுப்பும் கேள்விகளென்ன:
  • சட்ட ஒழுங்கு என்பது அப்பாவி இந்துக்களுக்கு மட்டும் தானா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கிடையாதா?
  • இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதபோக்கிற்கு துணை போய் பள்ளிகளில் இந்து மாணவர்கள் அணிந்து வரும் மதச்சின்னங்களுக்கு தடை விதித்த கலெக்டர் திரு. நந்தகுமார் அவர்கள் இச்சம்பவம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
  • ஒரு சட்டவிரோத செயலை தண்டித்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முயலும் போலீஸ்காரர்களுக்கே குற்றவாளி கொலை மிரட்டல் விடுக்கிறான் என்றால் இராமநாதபுரம், தாலிபான் தலைநகரம் ஆகிவிட்டதா?
  • இராமநாதபுரத்தில் போலீஸ்கார்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அப்பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் கதி என்ன?
  • இச்சம்பவம் குறித்து செய்திதாள்களும் தங்கள் நடுநிலைமையை விடுத்து வெவ்வேறு மாதிரியான செய்திகளை வெளியிட்டு உள்ளது என்பது இஸ்லாமிய பயங்கரவாதத்தினுடைய அச்சம் காரணமாகவா? அல்லது பத்திரிக்கைகளும் இந்த ஜிகாதிகளுக்கு துணைபோகிறார்களா?  எப்படி இச்சம்பவத்தை பத்திரிகைகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:
    Dinamalar
    dinamalar
    Dinamani
    dinamani
    Daily Thanthi
    dailythanthi
  • போலிமதச்சார்பின்மை பேசி தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

கேணிக்கரை காவல்நிலைய புகைப்படம் இதோ:
 ramanathapuram kenikarai policestation
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இது போல் பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால் பயங்கரவாதத்தை வேரொடு அறுத்து எறிந்து மக்களின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் உறுதி கொடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளே செயழிலந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைப்பாவையாக செயல்படுவதான். இந் நிலைமை இப்படியே நீடித்தால் இராமநாதபுரம் மாவட்டம் ஒரு தென்காஷ்மீராக மாறிவிடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத்தேவையில்லை. இப்பொழுது நடந்துள்ள இந்த காவல்நிலைய முற்றுகை என்பது பயங்கரவாதிகள் அரசுக்கு விடுத்துள்ள சவால். இந்த சம்பவத்தை ஒரு அபாய ஒலியாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு உடனடியாக தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து செயல்படவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இம் மாதிரியான பயங்கரவாத சம்பவங்களை தடுத்து நிறுத்தி இராமநாதபுரத்தை தாலிபான்களிடமிருந்து மீட்க தமிழக அரசு உடனடியாக ஆவணசெய்யும் என்று நம்புவோமாக!. 

Friday, 7 February 2014

சரவணன்
வ.களத்தூர் கிராமத்தைச்சேர்ந்த நண்பர் சரவணன் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் நான்கில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.


பத்திரிக்கைச் செய்தி 

 வாலிபால் மற்றும் இறகு பந்து போட்டிகளில் முதல்பரிசும், நீளம் மற்றும் உயரம் தாண்டும் போட்டிகளில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவருக்கு நமது வாழ்துக்கள்.
வண்ணராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த E.B ரவி அவர்களின் மகன் சபரி என்கிற சபரிகிருஷ்ணன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்....

இன்று மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்........

சபரியை பிரிந்து வாடும் அக்குடும்பத்தினற்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழந்தஅனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்....

சபரியின் ஆத்மா சாந்த்தியடைய மனமாற வேண்டுகிறோம்.... 





தோற்றம்:19.11.1990 மறைவு:06.02.2014

vannaramboondi.kalathur

Thursday, 6 February 2014



அரசு கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. கருப்பசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த மாத சந்தா தொகையான ரூ. 70 மட்டுமே சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை உறுதி செய்யும் வகையில், ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, பிப்ரவரி மாதம் முதல் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள ரசீது புத்தகத்தை கொண்டு, சந்தாதாரரிடமிருந்து மாதாந்திர சந்தா தொகை  வசூலிக்க வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றாத உள்ளுர் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இணைப்பு
பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும், சந்தா தொகையாக ரூ. 70 மடடும் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள சந்தா தொகையைவிட, கூடுதலாக வசூல் செய்வது அல்லது உரிய ரசீது வழங்க மறுத்தால், பெரம்பலூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியரை 9498002581, அல்லது சென்னை அலுவலகத்தை 044-28221233 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 8-ல் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.  
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் செ. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூர் வட்டம் திருப்பெயர், வேப்பந்தட்டை வட்டம் கை. களத்தூர், குன்னம் வட்டம் பெண்ணக்கோணம், ஆலத்தூர் வட்டம் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பிப். 8-ம் தேதி காலை நடைபெற உள்ளது.இதில், சம்பந்தப்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

நன்றி-தினமணி.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களில் வியாழக்கிழமை (பிப். 6) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2013-14-ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குள்பட்ட ஒகளுர், நன்னை ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட இனாம் அகரம் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல் கிரேடு "ஏ' குவிண்டால் ஒன்றுக்கு, கொள்முதல் விலையாக ரூ. 1,345, ஊக்கத் தொகையாக ரூ. 70 என, மொத்தம் ரூ. 1,415, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ. 1,310, ஊக்கத்தொகையாக ரூ. 80 என மொத்தம் ரூ. 1,360 குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவைடையான நெல்லை விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினமணி.

Wednesday, 5 February 2014

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.சி.யில் இருந்து விஷவாயு கசிந்ததினால் அதை சுவாசித்த தொழிலதிபர் இறந்தார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் தாயார் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையறிந்த அவர் உறவினரும், தொழிலதிபருமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் காந்திலால் (55) துக்கம் விசாரிக்க இரண்டு நாள்களுக்கு முன்பு இங்கு வந்தார். ஏற்கனவே காந்திலால் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததினால், சென்னையில் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார்.
 மோகன்லால் வீட்டில் உள்ள ஒரு ஏ.சி.அறையில் காந்திலால் செவ்வாய்க்கிழமை தூங்கினார். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் அறை கதவு திறக்காததால், மோகன்லால் குடும்பத்தினர் அந்த கதவு பூட்டை உடைத்து திறந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காந்திலாலை மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு காந்திலாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
 இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
 விசாரணையில் ஏ.சி. யில் மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டதினால் ஏற்பட்ட சிறிய தீ விபத்தின் விளைவாக, அதில் இருந்து வந்த விஷவாயுவை காந்திலால் சுவாசித்திருப்பதும், இதில் மூச்சுத் திணறலில் காரணமாக காந்திலால் இறந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.
சென்னை குன்றத்தூரில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு முன் காதலன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 பெரம்பலூர் சின்னகடை வீதியைச் சேர்ந்தவர் இளையராஜா (24). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் தங்கியிருந்து, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இளையராஜாவும், அந்த பெட்ரோல் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த குன்றத்தூர் அருகே உள்ள தெற்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யாயாவும் (21) காதலித்து வந்தாராம்.
 இதற்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, கார்த்திக் என்பவருக்கு சுகன்யாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே சுகன்யாவின் கணவர் கார்த்திக் ஒரு சாலை விபத்தில் 5 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதன் பின்னரும் இளையராஜா, சுகன்யாவை காதலிப்பதாக கூறி வந்தாராம்.
 இதையடுத்து சுகன்யாவின் பெற்றோர் இளையராஜாவுக்கு அவரை திருமணம் செய்து சம்மதம் தெரிவித்தனராம். இதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
 இதனிடையே சுகன்யாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு இளையராஜா பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். மேலும் சுகன்யா, தான் இளையராஜாவை திருமணம் செய்ய முடியாது என கூறிவிட்டாராம்.
 இதனால் மன வெறுப்படைந்த இளையராஜா, செவ்வாய்க்கிழமை இரவு சுகன்யா வீட்டுக்குச் சென்றார். அங்கு சுகன்யாவிடம் சிறிது நேரம் இளையராஜா தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
 பினனர் சுகன்யா வீட்டு முன் வந்த இளையராஜா, தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 அங்கு அவர் சிறிது இறந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.